Wednesday, July 23, 2025

நீ...! கவிஞர் தணிகை

 நீ...!



நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

அன்பின் பூக்களை 

அள்ளி எடுத்துச் சென்று விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

மனிதம் என்றால் என்ன? எதற்கு என்று

காட்டி விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

வாழ்க்கை என்பது பிறர்க்கு பயனாதல்,

பிறரை மகிழ்வித்தல் என்று சொல்லாமல்

சொல்லி விட்டுச் செல்கிறாய்!


உனை நினைக்கும்போது

கண்களில் நீ(ர்) நிறைகிறது


என் மகனுக்கு மூத்தோனே

எனது முதல்வனே


உனது அலை 

ஒவ்வொரு முறை வரும்போதும்

பிற(ர்) நினைவலைகளை

இழுத்துச் சென்று விடுகிறது

உணர்தலின் மேலீடு


கவிதை என்பது

பீறிடுவது

மீறிடுவது

அடக்க முடியா(த)து

அடங்கா(த)து



தியானம் ஒரு முற்றுப் புள்ளியில்

முடிந்து போய் விடுகிறது.

மீண்டும் எனை கவிஞனாக்குகிறது

உனது வருகை!


நீ எனை நாடி வருகையில்

சொற்களும் செயலுமின்றி 

சுயமிழந்து நிற்கிறேன்.


நமை இணைத்த அந்த காலத்திற்கு

நன்றி சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.


        மறுபடியும் பூக்கும் வரை

        கவிஞர் தணிகை

Sunday, July 20, 2025

பம்மாத்து: கவிஞர் தணிகை.

 சிவப்பு ரொட்டியூர் மேம்பாலத்தின் கல்வெட்டு மேல் பயில்வான் பல்பு படுத்துக் கிடந்தான். தலை தனியே தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பட்டன் செல்பேசி இருந்தது. பார்ப்பார் எல்லாம் இந்தப் பக்கம் அந்தப் பக்கம்  இவன் போதையில் தெரியாமல் புரளும்போது பாலத்திலிருந்து பல்பு கீழே விழுந்து விடுவானே என பயந்த படியே பரிதாபப் பட்டுக் கொண்டும் அனுதாபம் கொண்டும் சென்று கொண்டிருந்தனர்.



கொஞ்ச நாளுக்கும் முன்பு தான் , அந்தப் பக்கத்தில் இருந்த முட்டுக்கால் முனியப்பன் கோவிலில் சிசிடிவி இருந்த போதும், முகத்தை கறுப்புத் துணியை மூடிக் கொண்டு உண்டியலை கடப்பாரை கொண்டு நெம்பி கொள்ளை அடித்திருந்தான் ஒருவன், மேலும் பக்கமிருந்த மாரியம்மன் தாலியும் திருடப்பட்டது அங்கு பூட்டுகளை உடைக்க முடியாமல் போனதால்.


சில வருடங்களுக்கும் முன் அப்படி அந்தப் பகுதிகளின் கோவில்களில் நடந்திருந்த படியால் தாம் சிசிடிவி முனியப்பன் கோவிலில் வைத்தார்கள்...


இப்போது,அங்க அடையாளம் வைத்து காவல் துறை திருடனை, கொள்ளைக்காரனைப் பிடித்ததால், அவன் அதில் ஐந்தாயிரம் மட்டுமே இருந்தது என்றிருக்கிறான்


மாலை மயங்கியது, சிறுவன் வீரண்ணன் அந்தப் பக்கம் போகும் போது பயில்வான் பல்பு சுரணையின்றி பாலத்தில்  படுத்துக் கிடப்பதைப் பார்த்து விட்டு அந்த செல்பேசியை எடுக்க கை நீட்டி தொட்டதுதான் தாமதம், கப்பென்று அவன் கையை பயில்வான் பல்பு பிடித்துக் கொண்டான்.


ஏன்டா? எங்கிட்டியே செல்போன் திருடப் பார்க்கிறியா? எடு என் பாக்கெட்டிலிருந்த எடுத்த அந்த இரண்டாயிரத்தை முதல்ல குடு , என்றான், நான் எதுவும் எடுக்கல என் சிறுவன் அழ ஆரம்பித்தான், வா, வா ஒங்க வீட்டுக்கு போலாம், பெத்தவங்க கிட்ட வந்து கேட்கிறேன் என, தர தர என வராத சிறுவனைப் பிடித்து இழுத்தபடியே சென்று கொண்டிருந்தான் பயில்வான் பல்பு...



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, July 14, 2025

உன்னைக் காண: கவிஞர் தணிகை

 உன்னைக் காண:



திருப்பதி சென்றேன்

திருவண்ணாமலை சென்றேன்

திருவரங்கம் சென்றேன்

பழநி சென்றேன்

சமயபுரம் சென்றேன்

சிருங்கேரி சென்றேன்

மூகாம்பிகை சென்றேன்

தர்மஸ்தலம் சென்றேன்

சுப்ரமண்யா சென்றேன்

காசி ராமேஸ்வரம் சென்றேன்

அமிர்தசரஸ் சென்றேன்

ஜெருசலம் சென்றேன்

பெத்லகேம் சென்றேன்

வாடிகன் சென்றேன்

மெக்கா, மதீனா சென்றேன்

....................

......................

..........................,

நீ

இங்கிருப்பது அறியாமலே

எங்குமிருப்பது அறியாமலே.



    மறுபடியும் பூக்கும் வரை

      கவிஞர் தணிகை



Thursday, July 3, 2025

உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.

 எதை நம்புவது?....கவிஞர் தணிகை



சினிமா நடிகர் அஜித் குமார் என்ற பேரை பின்னுக்குத் தள்ளி பேர் பெற்றது இறந்து போன அஜித்குமார் பேர் இந்த சில நாட்களில்.


ஊடகங்கள் மின்னலாய் பணி புரிவது தெரிகிறது.


ஆனால் வரும் செய்திகள் யாவும் நம்புவதா வேண்டாமா என்றே இருக்கிறது.

முதலில் சக்கர நாற்காலியையும், கார் சாவியையும் கொடுத்த அஜித் குமாரையும் அவரது இரண்டு நண்பர்களையும் விசாரித்த நகை  காணாமல்  திருடு போனது பற்றிய செய்தி.


அத்துடன் அந்த நிகிதா என்ற பெண்ணுக்கு உயரிய அந்தஸ்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணி (ஐ.ஏ.எஸ்_) பதவியில் உள்ளவர் நெருக்கத்தால் மட்டுமே அளித்த புகாரால் இந்த விளைவு என்றது,


அதன் பின் அந்தப் பெண் அப்படி எவரும் தெரியாது என அந்தப் பெண் சொல்கிறார் எனவும் நகை பணம் காணாதது பற்றி சாதாரணமாகவே காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று அவர் சொன்னதாக...


இப்போது அவரது குடும்பமே உறவினர்களிடமே வேலை வாங்கித் தர பல இலட்சங்கள் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய புகார்கள் இவர்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் உள்ளதாக...


மேலும் அவரது குடும்பம் இப்போது எங்கே எனத் தெரியாமல் தலைமறைவில் உள்ளதாகவும்...


இடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்களின் குடும்பங்கள் மேலிடத்தில் சொல்லித்தானே இந்த காவலர்கள் இந்த‌ கொடூரச் செயல்களில் ஈடுபட்டதாக போராட்டம் செய்ய‌ அதை அனுமதி பெற்று செய்யவில்லை என அவர்கள் கலைக்கப் பட்டதாக...


பாதிக்கப் பட்ட குடும்ப‌த்துக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் அவரது இளைய சகோதரர் நவீன் குமாருக்கு நிரந்தர அரசுப் பணி அரசு சார்பாக, த.வெ.க சார்பாக இரண்டு இலட்சம், மற்றும் எதிர்க்கட்சிகள் எல்லாம் உதவிகள்....


கழிவறையின் துளைகள் வழியாக இந்தக் காணொளிக் காட்சிகளை பதிவு செய்து வெளிப்படுத்திய அஜித் குமாரின் நண்பர்கள் செய்த செயலின் பலன் நாடெங்கும் அதிர்வலைகளை கொண்டு வந்து உண்மை வெளிப்பட உதவியிருக்கிறது என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.


சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றதற்காக ஈடாக சிரமப் பட்டதற்கான சிறு தொகையினைப் பெற‌ செய்யப் பட்ட பேரத்தின் விளைவாகவே இத்தனையும் நிகழ்ந்தன  என்ற செய்திகளும் வராமல் இல்லை.


மேலும் எல்லா பிரபல நடிகர் மற்றும் சினிமா பிரபலங்கள் யாவருமே கொக்கைன், கஞ்சா, போதை வழக்கத்தி ல் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அர்ஜுன் சம்பத்,, மற்றும் சுஜித்ரா போன்றோர் அளித்திருந்த செய்திகள் யாவும் இந்த செய்தியால் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பதை நாம் சற்று கவனிக்கவும் வேண்டும் அளவு மறைய ஆரம்பித்து விட்டன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் மற்றும் மஸ்க் பிரிகிறார்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்...


உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.