Sunday, February 4, 2018

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சதியா? கவிஞர் தணிகை

சேலம் மேட்டூர் பயணிகள் ரயிலை நிரந்தரமாக நிறுத்த சதியா? கவிஞர் தணிகை

Related image

வாரம் ஓரிருமுறை பால வேலை நடைபெறுகிறது என்று சொல்லி திடீர் திடீர் என மாலை வேலையில் சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. இதன் பின்னணியில் தனியார் பேருந்து முதலாளிகளின் கை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது...

முதலில் காலையில் 7.30 மணி அளவில் மேட்டூரிலிருந்து சேலம் புறப்பட்டு வந்த ரயிலை 8.50 என நேரம் மாற்றி உருப்படி இல்லாமல் செய்து எந்த கல்லூரி மாணவரும், எந்த அலுவலகம் செல்லும் பயணிகளும் செல்ல முடியாமல் செய்தனர். எனவே அது மிகவும் பயணிகள் குறைவாக செல்ல ஆரம்பித்தது...இதன் பின்னணியில் தனியார் பேருந்து முதலாளிகளின் கை வரிசை மற்றும் அரசு, அரசியல் யாவும் இருந்தன. 8.50 காலையில் செல்ல நேரம் என்றாலும் இந்த ரயில் காலை 9.15 வரை மேட்டூரிலிருந்து புறப்படும் நேரம் என்றாகிவிடுவதால் இது எந்தவகையிலுமே கல்லூரி செல்வாருக்கும், அலுவலகம் செல்வாருக்கும் பயன்படுவதில்லை. ஏன் எனில் இது சேலம் சந்திப்பு அடைவது10.30 மணியிலிருந்து சில நாட்கள் காலை 11 மணி கூட ஆகிவிடுகிறது.

சரி அதைத்தான் விடுங்கள், எம் போன்றோர் மாதாந்திர சீசன் டிக்கட் எடுத்தது காலையில் வீணாகப் போனாலும், மாலை வேளையில் 5.30 என்பார்கள் ஆனால் கோவையிலிருந்து சென்னை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் குறுக்கீடு இதே வழித்தடத்தில் இருப்பதால் இருந்தால் 5.45 மாலை 5.50 அல்லது  6 மணிக்குள்ளாக சேலத்திலிருந்து எடுக்கப்பட்டு மேட்டூரை 7 மணிக்குள் வந்தடைந்து வந்தது.

புதுசாம்பள்ளியில் சிக்னல் அருகே ரயில் மெதுவாக ஊரும்போது, கல்லூரி மாணவர்களும், எம் போன்ற தினசரி செல்வோரும் இறங்கிக் கொள்வது வழக்கம் . ஏன் எனில் மேச்சேரி ரோடு, ஓமலூர் பயணிகள் கூட அதிகம் இல்லாமல் இருந்தாலும் அங்கே நிறுத்தம் உண்டு. ஆனால் இங்கு எப்படியும் குறைந்த பட்சம் 30 முதல் 50 பயணிகள் இருந்தாலும் இங்கு நிறுத்தவே மாட்டேன் எனச் சொல்லி அடம் பிடிக்கிறது ரயில்வே நிர்வாகம்.

இது பற்றி நான் தனிப்பட்ட முறையில் சேலம் கோட்டம், தென்னக ரயில்வே சென்னை, ரெயில்வே மந்திரி, பிரதம மந்திரி, குடியரசுத் தலைவர்  வரை எழுதியும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் மாணவர்கள் கையொப்பம் பெற்று கோரிக்கை மனுவாக அனுப்பியும் ஒரு பயனோ பலனோ இல்லை அவர்கள் ஒரு 30 வினாடி கூட அலுவலக ரீதியாக நிறுத்த மறுப்பதுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்குவது, ஏறுவதும் குற்றம் எனச் சொல்லிக் பதில் கொடுத்துள்ளனர். நல்ல மக்கள் பற்று.


Related image
இந்த ரயிலை காலையில் அலுவலக நேரத்துக்கு கொண்டு சேலம் சென்றடைய விடும்படி நான் பேசிய பேச்சு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மோதும் வேட்பாளர்களும், கணிக்கும் வாக்காளர்களும் என்ற பேச்சரங்கில் முன்னால் மேட்டூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர் பார்த்திபன், பா.ம.க தலைவர் ஜி.கே. மணி  ஆகியோர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டு ஒலி ஒளிபரப்பானது.

அப்படி இந்த பயணிகள் ரயில் உரிய நேரம் மாற்றம் செய்து ஓடும் பட்சத்தில் பயணிகள் சுமார் 10 லிருந்து 20 பேருந்து பயணிகள் எப்படி குறைவாகப் பார்த்தாலும் 500 பேரிலிருந்து 1000 பேர் வரை பயணம் செய்வர் அவர்களை பேருந்துகள் வாட்டி கூட்டத்தில் வதைத்து விடுகின்றன...ஒரு அரசின் கடமை மக்களுக்கு வசதி செய்து தரவேண்டியதுதானே...

பயன் பலன் ஒன்றும் இல்லை.

இப்போது சென்னைக்கு இந்த சேலம் மேட்டூர் ரயிலில் இணைத்து சுமார் 6.30 மணிக்கு வந்து 7.15க்குள் எடுக்க வேண்டிய ரயிலுடன் இரண்டு பெட்டிகள் இணைத்திருந்ததை நிறுத்தி விட்டு அந்த வண்டிக்கு அனுமதிச் சீட்டு பெற்றவர்களை பேருந்தில் ஏற்றி சேலம் வரை அனுப்பி அங்கு சென்னை ரயிலுக்கு ஏற்றி விடுகிறார்கள்...

அது மட்டுமல்லாமல் இரண்டு பெட்டி ஒதுக்கியிருந்த நிலை மாறி 20 அனுமதிச் சீட்டுகள் மட்டுமே கொடுக்கப்படும் என்று அதற்கு மேல் இல்லை என்று நிர்பந்தம் ஏற்படுத்துவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சென்னை ரயிலை இந்த நிலையில் கைவிட்டு விட்டதோடு மட்டுமல்லாமல் சேலம், மேட்டூர்  56103 என்ற எண் கொண்ட ரயிலை தற்காலத்தில் வாரத்தில் சில முறை பால வேலை நடைபெறுகிறது என்ற காரணத்துடன் முன்னறிவிப்பின்றி நிறுத்தி வைத்து விடுகிறார்கள்.

என் போன்றோர் வாங்கிய மாதாந்திர அனுமதிச் சீட்டு விரயத்துக்கு என்ன பதில் சொல்கிறது எனக்க் கேட்டால் விசாரணை மையத்தில் நாங்கள் என்ன சார் செய்ய முடியும்? கமர்சியல் செக்சனில் சொல்லச் சொல்வதை நாங்கள் சொல்கிறோம்...என்கிறார்கள். வில்லை விட்டு அம்பை நொந்து என்ன பயன் > என்ற நிலையில் யாரைக் கேட்பது என்றால் அதற்கு கோட்ட அலுவலகம் வரை சென்றால் மட்டுமே கமர்சியல் பிரிவை சந்திக்க முடியும் அது இருக்கிறது ஒரு மைலுக்கும் அப்பால்,,,அதற்கு போய் விட்டு நாம் வீடு வந்து சேர்வது சுலபமானதாக இல்லை.

மேலும் ஏற்கெனவே நானும் ஒரு வழக்குரைஞரும் சென்றபோது கோட்ட மேலாளரை சந்திக்க விடாமல் பர்சனல் கோரிக்கையை பெற்றுக் கொண்டார், அதன் பின் அவர்கள் சென்னை தெற்கு இரயில்வே அலுவலகத்தை தொடர்பு கொள்ளச் சொல்லி கையைக் காட்டினார்கள் கை காட்டி மரமாக அவ்வளவுதான், அது, டெல்லி வரை செலுத்தப்பட்டு ஒன்றுமில்லாமல் போய் அலைச்சலானதுதான் மிச்சம்.

அது மட்டுமல்லாமல் ஆன்லைன் போர்ட்டலில் ஒரு விண்ணப்பம் செய்ததும் விரயமாகவே போனது...

இப்படியே திட்டமிட்டு சில நாட்கள் நிறுத்தி நிறுத்தி அந்த ரயிலில் வசூல் ஆகவில்லை எனக் காரணம் காட்டி தனியார் பேருந்து முதலாளிகளின் ஆதரவாக மேட்டூர் சேலம் சேலம் மேட்டூர் ரயிலை நிறுத்தி விடுவார்கள் என்ற சந்தேகம் வந்து விட்டது. இதன் பின்னணியில் ஒரு சதி வலை பின்னப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த ரயிலுக்கு நல்ல கூட்டம் வந்து கொண்டிருக்கிறது இந்த பேருந்து கட்டண உயர்வால்....பேருந்தில் மேட்டூர் ஆர். எஸ் பகுதிக்கு 29 ரூபாய். ஆனால் ரயில் கட்டணம் அன்றாடம் 10 ரூபாய்.மாதம் முழுதும் அனுமதிச் சீட்டு பெற 185 ரூபாய்தான்.

ஆனால் இதை எல்லாம் எடுத்து விழுங்கி சாதாரண ஏழை, நடுத்தர மக்களை சுரண்டித் திங்க ஆளும் வர்க்கமும், முதலாளி வர்க்கமும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன.
Image result for salem mettur passanger train at 5.30 pm


மேலும் இந்த இலட்சணத்தில் மேட்டூர் சேலம் இருப்புப் பாதை இரண்டாம் வழித் தடம் வேறு போடப்பட்டுக் கொண்டிருக்கிறது...எனவே நடப்புகள் முரண்பாடாக உள்ளன‌

இந்த நிலையில் சேலம் கோட்ட ரெய்ல்வே நிர்வாகம் உரிய பதிலை அலுவலகரீதியாக அறிவித்து இந்த ரயிலை நம்பிப் பயணிக்கும் எம் போன்ற நடுத்தர வேறு வழியற்ற மக்களுக்கு சரியான நேர்மையான ஆறுதலான பதில் தந்து இந்த சேவையை என்றும் நிறுத்தி விடாமல் தொடர் வேண்டுமாய் இந்தப் பதிவு வலியுறுத்துகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: