Saturday, August 27, 2022

மழை நீரைப் பருகினால் நோய் நொடி இன்றி வாழலாம்: கவிஞர் தணிகை

 



மழை நீரைப் பருகினால் நோய் நொடி இன்றி வாழலாம்: கவிஞர் தணிகை


இன்றைய புதிய தலைமுறை அறிக்கை

6 மாதம் வரை சேமித்தாலும் எந்தவிதப் புழு பூச்சியோ நாற்றமோ  இல்லை . சேமித்து வைத்துள்ள மழை நீரை வடிகட்டி

 பருகி வருவதாகவும் சமைக்க பயன்படுத்தி வருவதாகவும் 40 ஆண்டுகளாக‌ எந்தவித நோய் நொடிகளும் இல்லை என்றும் நல்ல ஆரோக்யத்துடன் இருந்து வரும் அந்த 70 வயதுக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பார்த்து (அந்த திருவண்ணாமலை அருகே உள்ள கீழீச்ச மங்கள கோதையன் வயது 76 இராணியம்மாள் வயது 72. இவர்களைப் பார்த்து )மற்றவர்களும் அந்த நல்ல பழக்கத்தை கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதாகவும் ஒரு நல்ல செய்தி. எனவே பகிர்ந்துள்ளேன்.


மழை வந்து 10 நிமிடம் ஆன பின் தூசி துப்பு நீங்கிய பின் மழை நீரை பிடித்து வைத்துக் கொள்வதாகவும் அதையே பருகி வருவதாகவும் மேலும் அதிலேயே சமையல் செய்வதாகவும் எந்த வித ஆழ்துளைக் கிணற்று நீரோ, கிணற்று நீரையோ பயன்படுத்துவதில்லை என்றும் இப்படி மழை நீரை சேமிக்கும் பழக்கம் வேண்டும் என்றும் மழை நீரின் அருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


நன்றி:

27.08.22 புதிய தலைமுறை அறிக்கை.

https://www.puthiyathalaimurai.com/newsview/146127/An-old-couple-s-family-has-been-living-only-by-drinking-rainwater-for-40-years-

No comments:

Post a Comment