Sunday, February 18, 2018

நாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.

நாச்சியார் படை வீரன் இலை வீரா: கவிஞர் தணிகை.

பாலாவின் நாச்சியார்:
___________________‍__‍


Related image


அறம் நயன் தாராவை விட நாச்சியார் ஜோதிகா மிகவும் நன்றாகவே நாச்சியாராக காவல் துறை ஐ.பி.எஸ் ரோலில் பொருத்தமாக பொருந்தி உள்ளார்.

இவானா என்ற பெண்ணை மையப்படுத்திய கதை. அந்த நடிகையும் நடிகை நடித்திருக்கிறார் என்று காட்டாமால் இயல்பாக அந்த கேரக்டரில் பாலா சொல்ல விரும்பிய கதாபாத்திரமாகவே நம்மிடம் நடிப்பை எக்ஸ்போஸ் செய்திருக்கிறார்.

ஜி.வி பிரகாஷ்குமார் ஒட்டவில்லை எனிலும் முயற்சி செய்திருக்கிறார் பாரட்ட வேண்டிய அளவு.

தைரியமாக குடும்பத்தோடு பார்க்கலாம் என்று சொல்லுமளவு நன்றாக வந்திருக்கிறது. தாரை தப்பட்டை என்றெல்லாம் அழுது ஊத்தி விட்டு இப்போது இந்தப் படத்தின் மூலம் மறுபடியும் பாலா எழுந்துள்ளார்.

ஒரு நல்ல போலீஸ் ஆபிசர் நினைத்தால் நல்ல காரியங்களை செய்ய முடியும் என்னும் நம்பிக்கை ஊட்டுகிறார்கள் இந்த சினிமா மூலம்...

அரசிக்கு காத்தவராயன் கணவனாக இருந்த போதும், வேறு யாரோ இந்த வயதுக்கு வராத பெண்ணை கெடுத்திருக்கிறார்கள் அது யாராக இருக்கும் எனத் தேடலை நம்மையும் சேர்த்து செய்ய வைத்து விட்டு கடைசியில் ஒரு சாமியார் வேடதாரி சாமியாரும், அதற்கு ஒரு டாக்டர் உடந்தை என்று சொல்லி குற்றப் பின்னணியைச் சொல்லி அதற்குரிய தீர்வையும் தந்துவிட்ட பாலா ஒரு நிறைவான படத்தை தந்திருப்பதாகவே சொல்லலாம்

அறம், தீரன் அந்த வரிசைக்குப் பிறகு இது ஒரு நல்ல பார்க்கும்படியான படமாக இருக்கிறது அதற்கு ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் இவானா என்ற மூவர் கூட்டணி காரணமாயிருக்கிறது. பாலாவின் முடுக்கத்தில். நூற்றுக்கு 50க்கும் மேல் தாரளமாக கொடுக்கலாம். 16 பிப்ரவரியில் வெளிவந்த இந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தமைக்காக திருப்தியும் மகிழ்வும்.

படை வீரன்:
_____________


Image result for padaiveeran

இந்தப் படம் பிப்ரவரி 2ல் வெளி வந்த படம். என்ன தான் சாதிய வேறுபாடு, பகை, புகை, தீ , கொலை, அடிதடி, இருதரப்பு மோதல் என்பது பழங்காலத்தில் இருந்து வரும் கருப்பொருளாக இருந்தாலும் அது இன்னும் தொடர்வதால் இந்தப் படமும் காலத்துக்குகந்த படமாகவே இருக்கிறது என்பதை எவராலும் மறுத்து விட முடியாது.

மிக நேர்த்தியான கிராமியப் பின் புலம், எல்லாம் தேனியை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுமே. காமிரா நன்றாக கதை சொல்லி இருக்கிறது. வேறு யாருமே கிடைக்காமல் கதாநாயகனாக விஜய் யேசுதாஸ் தேர்வு செய்யப்பட்டு நன்றாகவே கதைக்கு பொருத்தமான படைவீரனாகவே காட்சி அளித்து கதைக்கு வலுவூட்டியிருக்கிறார். அமிர்தா இணை சொல்லிக் கொள்ளுமளவு தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறார்.

பாரதி ராஜா  அவருடைய பழைய கால கிழக்கே போகும் ரயில் படத்தின் மிலிட்டரி விஜயனை நினைவு படுத்துகிறார். அல்லது மண் வாசனை என்று நினைக்கிறேன்...

மற்றபடி தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதியாய் தம்மை நினைத்திருக்கும் கூட்டத்திற்கும் இடையே நிகழும் சாதி வெறிப் போராட்டம், அதனிடையே சொல்லப்படும் முனீஸ்வரன் மலர் காதல் மோதல், கவிதா பாரதியின் சலிக்காத வில்லத்தனம்...கடைசியில் படைவீரன் பிற அலுவல் செய்ய மாட்டான் என்ற பைபிளின் வார்த்தையின் படி தன்னை அழிக்கும் சக்திக்கு இரையாகும் அதே நேரத்தில்  அந்த ஊர்களிடையே மோதல் உருவாக அடி வேராய் இருக்கும் ஊர்த்தலைவன் உயிரையும் எடுத்துக் கொள்கிறான். காதலர் சேர்ந்தபாடில்லை வழக்கப்படியான படத்தில் இருப்பது போல. எல்லா துணைக்கேரக்டர்களும் நன்றாக இரசிக்கும்படியாக இருக்கின்றன. தனா மணி ரத்தினத்தின் உதவி இயக்குனராக இருந்தவர் தனியாக செய்திருக்கிறாராம். பாராட்டலாம்.

பாடல்களும் கேட்கும்படியாக பார்க்கும்படியாகவே இருக்கின்றன.

நூற்றுக்கு 50 வரை தாரளமாகவே கொடுக்கும்படியான பார்க்கும்படியான இந்த காலத்தின் தேவைக்கு ஏற்ற படம்.

Image result for padaiveeran


இலை:

எடுத்திருக்கிறார்கள். கவித்வமாக. ஒரு உயரமான மரத்திலிருந்து தவறி விழும் இலை காற்றில் பயணம் செய்து அதன் நிலம் அல்லது இருப்பிடம் நோக்கி வந்து சேரும் வரை என்ன என்ன நிகழ்தலுக்கு வளைவு சுளிவுகளுக்கு ஆளாகிறது என்ற கற்பனையை மனதில் வைத்து படம் பார்த்தால் இது ஒரு அருமையான அரிய படம். மிகவும் குறைவான நேரத்தில் முடிந்து விடும் படம்.

ஆந்திரத்தின் ஒரு கிராமத்திலிருந்து தெலுங்கு மட்டுமே தெரிந்த சுமார் 12 வயது 13 வயதுப் பெண் வழி தவறி சென்னையின் நகர்ப்புறத்தில் நுழைந்து  அனைவரையும் குமரகுண்டா எக்கட குமரகுண்டா எக்கட? என அனைவரையும் கேட்டு பசியுடன், பிரமிப்புடன் எல்லா கட்டடங்கள், சாலைகள் போக்குவரத்து குப்பை மேடு,  எனப் பிச்சைஎடுத்து, இடையே ஹெச் ஐ வி பாஸிடிவ் தொற்றிய ஒர் பெண் தாயாக கிடைக்க , மேலும் சில சிறுவர்களின் நட்புடன்,  இலை காற்றில் அசைந்தாடிக் கொண்டே பறந்து பயணம் செய்கிறது.


Image result for ilai movie

இடையில் ஒரு கடைக்கார நண்பன் தினமும் ஒரு பன் கொடுக்கிறார், இரவு தூங்க முற்படுகையில் போர்வை எல்லாம் போர்த்தி மனிதாபிமானம் செத்துவிடவில்லை எனக் காட்டுகிறார்கள், மற்ற 2 இடங்களில் பிச்சைக்காரராக இருந்தாலும் பெண்ணுக்கு நேரும் அவலத்திலிருந்து சமூகம் காத்து தடுக்க முடியாது, அவரவரே அவர்வரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அந்த இலை வயதுக்கு வந்து விடுகிறது, துணையாக இருந்த அம்மாப் பிச்சைக்காரி அதான் ஹெச் ஐ வி பாஸிடிவ் உள்ள தாயும் இறந்து விட தனியாகவே உழல்கிறாள்...கடைசியில் அவரது கிராமத்துக்கு சென்று விடுகிறாள் எந்த சேதமும் நிகழாமல்.

மிகச் சிறிய குறும்படம் போன்ற அடர்த்தியான படம். எனக்கு தெலுங்கும் தமிழும் நன்றாகத் தெரிந்ததால் மிகவும் நன்றாக இரசிக்க முடிந்தது. மகனுக்கு கொஞ்சம் தெளிவு படுத்திட வேண்டிய அவசியம் இருந்தது. குமரகுண்டாவிலிருந்து பள்ளிப்பட்டு, புத்தூர் திருப்பதி எல்லாம் பக்கத்து ஊர்கள் தெரியும்  சென்றிருக்கிறேன் என்று அவள் சொல்கிறார்....இந்த போக்கில் ஏன் காவல்துறை எல்லாம் ரெயில்வே காவல்துறை எல்லாம் தொட்டுச் சென்ற போதும் விடை காணவில்லை காணமுடியவில்லை எனக் கதைக்களத்தை தயாரித்தாரைத்தான் சொல்ல வேண்டும். நல்ல படம் அதன் போக்கிலேயே பார்க்க வேண்டும். ஆனால் 90 சதவீதம் பேர் இதை இரசிக்க மாட்டார்கள். பொறுமை இருக்காது. ஆனால் இந்தப் படத்துக்கு ஒரு விருதை ஈட்டும், வெளி நாட்டுப் பட விழாக்களில் கலந்து பொருளும், விருதும், புகழும் ஈட்டும் எல்லாம் தகுதிகளும் உண்டு. இது வழக்கத்துக்கு மாறான வியாபார நோக்கில்லாத படம். இது போன்ற படங்களை சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் போன்றோர் இந்தியாவில் தயாரித்துள்ள தரத்தில் ...இது ஓவியம் போன்ற ஒரு சினிமாப் படம். இதைப் பார்க்க வேண்டும் இரசிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு...நூற்றுக்கு 60.

வீரா:
____

எதற்கிந்த படம் எடுத்தார்கள் என எடுத்தவரைக் கேட்க வேண்டும். கிருஷ்ணா இதே போன்ற படத்தில் நடித்து விரயமாகிக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாகரனும், ஐஸ்வர்யா மோகனும் மிகவும் சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அதே போல இராதா இரவியும் இராமய்யாவும்.
Image result for veera tamil movie


சரண் தீப் ஒரு மாபெரும் வில்லனாக வரும் காலத்தில் உலா வர வாய்ப்பிருக்கிறது. அதற்கு அவர் உயரமும் உடல் வாகும் அடிப்படை.நன்றாக நினைவில் நிற்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment