Saturday, May 29, 2021

சுப்ரமணிய சாமியும் எஸ்.வி.சேகரும்: கவிஞர் தணிகை

 

சுப்ரமணிய சாமியும் எஸ்.வி.சேகரும்: கவிஞர் தணிகை



பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மற்றும் விவகாரங்கள் குறித்து சரியான விசாரணை இல்லை எனில் ஆட்சியைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், மெஜாரிட்டி அதிகாமாக எல்லாம் இல்லை நான் நினைத்தால் எனக்கு சட்ட நுணுக்கங்கள் எல்லாம் தெரியும் என்பதால் விசாரணையே நடக்க முடியாமல் செய்து விடுவேன் என்று சு.சாமி என செல்லமாக சுருக்கமாக  பொது வெளியில் அழைக்கப் படும் சுப்ரமணிய சாமி கூறியிருப்பதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

குறை குறைதான் குற்றம் தான் அதை சரியாக விசாரித்து உரிய முறையில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக்  கருத்து இருக்க வழி இல்லை. மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழக அரசை இவர் ஒருவரே கலைத்துவிடுவார் என உணர்ச்சி வசப்பட்டு பேசியிருப்பது இவரது இனத்துவேச வன்மையைக் காட்டுகிறது. எனவே தான் என் போன்றோர் கூட எழுதி பதிவிட வேண்டி இருக்கிறது.

இவர் ஒரு பொருளாதாரப் பேராசிரியர், பெரிய வழக்கறிஞர், பொருளாதார மேதை என்றெல்லாம் சொல்லிக் கொள்வார் ஆனால் இவர் கட்சியிலேயே இவர் நான் நல்ல நிதி மந்திரியாக இருப்பேன் இப்போதிருப்பாரை விட எனச் சொல்லியபோதிலும் இவரை எவரும் அவருடைய கட்சியிலேயே மதிக்கவில்லை.

மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த விவகாரத்தைப் பற்றியும் செய்திகள் உள்ளன. அதற்காக அரசைக் கலைத்து விட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசை கலைப்பதாக பேசுவார் அரசியல் சாசனம், அரசியல் சட்டம் எல்லாம் தெரிந்தவராக நினைத்துக் கொண்டாலும் இது வார்த்தைப் போருக்கான வீண் வார்த்தைகள் ஆனால் வன்மம் வளர்க்கும் வார்த்தைகள்.

 


இவரது கட்சியின் ஹெச் ராசா, எஸ்.வி.சேகர் போன்றோரை மட்டும் எப்படி சட்டபூர்வமாக அணுகி கைது செய்யவே முடியவில்லை அப்போதெல்லாம் இந்த சு.சாமி எங்கு போனார் ? எங்கிருந்தார்? ஏன் கமல்ஹாசன் கூட இதை இனவாரியாகப் பார்க்க வேண்டாம் என்று கண்ணியமாகச் சொல்லியிருப்பதாகச் செய்திகள் இருக்கின்றன

உள்ளூர தி.மு. பிரமுகரின் மகனுக்கு இவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நெருக்கமான உறவாம் , அவருக்கு படிக்க இடம் இல்லை என்ற சொன்ன காரணமும் இதில் உள்ளது எனவேதான் இந்தப் பள்ளியை தாங்களே எடுத்துக் கொண்டு பழி வாங்க நினைக்கிறார்கள் என ஒரு செய்தியும் வந்துள்ளது.

தினமலர் தி.மு.கவுக்கு எதிராக எழுதுவதும், தினகரன் பா.. அல்லது ஆத்திகம் சார்ந்த மக்களுக்கு எதிராக எழுதுவதும் உள்ளது . இரண்டையும் படித்தால் இரண்டின் வண்டவாளங்களும் வெளிச்சமாகும். எஸ்.வி.சேகர் 20 தொகுதி பா.. சட்டமன்றத் தேர்தலில் நின்று 260 கோடி செலவளித்ததாகவும் அதன் கணக்கு வழக்குகள் எங்கே என்று சமர்ப்பித்துவிட்டீர்களா என வெளிப்படையாகவே கேட்டு வருவதாகவும் தினகரனில் செய்தி

வாட்ஸ் ஆப் செய்தியில் உண்மையோ பொய்யோ: கன்னியாகுமரி பா.. வேட்பாளர் இப்போதைய சட்டமன்ற உறுப்பினர் ...தி.மு. அப்போது ஆளும் கட்சியோ, பா.. மத்திய ஆளும் கட்சியோ இந்த இரண்டு கூட்டணி கட்சிகளுமே தேர்தல் செலவுக்கு என எந்த நிதியும் தரவில்லை, வேட்பாளராகநியமித்ததோடு சரி, நான் அழுக்கு வேட்டியுடன் சரியான உணவின்றி வாக்களப் பெருமக்களை அணுகி ஆதரவு கேட்டு வந்தேன். வியப்பு என்ன எனில் நான் எங்கே வெல்லப் போகிறேன் என நினைத்தேன் ஆனால் வாக்காளப் பெருமக்கள் என்னை வெற்றி பெறச் செய்துவிட்டனர் என வியப்புக்குரிய செய்தியை தெரிவித்ததாக படித்தேன்.

 அப்படி ஆனால் அந்த தொகுதிக்கு கொடுக்கப் பட வேண்டிய கொடுக்கப் பட்டிருக்க வேண்டிய‌ 13 கோடி ரூபாய் தேர்தல் நிதி எவரிடம் சென்றது என்பது போன்ற கேள்விகள் நிறைய எழுகின்றன....தேர்தல் ஆணைய ஆணைப்படி ஒரு சட்ட மன்றத்திற்கு 30.8 இலட்சம் ரூபாய்கள் மட்டுமே அதிகபட்சம் செலவளிக்க வேண்டும் என்பதற்கு மாறாக அவரது பொறுப்பான கட்சி பிரமுகரே 13 கோடி வீதம் 20 தொகுதிக்கும் சேர்த்து 260 கோடி செலவுக்கு தரப்பட்டதே கணக்கு என்ன எனக் கேட்டிருப்பதிலிருந்து தேர்தல் ஆணையம், மத்திய அரசு, போன்றவை என்ன செய்தன? சட்டபூர்வமான நடவடிக்கைகளை சு.சாமி எடுக்க வேண்டுமே? எடுப்பாரா? இந்த சட்ட மேதை? அப்படியே எடுத்து அரசைக் கவிழ்த்தாலும் 20 தொகுதியில் ...தி.மு.கவிடம் கெஞ்சி 4 தொகுதியில் வெற்று பெற்றுள்ள அந்தக கட்சியின் 4 தொகுதியும் தமிழகத்தில் போய்விடுமே அதற்கும் அவர்கள் தயாராகத் தானே இருந்தாக வேண்டும்? இதுதான் எனக்கு ஒரு கண் போனால் அவருக்கு இருகண்ணும் போக வேண்டும் என்ற நியதியோ... நாங்கள் வெல்ல முடியவில்லை எனவே எவருமே வெற்றி பெற்றிருக்கக் கூடாது  அனைவரின் பதவியும் போகட்டும் ஆட்சியும் இல்லாமல் போகட்டும் என்னே ஒரு நல்ல எண்ணம் பாருங்கள்...

பள்ளிகளை அரசுடைமையாக்கி விடுவது சிறந்த தீர்வாக இருக்கும்.

தனியார் பள்ளிகளை இல்லாமல் செய்வது நிறைய நன்மை தரும்.

இனியாவது தேர்தலில் அரசு, மற்றும் தேர்தல் ஆணையம் மட்டுமே செலவு செய்ய வேண்டும் அரசியல் கட்சிகள் செலவு செய்வதை அனுமதிக்கக் கூடாது என்பது போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் துவங்கப் பட வேண்டும். அது ஓரளவு பலனளிக்கும் தேர்தல் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக முறைகளின் வளர்ச்சியின் போக்குக்கு.

இதற்கு எல்லாம் சட்ட மேதைகள் உதவ வேண்டும் சு.சாமி போன்ற சட்டமாண்பு தெரிந்தவர்களே கூட உதவலாம். நாட்டில் நல்ல ஜனநாயகம் மலர,வளர வழிவகுக்க வேண்டும் என்று சொல்லி இரு கரம் கூப்பி வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இன்றைய நாட்டு நடப்பு: பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும்:: கவிஞர்...

இன்றைய நாட்டு நடப்பு: கவிஞர் தணிகை பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும்
இன்றைய நாட்டு நடப்பு: கவிஞர் தணிகை பள்ளிக் கல்வியும் விளையாட்டும் அரசியலும் #சுசீல்குமார் #விஜேந்திர சிங் #மேரி கோம்ஸ்' #செய்னா #சு.சாமி #ஹெச்.ராசா #எஸ்.வி.சேகர் #கன்னியாகுமரி #பள்ளிகள் #பத்மா சேஷாத்ரி #மஹரிஷி வித்யாலயா #விளையாட்டு #அரசியல் மறுபடியும் பூக்கும்

Friday, May 28, 2021

மனிதரில் இத்தனை நிறங்களா குணங்களா? மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:

மனிதரில் இத்தனை நிறங்களா குணங்களா?
மறுபடியும் பூக்கும் தணிகை மணியம்:

#பாரதி
#மிளகாய்
#சுவை
#இளநீர்
#குழந்தை
#மனிதம்
#வேறுபாடு
#ஐம்பூதம்
#காற்று
#ஆக்ஸிஜன்
#விதைப்பது
#முளை
மறுபடியும் பூக்கும் 
கவிஞர் தணிகை

Thursday, May 27, 2021

கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போல‌ நடிக்கவும் மாட்டேன்: கார்த்திக்

 சிவகுமார் கார்த்திக்: கவிஞர் தணிகை



திரை உலக மார்க்கண்டேயன் என்று புகழப் பெற்ற சிவகுமாரின் இளைய மகன் கார்த்திக் பல ஆண்டாக திரைத்துறையில் இருந்தாலும் 20 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார் என்பதற்காக இந்த பதிவு அல்ல.

அவர் கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போன்ற காட்சிகள் இருந்தால் அந்தப் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியதான செய்திகளைப் படிக்க நேர்ந்தது.இவர் அமெரிக்காவில் நியூயார்க்கில் தொழில் பொறியியல் பட்டப் படிப்பு படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாரட்டத் தக்கது

தந்தையைப் போல பிள்ளை எல்லா நலமும் பெற்று நீடுழி வாழட்டும்

வாழ்த்துகள் கார்த்திக் சிவகுமார் குலம் தழைக்கட்டும்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பது போல‌ நடிக்கவும் மாட்டேன்: கார்த்திக்

நேசமுடன் ஒரு நினைவதுவாகி...எல்லோரும் இன்புற்றிருக்க...

படைப்பதனால் நானும் கூட இறைவன்: கவிஞர் தணிகை

#கண்ணதாசன்
#வாழ்க்கை சரிதம்
#சுய வாழ்க்கை சரிதம்
#முரண்பாடு
#உண்மை
#சுடும்
#பாலியல்
#அளவுக்கு மிஞ்சினால்
#பயன்பாடு
#வாழ்க்கை மாற்றம்
#ஆசிரியர்
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

அளவுக்கு மிஞ்சினால்...
உண்மை சுடும்

நேசமுடன் ஒரு நினைவதுவாகி...எல்லோரும் இன்புற்றிருக்க...

Wednesday, May 26, 2021

ஒரு நூல் ஓர் வாழ்வு: கவிஞர் தணிகை

நூல்கள் சேர்த்து வைக்கும்: கவிஞர் தணிகை

#நார்
#வாழை
#நூல் 
#ஆடை
#ஏடுகள்
#மனிதம்
#ஒரு நூல்
#ஒர் வாழ்வு
#பகத்
#வீடு
#ஓய்வு
#மறுபடியும் பூக்கும்
#கவிஞர் தணிகை

ஒரு நூல் ஓர் வாழ்வு: கவிஞர் தணிகை

Tuesday, May 25, 2021

வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை ...ஒரு நூல்


வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை #ஒரு நூல்
வாழ்ந்தவர் கோடி: கவிஞர் தணிகை #ஒரு நூல் #ஆண்டவர் #ஆன்றோர் #சான்றோர் #கல்வி #கரையில‌ #கற்பவர் #நாள் சில‌ #மக்களின் #மனதில் #இடம் பெற‌ #நூல் விடு #பட்டம் #பொட்டலம் #திண்மை #மறுபடியும் பூக்கும் #கவிஞர் தணிகை