Thursday, July 20, 2017

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.

பச்சோலைக்கு இல்லை ஒலி (அ) தலைமுறை இடைவெளி: கவிஞர் தணிகை.


Related image


சாகர சங்கமம் அல்லது சலங்கை ஒலியில் கமலஹாசனுக்கு நேர்ந்தது போல எனக்கும் பவர் பாண்டியில் ராஜ் கிரணுக்கு நடப்பது போல எனக்கும் ஆனால் அந்த மதுக்குடியும், காதலும் இதன் கருப்பொருள் இல்லை, 55 வயதுடனான என்னுடன் 18 வயதுகள் போட்டியும் மோதலும் செய்து, அவர் தான் மாஸ் காண்பிக்க வேண்டும், நாம் எல்லாம் காண்பிக்கக் கூடாது , முடியாது என எங்கள் மேட்டூர் பயணிகள் ரயிலில் இன்று ஒரு இளைஞரின் கமென்ட்.

ரயில் அங்கு சிக்னலுக்காக சற்று வேகம் குறைந்து செல்லும்போது நான் முதன் முதலாக கடைசிப் பெட்டியிலிருந்து எங்கள் ஊரில் இறங்கிக் கொண்டிருக்கிறேன் அது என் நிலை. அந்த நிலைக்குத்தான் எத்தனை போட்டிகள், எத்தனை பொறாமைகள், எத்தனை எதிர்மறை எதிரிமறை சிந்தனைகள்...

வேறு எதுவுமே வேண்டாம், இந்த நாட்டின் பழங்குடி ஆதிவாசிகளுக்கு 10 ஆண்டுகள் உழைத்து உடற் பிணிகள் பல பெற்று இன்று மகனை படிக்க வைப்பதற்காக இப்படி ஊசலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறேனே அதில் ஒரு மயிர்க்கால் அளவு இவர்களுக்கு தகுதி இருந்தால் இவர்களும் என்னை போட்டி என நினைக்கலாம்...

இந்த உலகில் ஒவ்வொரு உயிரும், ஒவ்வொரு மனிதருமே தனித் தனி. தனித்தன்மை பெற்றவரே. எவருக்கும் எவருமே போட்டியாளராக இருக்க முடியாது. இந்த சிந்தனையில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னால் எவரையுமே போட்டியாளராக எண்ணி செயல் படவும் முடியாது.

நான் சொல்வதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல் மாறுதல்கள் ஆயிரம் வகையில் தொடர்பு வழி சாதனங்களை வெகு எளிதாக இந்த இளைஞர்க்கு கையில் கொணர்ந்து சேர்த்தி இருக்கலாம், ஆனால் எமது வாழ்வில் இருந்த சுவையில் நூற்றில் ஒரு பங்கு கூட இவருக்கு இல்லை. இவரிடம் எந்த வித தியாக உணர்வும், நேர்மையான சிந்தனையும் இல்லை.

நான் பார்த்தவரை இவர்களுக்கு எல்லாப் பிரிவு சார்ந்த மக்களும் உதவ வேண்டும் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனரே அன்றி இவர்கள் எவருக்குமே எதையும் செய்ய ஆரவமாக இருப்பதாகத் தெரியவில்லை.

நான் இந்த உலகு, நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என்ற அடிப்படையில் ஏற்பட்ட சமூக, கல்வி, பொருளாதார, அரசியல், கலாச்சார, விளையாட்டு சார்ந்த அனைத்து துறைகளையும் சார்ந்தே சொல்கிறேன்.

நிறைய உறவுகளை இழந்து விட்டனர், நிறைய நட்பை இழந்து விட்டனர், நல்ல நல்ல விடயங்களை இழந்து விட்டனர், வெறும் போலித்தனமான கையளவு ஸ்மார்ட் போன் பெட்டி மட்டுமே இவர்களின் வடிகாலாகி விட்டது.

நான் விளையாடிய கில்லி தாண்டல், பச்சைகுதிரை, சூறைப்பந்து, ஒக்காந்தா கை குடுக்கறது, கோலி குண்டுகளின் பல விளையாட்டுகள், கபாடி எனப்படும் சப்பாளாங்க் குடுகுடு சடுகுடு,குச்சியை தள்ளிக் கொண்டே போதல், கண்ணாமூச்சி, நொண்டி, பாண்டியாட்டம், ஓடி விளையாடி அவுட் ஆக்குவது, பம்பரம் விடுதல், பட்டம் விடுதல், காத்தாடி பறக்க விடுதல், காத்தாடிக்காய் சுழட்டி விட்டு காற்றில் அழகு பார்த்தல்,சூட்டுக்காய் தேய்த்து சூடுவைத்து சண்டை செய்து கொள்ளல், பரம பதம், தாயம், வேர்க்குரு ஒருவருக்கொருவர் எண்ணியபடி கிள்ளிக் கொள்ளல் அல்லது கீறி அதை உடைத்து விடுதல்,ஆடு புலி ஆட்டம், வாசல் கூட்டும் வெளக்கமாறு வைத்து கையை மூடி விளையாடுதல்,பல்லாங்குழி,கேட்வில் கொண்டு காய் அடித்தல் ஏன் குருவி காகம் துரத்துதல், ஊஞ்சல் ஆடுதல் ஆட்டுதல், ஸ்கிப்பிங் இப்போது பேர் அப்போது உயரத் தாவி எண்ணிக்கை எண்ணுதல், இன்னும் எத்தனையோ இன்னும் முழுதாக சொல்லி நிறைவு செய்து விட எனக்கு எண்ணமில்லாமல் குறைவாகவே மனக்குறையாகவே இருக்குமளவு எண்ணிறந்த விளையாட்டுகள்...கருக்காட்டம் பழம் சாப்பிடல், வேப்பம்பழம் சாப்பிட்டு கொட்டையை காசுக்கு விற்றல்..
Related image

விளையாட்டுத் துறை ஒன்றுமட்டுமே இங்கு சொல்லி உள்ளேன். இது போல எல்லாத் துறைகளிலும் ஏகப்பட்ட துறைகளிலுமே இப்போது வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாகவே மதுக்குடி இல்லா இளைஞரை பார்ப்பது அரிதாகிவிட்டது. நல்ல பெண்ணுக்கு நல்ல மணமகனும் நல்ல மணமகனுக்கு நல்ல மணப்பெண்ணும் மதுக் குடி இல்லாமல், ஒழுக்க நேறிய நெறிகளுடன் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு துணை சேர்க்க ஆண்டுக்கணக்காய் அலையோ அலை என அலைய வேண்டியதிருக்கிறது. அப்பொதெல்லாம் எங்கு எவர் வீட்டில் காட்டில் செல்லும் வழியில் நீர் கேட்டால் கொடுப்பார்கள் குடிக்கலாம் உடல் நலம் கெடாது...எந்தக் காட்டிலு எந்தப் பண்டமும் விளைச்சலில் சும்மாவே கொடுப்பார்கள் தின்ன,,, இப்போது எந்த விவசாயிடமும் சென்று எதையாவது சும்மா கேட்டுப்பாருங்கள் எனச் சொல்வதே தவறு பெரும் குற்றம், விவசாயம் அவர்களுக்கு சுருக்குக் கயிறாகிவிட்டது.

வரலாறு காணாத அளவு இந்த 50 ஆண்டிலும் காணாத அளவில் மேட்டூர் அணையில் நீர் 24 அடி மட்டுமே இந்த ஆடி மாதம் கரை புரண்டு ஓட வேண்டிய காவிரி நதி காய்ந்து கிடக்கிறது...அப்போது எங்கள் ஊர்களில் வீட்டுக்கொரு குடிநீர்க்கிணறு இருந்தது சில அடிகள் வெட்டினாலே அருமையான நீர் கிடைத்தது, அதில் ஒரு ஆவியிலேயே பருப்பு வெந்துவிடும் என்பார்கள்.. அத்தனையும் பாழ் இன்று நீருக்கு நாட்டுக்கே வழிகாட்டும் எமது காவிரி எங்கள் ஊருக்கே குடி நீர் கொடுக்க போதாமல் தவிக்கிறது...

இப்படி பல மனித இயல் அடிப்படையில்  திருமணம், குடும்பம், மதம், சாதி, பிரிவுகள், மொழி, கலாச்சாரம் எல்லா அடிப்படையிலும் முகம் சிதைந்து போய்விட்டது  எனவே இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல தமிழ் சிந்தனையை எழுதியுள்ளதை பகிர்ந்து கொள்ளக் கூடத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாம் தெரிந்து கொண்டது போல வயது வித்தியாசம் தெரியாமல் மரியாதை தெரியாமல் பேசி உறவின் நல்லுறவை அழித்து வருகிறார்கள்...

எல்லா இலையுமே துளிர் விட்டு, விரிந்து பச்சையாக இருந்தது பழுப்பாகி, காய்ந்து ஒரு நாளில் உதிர்ந்து போகத்தான் வேண்டும். ஆனால் அவைகள் செய்யும் ஆர்ப்பாட்டம் காட்டவே இந்தப் பதிவு...

நான் வீண் பெருமைக்காக எனது செயல்பாட்டு பட்டியலை இங்கு இணைக்கவில்ல...நான் எனது வாழ்நாளில் இதை எல்லாம் நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் செய்திருக்கிறேன். அதில் ஒரு 5 விழுக்காடாவது இவர்கள் செய்து விட்டு என்னோடு போட்டிக்கு வரலாம்...

என்னிடம் மது, புகை, போதை போன்ற எந்த தீய வழக்கமும் இல்லை. இன்னும் என்னால் முடிந்தளவு இந்த நாட்டின் சமுதாய மக்களுக்கு மனமுவந்து பள்ளிப் பிள்ளைகளுக்கும், ஏனைய மாந்தருக்கும் ஒரு நல்ல பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு அரும்பணியாற்றியே வருகிறேன். அவை பற்றி தனியே வைத்துக் கொள்ளலாம்.

எனது தாயை தந்தையின் இறப்புக்க்கும் பின் சுமார் 20 ஆண்டுகள் நல்ல முறையில் கவனித்து அவர்க்கு செய்ய வேண்டிய காரியம் கடமைகளை நல்ல முறையில் செய்து முடித்தும் கூட இந்த ஆண்டுடன் சுமார் 11 ஆண்டு நிறைவடைந்து 12 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 9லிருந்து அடியெடுத்து வைத்திருக்கிறேன்...இந்த தாயும், பெற்றோரும் ஊரும் உலகும் இவரைப் பெற நற்தவம் செய்தே இருக்க வேண்டும் எனப் பேர் விளங்க நல்ல சேவை செய்வதே எனது வாழ்க்கையாகிப் போனது....

நான் பின் சொல்லும் குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு: இந்த நாட்டை நல்ல பாதையில் திருப்ப: அன்பு சகோதர நண்பர் கொ.வேலாயுதம் அவர்களுடன் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்ற அமைப்புகளிலிருந்து எண்ணிறந்த பணிகளை செய்திருக்கிறோம்...அதில் வந்த இணைந்த பிறவிகள் தாம் சசிபெருமாள், சின்ன பையன் போன்ற தியாகிகள் யாவரும்...

எனக்கு இந்த பிறவியில் பெரும் திருப்தி இருக்கிறது. இன்னும் செய்வதில் எல்லாம் பெறும் திருப்தி இருக்கிறது...

நான் இந்த நாட்டின் மாபெரும் சபைகளில் எல்லாம் கூட எனது உரையை நிகழ்த்தி இருக்கிறேன்...எனத் பேச்சு எழுத்து பலருக்கும், நாட்டுக்கும், ஊருக்கும், எனைச் சுற்றி உள்ள அனைவர்க்கும் எப்போதுமே பயன்பட்டே இருந்து வந்திருக்கிறது இனியும் அது பயன்படும்...ஆனால் இந்த சுயநலப்பதர்கள் எல்லாம் என்னுடன் போட்டியிட்டு பேச வருவதுதான் எனக்கு ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது...



கீழே நான் செய்ததில் சில குறிப்பிடத்தக்கதை சுருக்கமாக சொல்லில் வடித்திருக்கிறேன்...படியுங்கள் பாருங்கள்...பின்னர் பார்க்கலாம்...

கவிஞர் தணிகை
கவிஞர் தணிகை என்ற சுப்ரமணியம் தணிகாசலம் காவிரிக்கரை ஓரத்தில் மேட்டூர் நீர்த் தேக்கத்தின் அருகே பிறந்து (Puthu Samballi)

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர்..பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் மதிப்பு மிக்க கடிதத் தொடர்புடன் இணைந்து

இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாய் இருந்த மேதகு.பி.என்.பகவதி அவர்களின் அவையில் பங்கெடுத்துப் பேசி அவருடன் உண்டு மகிழ்ந்து கலந்து அளாவளாவி

11 சிறு நூல்களை தம்மால் முடிந்த அளவு நாட்டுக்கு ஈந்து ஆனால் எனது புத்தகங்கள் படிக்க அல்ல பயன்படுத்த….  ¦¾Õ  ºó¾¢ôÀ¢ø °¡¢ý Ó츢 «¨¼Â¡ÇÁ¡¸ò ¾¢¸Øõ ¦¾öÅ¡ ¾¢Â¡Éô À¢üº¢
¸Õõ ÀĨ¸Â¢ø ¦À¡ý¦Á¡Æ¢¸û ÀøÄ¡ñθǡ¸ ±Ø¾¢ ÅÕõ Ҹؼý ....
 ¯Õš츢 ¯ÕÅ¡¸¢..

தெய்வா பதிப்பகம், தெய்வா ஆலோசனை மையம், தெய்வா தியானப்பயிற்சி மையம் ஆகியவற்றுடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றும் பயிற்சி அளித்தும்

முதல் நூலான மறுபடியும் பூக்கும் உலகின் மிகப் பெரும் நூலகத்தொகுதியான அமெரிக்கன் நூலகக் கூட்டத்தில் வாழ்க்கைக் குறிப்போடு இடம் பெற்று

இந்தியாவின் பழங்குடிகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்களுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் திட்ட அலுவலராக இணையிலா உழைப்பை ஈந்து இந்தியா எங்கும் பல மாநிலங்களுக்கும் சென்று ஊதியமாக உடல் பிணிகள் பல பெற்று இவரின் உழைப்பு மகாத்மா காந்தி, மதர் தெரஸா ஆகியோரின் பணிகளைப் போன்றது என சான்று வழங்கப் பட்டு

நேரு யுவக்கேந்திரா, காந்திய கிராமியப் பல்கலைக்கழகம், பயிற்சி பணி செய்து, காந்திய சிந்தனையில் வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு பெற்று....

வேர்ட்பிரஸ் டாட் காம் வழி 1150 பதிவுகளை மறுபடியும் பூக்கும் தளம் வழிப் பகிர்ந்து அதன் அடையாளமாக மறுபடியும் பூக்கும் சர்வீஸஸ் என சேவை தொடர்ந்து...

இப்போது மறுபடியும் பூக்கும்.பிளாக்ஸ்பாட்,டான் பேஜஸ் டாட் காம், தணிகை ஹைக்கு தளங்களிலும், முக நூல், ட்விட்டர், கூகுள்+ போன்ற சமூக தளங்களிலும் உங்களோடு இணைந்து...
3 கோவில்களை நிர்மாணிக்க அடிப்படைப் பணிகள் செய்து,Tree plantation,A.P.J.Movement etc.

¦¾¡¨Ä측𺢸û, Å¡¦É¡Ä¢ Àò¾¢¡¢¨¸¸û °¼¸í¸Ç¢ý ¦ÅÇ¢îºõ ÀÄÓ¨È ¦ÀüÚ...
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் உங்களுக்கு அது ஆர்வமாக இருந்தால்...

சுயமாக சேவையை விட்டுப் பிரிய நினைத்தாலும் அது வாழ்வின் இறுதி வரை இயற்கையாகவே இணைந்து பின்னிப் பிணைந்து செல்ல வாழ்ந்து

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என வாழ்ந்து...visit:www.marubadiyumpookkum.blogspot.com  www.thanigaihaiku.blogspot.com
www.dawnpages.wordpress.com Having Bible,Quran,Geeta with equal status.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை...

2 comments: