Tuesday, August 29, 2017

கடவுள் குர்மீத் ராம் ரஹீம் சிங் கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி...அழுதிருக்கிறார் நீதியைப் பார்த்து: கவிஞர் தணிகை.

கடவுள் குர்மீத் ராம் ரஹீம் சிங்  கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி... அழுதிருக்கிறார் நீதியைப் பார்த்து: கவிஞர் தணிகை.கெஞ்சி தண்டனையை குறைக்கச் சொல்லி...

Related image


கடவுள் அழுமாடா நாயே குர்மீத் சிங். அந்த 10 ஆண்டுகள் அதை அடுத்து மறுபடியும் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தாகவேண்டும், அபராதம் கட்ட வேண்டும் என்ற 15 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பை பார்த்த தன்னை கடவுள் என்று சொல்லி அனைவரையும் ஏமாற்றித் திரிந்த நாய் எனக்கு குறைந்த பட்சம் தண்டனை கொடுங்கள் நான் நிறைய முகாம் எல்லாம் நடத்தி மக்களுக்கு சேவை செய்திருக்கிறேன் என்று அழுதிருக்கிறது.

கெட்டவனாயிருந்தாலும் பெட்டையன் இவன் ஆம், நான் செய்தேன் தண்டனையை பெற்றுக் கொள்கிறேன் என்றெல்லாம் சொல்லாத  சொல்ல முடியாமல் இவன் பயந்தாங்கொள்ளித்தனம் வெளிப்பட்டிருக்கிறாது.

இவனுக்கு உலகெங்கும் 350 கிளைகளாம், 5 கோடி பேர் பக்தர்களாம், பின் தொடரும் இரசிகர்களா அடிமைகளா, நல்ல கொடுமைடா சாமி.
பஞ்சாப் காரர்களுக்கு முட்டியில் மூளை என்று ஒரு நக்கல் சொல்லாடல் இருப்பது எவ்வளவு உண்மை? எள்ளளவிலாவது உண்மை இருக்குமா உரசிப் பார்த்தேன்

இவனுக்கு குடும்பம் பிள்ளைகள் எல்லாம் இருக்கின்றன மேல் மருவத்தூர் அம்மாக்கள் போல...ஆனாலும் இவன் நடிகனாக, தயாரிப்பாளனாக, இயக்குனராக, பாடகராக, இசையமைப்பாளராக அடக் கருமமே எல்லாமாக இதை எல்லாம் இரசிக்க ஒரு பெரும் கூட்டம்... தூ...

ஹிட்லர் கூட கடைசியில் பங்கர் என்னும் பதுங்கு குழியில் பயந்து வாழ்ந்து மருந்தை விஷத்தை சாப்பிட்டு உயிரிழந்தான், சதாம் உசேன் மறைந்திருந்து வாழ்ந்து அமெரிக்கர் கையில் மாட்டி தூக்கிலிடப்பட்டான். பின் லேடன் ஏர் ஸ்ட்ரைக் பற்றியும் உடலை கடலில் கடாசியது பற்றியும் உலகே அறியும்.

ஏன் பிரபாகரனின் மரணம் கூட மெச்சத்தகுந்ததாய் இல்லை.

உயிரிகளுக்கு மரணம் ஒரு தவிர்க்க முடியாத முடிவே. இந்த ஏமாற்றுக்காரனை ஏன் கொன்றிருக்க கூடாது? சட்ட ஒழுங்கில் இந்த சரத்து அம்பேத்கார் எழுதவே இல்லையா? இல்லை கறபனை கூட செய்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதி என்ற ஆங்கிலப் பழமொழி மெய்ப்பிக்கப் பட்டிருக்கிறது... இவனது வழக்கும் ஜெ வழக்கும் மிக நீண்ட காலம் இந்த நாட்டில் நடந்த வழக்குகளில் இடம் பெறுகின்றன.

Related image

15 ஆண்டு கழித்து இவன் காமுகன் தான் என்று சொல்லி இருக்கிறது நீதிமன்றம் அப்படியானால் இந்த 15 ஆண்டுகளில் இவன் வாழ்ந்த வாழ்வு தூய்மையானதா? இந்த 15 ஆண்டுகளில் எத்தனை பெண்களை அவர் தம் வாழ்வைக் கெடுத்திருப்பான் அதற்கெல்லாம் தண்டனை இல்லையா? மரணம் கூட இவனை மன்னிக்காது என்னும் போது இவன் தலைமுறை தழைக்கவே வழியின்றி செய்தால் மட்டுமே பூமிக்கு நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment