Tuesday, February 2, 2016

தமிழகத் தேர்தல் காலம் சாதிகள் கனாக் காணும்: கவிஞர் தணிகை

தமிழகத் தேர்தல் காலம் சாதிகள் கனாக் காணும்: கவிஞர் தணிகை
கோவைக்கு வந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் அம்பேத்கார் பேர் இருக்கும் வரை தலித்களுக்கு யாரும் தீங்கு செய்ய முடியாது என மோடி பேச்சு.சேலத்தில் 19 வது செங்குந்தர் மாநில மாநாடு மற்றும் செங்குந்தர் நெசவாளர் எழுச்சிப் பேரணி





இரு நெருங்கிய சொந்தங்கள் ஜனவரி.31ல் சேலம் போஸ்மைதானத்தில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டிற்கு ஒருங்கிணைப்புப் பணிகள் செய்தனர்.கோவை மாவட்டத்திலிருந்தும், சேலம் மாவட்டத்திலிருந்தும் எனை அழைத்தனர்.சாதிமத பேதங்களற்று வளர்ந்ததால் என்னால் வர முடியாது என மறுதலித்து விட்டேன்.

உங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைக்கலாமே என்றனர்.அதற்கும் மறுத்துவிட்டேன். நாம் கொள்கைகளை கடைப்பிடிப் பிடிப்பதில் காமராசரையும், ஜீவானந்தம் போன்றவர்களையும் பின் பற்ற வேண்டும்.

ஆனால் இந்த மாநாட்டின் மாநில அளவில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர் ஒருவர் சிறிது காலத்திற்கும் முன் நாட்டின் மிகப்பெரிய விருதுகள் பெற்ற கவிஞர் கூட தமது சாதிய முன்னேற்றச் சங்கத்தில் ஆர்வமுடையவராய் ஈடுபடும்போது நீங்களும் கலந்து கொள்ளலாமே அதற்கு உரிய அந்தஸ்தை அளிக்கிறோம் என்றார்.




இல்லை விட்டு விடுங்கள், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பின் தங்கிய மக்களுக்காக பணிபுரிந்தவர் என்ற பெருமை எனக்குண்டு. யாம் வளர்ந்த விதம் அப்படி, சாதி ஒழியுமா ஒழியாதா என்ற பட்டி மண்டபங்களுக்கு நடுவராக இருந்து நடத்தியிருக்கிறேன். எனவே சாதி மதம் போன்ற வேறுபாடுகள் எம் வாழ்வில் இல்லை என்றும் மறுத்து விட்டு எம்மிடம் பைபிள், குரான்,கீதை மூன்றுமே உண்டு.

எனது தனி நிலையை இப்படியே விட்டு விட்டு உள்ள நிலைமைக்கு வருவோம். செங்குந்தர் மாநாட்டிற்கு சுமார் ஒரு இலட்சம் முதல் ஒன்னரை இலட்சம் கூட்டம் இருந்ததாம். பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனராம்.

தொகுதிகள் கேட்டதாகவும் இல்லையெனிலும், இவ்வளவு பெரிய கூட்டம் எம்மிடம் உண்டு அதற்கு எத்தனை கோடிகள் புரளும் ,எமது வாக்குகளின் வங்கி உங்கள் பக்கம் சாய என்ற பேரம் எல்லாம் நடக்கும் எனவேதான் தேர்தலுக்கும் முன் இது போன்ற மாநாட்டு மக்கள்தொகை சேர்க்கைக் காட்சிகள்.





இப்படித்தான் பல கட்சிகளிடமும் சாதி சார்ந்த அமைப்புகள் தங்களது சாலிடாரிட்டி, மெஜாரிட்டி, கூட்டத்தை காட்டி பேரம் பேசும். இது தேர்தல் வழக்கம் இது இந்த தேர்தலைப் பொறுத்த அளவில் மிக அதிகம் அளவுக்கு அதிகம் என்றே சொல்லலாம்.

ஏற்கெனவே கோவையில் சார்ந்திருக்கும் கொங்கு வேளாளர் முன்னனி,ஏன் சாதி அமைப்புகளைச் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள்,பாட்டாளி மக்கள் கட்சி,இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதல்லாமல் எல்லாக் கட்சிகளிலுமே அந்த அந்த பிரதேசங்களைச் சார்ந்து எங்கெங்கே எந்த சாதி மக்கள் அதிகம் இருக்கிறார்களோ அந்த சாதி சார்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முனைவது...

இதல்லாமல்,தலித் வாக்குகள் என்பது, சிறுபான்மை இனம் என்று கிறித்தவர்,முகமதியர் வாக்குகளைப் பெற முனைவது , நாடார்சமுதாயம்,மண்ணுடையார் சமுதாயம், தேவர் சமுதாயம் , நாயக்கர், நாயுடுகள், ரெட்டியார், வன்னியர், செட்டியார்,பார்ப்பனர் என எல்லாம் எக்கசக்கமாக பிரிந்து கிடக்கிற மனித இனத்தில் எமைப்போன்றோர் எல்லாம் கடலில் மிதந்திடும் தூசுகள்.




சாதியும் ஒழியவில்லை, ஒரு சாதி அமைப்பினர் அவர்களைச் சார்ந்தவரையே தமது பக்கத்தில் குடி அமர்த்த தலைப்படுகின்றனர்.

இதெல்லாம் தேர்தலில் முக்கிய பங்குகள் வகிக்கின்றன.ஆனால் இது சாதி இரண்டொழிய வேறில்லை என்ற தமிழ் சொல்லிய மனித இனத்தின் மாண்பு சொல்லிய மண்ணின் வளத்துடன் உள்ள பூமி.இன்னும் எத்தனை காட்சிகளோ இந்த தேர்தல் முடிவதற்குள் சாமி..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: இன்றும் எங்கள் பகுதியில் எந்த பணியையும் மேற்கொள்ளும் அளவில் மின்சாரம் பகற்பொழுதில் இல்லை. எனவே இது ஒரு நள்ளிரவுப் பதிவாகி விட்டது.

No comments:

Post a Comment