Monday, May 30, 2022

திருமண வரவேற்பு விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

                               முதல் சந்திப்பு  பெரும் வியப்பு: கவிஞ‌ர் தணிகை


     ராஜசேகர் MCA                         06.06.2022                                           மரு.பூஜா M.B.A



தென்னக ரயில்வே ராஜா

எனை சந்தித்தார்

மகள் திருமண வரவேற்பு அழைப்புடன்


முதல் சந்திப்பிலேயே மனிதர்

மனந்திறந்தார்.

பல முனைகளில் நாங்கள் ஒன்றுபட்டிருந்ததை

பேச்சு காண்பித்து விட்டது


கிளிக்கூட்டத்திற்கும், பறவைக் கூட்டத்திற்கும்

காக்கை கூட்டத்திற்கும் தினம் உணவளிக்கும் நெகிழ்வு


அவற்றில் எஞ்சியவற்றை எடுத்து அரைத்து மறுபடியும்

எறும்புக் கூட்டத்திற்கு இட்டு விடல்


உணவு சமைத்து ரயில்வே மேடைகளில் இருக்கும்

ஆதரவற்றோர்க்கு தினம் உணவு அளித்தல்


இப்படி ராஜாவும் சண்முகப்ரியா ராஜாக் குடும்பத்தாரும்

உயிர்களிடையே புண்ணியம் கட்டிக் கொண்டு வாழ‌


காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியின் வரிகள்

இவர்களின் பிடித்தமானது...

இவர்களை மனிதாபிமானிகள் என்பதை விட‌

உயிரபிமானிகள் என்பதே பொருத்தமானது


இவர்க‌ளின் பெண் வாரிசு மரு. பூஜா 

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ O.ராஜசேகரை

கரம் பற்றும் நன்னாளில்



எங்கிருந்தாலும் தமிழும் தமிழ்க் குடும்பமும்

தமது பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன‌

கண் காணா இடத்தில் இயங்கிய போதும்...


எனது வாழ்த்துகள் எப்போதும் இவர்களுடன்

கவிஞர் தணிகை

மற்றும் குடும்பத்தார்.



No comments:

Post a Comment