Saturday, February 25, 2023

திருமணம் வாழ்த்து(ம்) கல்வெட்டு

                                                 திருமணம் வாழ்த்து(ம்) கல்வெட்டு



ஜெ.அருண்குமார் DECE         03.03.2023       ஜி.கற்பகாம்பாள் B.Sc,D.El.Ed.


நாள்: வெள்ளிக்கிழமை   இடம்: கந்தசாமி கோயில் காளிப்பட்டி ஹரிதா மஹால்.

கருவாகி உருவாகி உடலாகி உயிராகி தாய் வயிற்றுள்

இருந்த போதிருந்தே இவனை நானறிவேன்.


எங்கள் வீட்டு வீதியின் விளையாட்டு முழக்கத்தில் இவன் குரல்

முக்கியமானதாக இருந்தது.


சதுரங்கம்,கேரம் விளையாட்டுகளில் எப்படியாவது/ ஏமாற்றியாவது

அவனது சகோதரிகளை வென்று காட்டி(ய) சண்டையிட்ட காட்சிகள்

இன்னும் நினைவிலாட...எண்ணி எண்ணி அகமகிழ்கிறேன்


இப்படி பல நினைவுகள் பல‌ நிலைகள்,பல காட்சிகள் எம் வாழ்வில் சுடர் விட...

அதன் அதிர்வலைகளை சொற்களாக்கி காலத்தின் கற்களில் பதிவேற்றுகிறேன்

பொன்வாழ்வில் வைரம் போல் பொதித்து வைக்கிறேன்.

                                                   அன்புத் தம்பி

நமது கதாநாயகன் ஜெயபால் திலகவதி அருண்குமார்

நமது கதாநாயகி கோபால் பார்வதி கற்பகாம்பாளை கைப்பற்றும்  காலத்தில்

வாழ்த்த வார்த்தைகள் போதா(து)


பெற்ற தாய்தனை மறவாத மகவாகவும் பிள்ளையைத் தாய் மறவாமலும்

உற்றதேகம் உயிர் மறவாமலும் உயிரை மேவிய உடல் மறவாமலும்

கற்ற நெஞ்சகம் கலை மறவாமலும், கண்கள் நின்றிமைய மறவாமலும்

இருப்பது போல் மணமக்கள் இன்றியமையா உறவாக என்றும் வாழ்ந்து


              பதினாறும் பெற்று பெரு வாழ்வுடன் இல்லறம் சிறக்க‌

                          தலைமுறை தொடர்க காலத்தை வெல்க‌

                                                         என்று(ம்)

                                                         வாழ்த்தும்

கவிஞர் சுப்ரமணியம் தணிகை  த.சண்முக வடிவு த.க.ரா.சு. மணியம் B.E.,

                               தெய்வா தியானப் பயிற்சி மையம்.

No comments:

Post a Comment