திருமண வாழ்த்து மடல்
மண மகன்: சு.ஹரிசங்கர் B.E., மணமகள்: மு.தீபலட்சுமி B.E,
மண நாள்: 10.02.2025 திங்கள் கிழமை S.M திருமண மஹால்
இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து
மானிடம் என்பதே மகிழ் மகிமை அதில் மண்டிய யாவுமே பெருமை
மங்கை மலர்களே அருமை அவர் அறநெறி ஆபரணமே பொறுமை!
வாழ்க்கை என்பதோர் வசந்தமதில் வஞ்சிக் கொடி படர்வதே சுகந்தம்
சேர்க்கை என்பதோ அனந்தம் அதில் சேர்ந்தே இருப்பதே புனிதம்!
தாம்பத்யம் என்பதோர் சுரங்கம் அதில் சம்பவங்களாய் சதுரங்கம்
தர்மபத்தினியின் அங்கம் அதில் பத்தரை மாற்றுத் தங்கம்
தங்க மகுடத் தலையங்கம்!
நாளெல்லாமே சொர்க்கம் அதை உணர்வதால் மேலிடும் வெட்கம்
இனியிவர் காலையெலாம் அரும்பும் பூக்கள் காதல் காற்றும்
இவர்கள் பக்கம்!
வாலிபம் என்பதே பூவின் முகம் அதை வாடாமல் வளர்ப்பதே
வயதின் இதம்.
சாந்தம் என்பதே தெய்வீகமதை சார்ந்து நிற்பதே மனித நேயம்!
சந்திர ஒளியின் சேகரமிதோ சுந்திரவடிவிற்கோர் சாகரமிவர்
எந்திர வாழ்வில் சாந்தி வர மந்திர வடிவினில் காந்த மணம்!
ஹரிசங்கர் தீபலட்சுமி வாழ்க்கை வண்ண மலர்களின் சேர்க்கை
நேர்ந்த இணைப்போ வெகு நேர்த்தி வாழ்ந்து சொல்வார் சிறப்பு சேர்த்து!
அமுதா சுப்ரமணியின் நல்முத்து நான் பெயர் வைத்த கோப்பெருந்தேவன்
அமைதிக்கு ஓர் அடையாளம் அதிகம் பேசாத செயல் வீரம் இவர் தம் நாளில்
பூப்பது திங்கள் புலருமிக்காலை சேர்வது மாலை சேர்ப்பது மணவேளை
முப்பது பத்து நாளை பின் தள்ளி இப்பூந்தளிர் சாலைகள் பூக்கட்டும்
பைந்தளிர் சோலையை என்ற வாழ்த்து ஓலையைக் கோர்க்கும்
அன்பு நெஞ்சங்கள்
கவிஞர் தணிகை
த.சண்முக வடிவு& T.G.R.S.மணியம் B.E.,M.B.A pursuing
No comments:
Post a Comment