Tuesday, November 21, 2023

ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை

 ரோஜாக்களுடன் நான்: கவிஞர் தணிகை





கார்த்திகை 2 நவம்பர் 18 வ.உ.சி. கப்பலோட்டிய தமிழர் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அந்த நாள் 38 ஆவது நினைவு நாள். இருவருக்கும் மற்றொரு ஒற்றுமை இவர் 65 வயது அவர் 64 வயது. இவரும் அவரும் பாட்டாளிகள். ஒருவர் செக்கிழுத்தவர் மற்றவர் 4 விசைத்தறி இரவும் பகலும் ஆங்கிலக் கம்பெனியில் பார்த்து ஊதியம் ஈட்டி 10 குடும்பங்களை உருவாக்கியவர். அதெல்லாம் சரி.

வழக்கம் போல 3 ரோஜா மாலைகள் வாங்கி வர விரும்பினேன். அய்யப்பன் கோவில் பருவ காலம் என்றார்கள், சஷ்டி என்றார்கள் பூக்கடைகளில் பூக்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு பெண்மணி பூ இல்லை என்றார். மற்றொருவர் இருப்பதை தரலாமே என்றதற்கு அய்யப்பனுக்கு மாலையில் வந்து கேட்கும்போது வேண்டும் என்றார், அதே இடத்தில் மற்றொரு பெண் ஒரு மாலை ஒரு முழம் அளவு ரூ. 300 என்றார் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி பூ இல்லையென்றால் என்ன என்ற நிலைக்கு வந்து நடக்க ஆரம்பித்து விட்டேன்.

மற்ற கடைகளில் எல்லாம் நேற்றைய பூக்கள் மூலம் கட்டிய மாலைகள் வாடிக் கொண்டிருந்ததே ரூ. 150 என வாங்கி விடலாமே என்றும் யத்தனிப்பு. ஆனால் ஒரு கடையில் இருந்தவர் இரண்டு இங்கு வாங்கிக் கொள்ளுங்கள் இன்னொன்று  எனக்கு கட்டத் தெரியாது. கடைக்கார மருத்துவமனைக்கு சென்றுள்ளார் வர நேரமாகும் என்றார். அவரை செல்பேசியில் வரச் சொன்னேன். வருவதாக சொல்லியதால் அரை மணி இருக்கும் காத்திருந்த நேரம் வரவில்லை. பிறகு அந்த வேடிக்கையாகப் பேசிய அந்த பக்கத்து கடைக்காரரே இந்த இரண்டு மாலையை வைத்துக் கொள்ளுங்கள் பக்கத்தில் இருந்து இன்னொரு மாலையை வாங்கி வந்து விடுங்கள் என்றார். என்ன தண்ணி தெளித்துள்ளீரே என ஒரு வாடிக்கையாளர் கேட்டதற்கு என்னை 7 ஆம் வகுப்பு படிக்கும்போதே எனது வீட்டில் தண்ணி தெளிச்சு விட்டார்கள் என்று பதில் சொல்கையில் அந்த நபரிடம் இருந்த நேர்மையும் வேடிக்கைப் பேச்சும் வெளிப்பட்டது. அவர் அந்தப்  பூக்களுக்கு தண்ணீர் தெளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

அவரின் சொல்படி அருகாமையில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்று அங்கும் மாட்டி இருந்த மாலையின் விலை கேட்டேன். அதுவும் ரூ.150 என்றார். ஆனால் சற்று நேரத்தில் புதுப் பூக்கள் வரும் என்றார். சொல்லி வாய் முடிக்கும் முன் ஒரு வேனில் பூக்கள் வந்தன. 

பதினொன்னரை மணிக்கு காலை ரோஜா வரும் நேரம் என்றார் சொல்லி வாய் மூடும் முன் வந்தது. மூளையே குறித்து வைத்துக் கொள் என்றேன். எனது நேரம் நல்ல நேரம் என்றேன் பழைய பூக்களுக்கு பதிலாக புதிதாக வாங்கிக் கொள்கிறோம் என்பதில் ஒரு மகிழ்வு. அவர் பேரைக் கேட்டேன் நாகராஜன் என்றார். அவர் கடையில் நின்று இருந்து 3 மாலை வரை  கட்டி வாங்கிக் கொண்டு வந்து எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டேன்

.பழைய பூ மாலை ஒன்று ரூ.150 ஆனால் இந்த மாலை ரூ.200. ஏற்கெனவே சென்ற‌ அந்த கடைக்கு சென்று அவர்கள் மாலை எதுவும் வேண்டாம் என்று தயங்கி தயங்கி சொல்லி விட்டேன். மாலைகளை விரைந்து கட்டச் சொன்னார் நாகராஜன் தமது தாயிடம், அவரது தாயும் அந்த பழைய மாலைகளைக் காட்டி ஏன் இது தான் இருக்கிறதே என்று சொல்லியபடி காலம் தாழ்த்த முயற்சிக்க எடை போட ஆள் வரணும் என்றபடி எல்லாம் சொல்ல, அதெல்லாம் இல்லை உடனே கட்டு, நான் எடை போட்டுத் தருகிறேன் என விரட்டினார். தாயும் மகனுமா ? இல்லை முதலாளியும் வேலை ஆளுமா என்று கேட்டு தாயும் மகனும் தான் அந்த உரிமையில் பேச முடியும் என்ற எனது முடிவை அவர்களும் ஆமோதித்து சிரித்தனர்.

அதற்குள் சில படிகள் இந்த வரிகளில். குண்டு மல்லிகை கிலோ 1650 அதுவும் ஒன்னரை மணிக்கு மதியமே கிடைக்கும் என்றார் பூக்கடை நாகராஜன். மற்றவர் ஒருவர் கேட்டதற்கு பதில். பூக்கள் வர வர வியாபாரம் நடந்து கொண்டே இருந்தது. சொல்லில் நேர்மை இருந்தது.மற்ற சில பூக்கடைக்காரர்கள் கூட இவரிடம் வாங்குகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

மாலையை வாங்கிக் கொண்டு வரும்போது மருத்துவ மனையில் இருந்து வந்திருந்த அந்தப் பெண் என்னை அழைப்பதை காதில் வாங்கிக் கொண்டே திரும்பாமல் நடையைக் கட்டி பேருந்துக்கு வந்தேன் என்றாலும் நான் ஏமாற்றி விட்டேன். அந்த பழைய பூ மாலையையும் வாங்கி கொண்டு ரூ.150 வீதம் 300 தந்திருக்க வேண்டும் அதுதான் எனது சொல்லின் நேர்மை என்று ஒரு பக்கம் கூறியது.என்றாலும் பழைய பூக்களை வாங்காமல் தடுத்த நல்ல நேரத்தை எண்ணியபடி...அப்படி எல்லாம் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுக்குமளவு என்னிடம் செல்வம் சேரவில்லையே எனத் தேற்றிக் கொண்டேன்'.ஒரு நாள் வாடிடப் போகும் மாலையில்  தாம் எத்தனை எண்ணங்கள் புதைந்தபடி...

எல்லாம் ஒரு நேரம் தான்.

நான் மாலை வாங்கிய கதை இத்தோடு முற்றிற்று.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment