Tuesday, July 11, 2017

பிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவிஞர் தணிகை

பிக் பாஸ் என நினைத்துக் கொண்டிருக்கும் பதர்கள்: கவிஞர் தணிகை

Related image


தானுண்டு தன் வேலையுண்டு என சேலம் ஜங்ஷன் பிளாட்பாரத்தில் மேட்டூர் ரயில் புறப்பட நேரம் நிறைய இருக்கிறது என நடந்து கொண்டிருந்த என்னை நோக்கி "உள்ளே அமர்ந்து கொண்டிருந்த ஒரு பதர், "எங்கேடா போறே? என்று ஒரு கெட்ட வார்த்தையும் சேர்ந்து திட்டியது பிக் பாஸில் தானுண்டு தன் வேலையுண்டு என எவர் வம்புக்கும் போகாமல் நடந்து கொண்டிருந்த பரணியை மீதமுள்ள 11 பதர்களும் திட்டி வசை பாடி, அவன் பொல்லாப்பை வாங்கிக் கட்டிக் கொண்டு வெளியே அனுப்பியது போல...

பரணி சும்மா விட்டு விட்டார், நானும் சும்மா விட்டு விட்டேன். கடைசியில் அந்த பதர் சுமார் மாலை 5.50 மணிக்கு எங்கள் மேட்டூர் ரயில் புறப்பட்ட உடன் உள் ஏறிக் கொண்டிருந்த என்னிடம், வெளியே இறங்கி ,சார், இந்த ட்ரெயின் எங்கே போகுது? என என்னிடம் கேட்க, நான் மேட்டூர் எனச் சொல்ல, அப்ப கரூர் ட்ரெயின்  அது கேட்க நான், அது போய் ரொம்ப நேரம் ஆகிவிட்டதே என சொல்லிக் கொண்டே எனதிடம் அமர்ந்தேன்.

கரூர் செல்ல வேண்டிய இந்த மது போதைப் பதர் அமைதியாக நடந்து கொண்டிருந்த என்னிடம் வம்பு இழுத்த போதே ஏதோ தவறாகப் பட புத்தர் சொல்லியபடி அது பேசிய பேச்சை அப்படியே எனை நோக்கி பேசிய பேச்சில்லை என வேறு பக்கம் திருப்பி விட்டு, இயற்கையே இவனுக்கு எல்லாம் என்ன பதில் செய்யப்போகிறாய் எனக் கேட்டேன் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே பதில் கிடைத்து விட்டது....

அப்படித்தான் அன்று ஒரு நாள் எனது சக பயணிகளுடன் நான் ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒரு குடிகார நாய் தேவைக்கதிகமாகவே கெட்ட வார்த்தைகளால் வசவு மொழிகளால் சொல்லத் தகாத மொழிகளால் எனது சக பயணிகளிடம் பேசி அதன் பின் வாங்கிக் கட்டிக் கொண்டு வாலை சுருட்டிக் கொண்ட நாயாக படுத்தே மேட்டூர் வந்து சேர்ந்தது கண்ணை கூட முழித்து உலகைப் பார்க்க முடியாமல்...

இப்படித்தான் இந்த கமலின் பிக் பாஸ் சுமார் 4 கோடி பேர் பார்க்கிறார்கள் என்ற பெருமை வேறு. கமலுக்கு இந்த சீரியல் வாழ்வில் பெரும் சறுக்கு, நடிப்பு என்ற கலையில் ஏற்பட்ட சுளுக்கு.

முதலில் வெளியேறிய இளைஞர் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். அதன் பின் இந்தப் பதர்களில் ஜூலியானா என்னும் பதர் இருக்கும் பதர்களுடன் சேர்ந்து கொண்டு  பன்றியுடன் சேர்ந்தால் பசுவும் என்பது போல ஒரு பழமொழி உண்டே அது போலாகிவிட்டது... முதலில் ஜூலியானாவை இந்த    காயத்ரி       ரகுராம் என்னும் பதர் , இந்த எச்சங்களோட எல்லாம்(எச்சில்களோடு எல்லாம்) நான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றதும், நேற்று நான் அப்படித்தான் இருப்பேன், நீ அப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்றதும் பார்க்க சகிக்கலை, முடியலை. ஏன் பார்க்கிறேன் என்கிறீர்களா?

இதைப் பற்றி எல்லாம் எழுதி நம்மை தாழ்வு செய்து கொள்ளக் கூடாது என நிறைய விடயங்கள் பற்றி நான் எழுதுவதில்லை, மோடி, ஜி.எஸ்.டி, பன்னீர், எடப்பாடி, குடியரசுத் தலைவர் தேர்தல், கரு.பழனியப்பன், பிக்பாஸ் இப்படி எதைப்பற்றியுமே எழுதாமல் இருந்தேன் இப்போது எழுதும்படியாகிவிட்டது.\

அந்த கஞ்சா கருப்பு என்னும் காட்டுமிராண்டி எப்படி ஒரு டாக்டர் கட்டிக் கொண்டாரோ? இந்த சினேகன், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நமீதா போன்ற பதர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுகின்றன அயோக்யத்தனமாய், இந்த சக்திவேல் வாசுவும் வையாபுரியும் கூட,,, அந்த ஓவியா, ரைசா, கணேஷ் வெங்கட்ராம், ஆரார் ஆகியவரிடம் கொஞ்சம் மனிதத் தன்மைகள் இருப்பதாக இதுவரை வந்த நாட்கள் மூலம் அறிய முடிந்தது.

இந்தப் பதர்களுடன் கூட சேர்ந்த ஜூலியானா என்ற பதரும் தன்னிலை தன் குணம் விலக்கி அவர்களைப் போலவே பதராய்ப் போய்விட்டதுதான் உண்மை.

மொத்தத்தில் இந்தப் பதர்களை எல்லாம் உண்மையான பதர்கள் என இந்த சீரியல் மூலம் வெளிக் கொணர்ந்ததற்காகத் தான் கமலுக்கு நன்றி சொல்ல வேண்டும் விஜய் டிவிக்கு நன்றி சொல்லக் கூடாது...எல்லாம் வியாபாரம். பார்க்காலாம் இந்த நாதியத்த  தொலைக்காட்சியின் தொடர் எந்தளவு போகிறாது என...

பிக்பாஸ் என கமல் பல்வேறுபட்ட சமூகத்தில் முன்னேறிய பிரபலங்களை வெளிப்படுத்தி நாட்டின் அரசை மாற்ற, அரசியலை மாற்ற ஏதாவது செய்யக் கூடும் அல்லது அந்த பிரபலங்களால் நாட்டின் நல்ல மாதிரிகள் உருவாகும் வண்ணம் நிறைய மாற்றங்கள் உருவாக அந்த தொடர் காரணமாகும் என்றெல்லாம் எதிர்பார்த்தோம், நல்ல தலமை என்றால் அது இப்படிப் பட்டதாக நாட்டுக்கு இருக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து எல்லாம் வெளிப்படும் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அங்கு அந்த  கணேஷ் வெங்கட் ராம் பரவாயில்லை. அவர் கூட பரணி விடயத்தில் ஏதோ ஒரு முறை அவதூறாக பேசியது போல காட்சி பார்த்த நினைவு.

இவளுங்க எல்லாம் மாபெரும் தனி மனிதக் குணாம்சமுடைய அன்னை தெராசா போலவும் பரணி இனி அங்கு இருந்தால் ஒரு இரவில் கூட என்ன என்னவெல்லாம் நடக்குமோ எனப் பேத்தியதுகள்...அதுவும் அந்த குண்டு ஆர்த்தி பேசிடும் விஷத்திற்கு அளவே இல்லை. கணேஷ் போன்ற கணவன் அந்தப் பெண்ணோடு எல்லாம் எப்படி காலம் கழிக்கிறாரோ?

மேலும் இவர்களுக்கு எல்லாம் ரேட் எவ்வளவு? எல்லாமே காசுக்கு  மலம் தின்னும் பன்றிகளாகவே இருப்பதுதான் இந்த தொடரின் வெளிப்பாடு....

இவற்றை பார்க்காமல் இருப்பது  மிக நல்லதே. ஆனால் தமிழகமே இந்த தொடரில் மூழ்கிக் கிடக்கிறதே... கஞ்சா கருப்பு ஆடியபோதே நான் செய்தி ஒளிபரப்புத் துறையில் காயத்ரி ரகுராம் பற்றிய்யும் கஞ்சா கருப்பு பற்றியும் சொல்லி உடனே இந்த தொடரை தடை செய்ய வேண்டும் என எனது பதிவை செய்து விட்டேன்.
Related image


இது போன்று அவ்வப்போது எனது வாழ்வில் நிறைய பதர்களை பார்த்து இருக்கிறேன். பார்த்து வருகிறேன். இதெல்லாம் பூமிக்கு பாரம். அழிந்து பட வேண்டியதுதான்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments:

  1. சரியாகவே சொன்னீர்கள். அற்பமான பதர்களை எல்லாம் வெளிக்காட்டியுள்ளது நிகழ்ச்சி.

    ReplyDelete
  2. இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருப்பதே நல்லது நண்பரே

    ReplyDelete