Wednesday, October 16, 2024

அளவுக்கு மிஞ்சினால்...கவிஞர் தணிகை.

 சிறுவர் சிறுமியர்க்கு நத்தையும் அட்டையும் வேடிக்கை வியப்பு

இருபதுகளில் இரசிப்பு ( 1980கள்)

அறுபதுகளில் தொல்லை ( 2025களில்)



அளவுக்கு மிஞ்சினால்...



சொல்ல வந்தது யாரையும் எந்த அமைப்பையும் குறித்தல்ல...

அப்பட்டமான இயற்கையின் இயல்பை...



 தம் வீட்டு குப்பையை சாலைக்கு அப்புறம் கடந்து வந்து அடுத்தவர் நிலத்தில் வீசி விட்டு செல்லும் வயதான விதவைப் பெண் சொல்கிறார் தம் வீட்டு சுவர் மேல் ஊர்வதன் மேல் எல்லாம் உப்புத் தூள் வீசி விடுகிறாராம் அவை கசங்கி சித்திரவதைப் பட்டு மடிகிறதாம்...இரசாயன ஆய்தம்...கெமிகல் வெப்பன் யூஸ்ட் பை எ நார்மல் லேடி. லேடி வித் கெமிகல் வெப்பன்....OLD LADY WITH CHEMICAL WEAPON...Just for a Joke....☺☺



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.







Wednesday, October 2, 2024

கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை

 கண்ணாடி பார்க்காத மனிதன்: கவிஞர் தணிகை



முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்க்காத மனிதன்

எல்லா நீர் வீழ்ச்சிகளையும் விட மழையே அதிக உயரத்தில் இருந்து வீழ்வதால் அருகிருந்தும் நீர் வீழ்ச்சியைக் கூட பார்வையிடச் செல்ல அழைத்த அழைப்பை ஏற்கா மனிதன்.


நேரந் தவறாமையைக் கடைசி வரைக் கடைப் பிடித்தவன்

காய் கறி நறுக்கி சமையல் செய்ய சமையல் கலை தெரிந்தவன்


திடக் கழிவு மேலாண்மையைக் கடைப் பிடிக்க கற்றுத் தந்தவன்

கூனே முறை என்று ஆண்குறியை நீரில் வைத்து பிரமசாரிய விரதப் பயிற்சி மேற்கொண்டவன்

மண் சிகிச்சை, நெற்றி செம்மண் பட்டை எல்லாம் அவனறிவான்


செருப்பு அல்லது காலணியைத் தைக்க தெரிந்து பயிற்சி பெற்றவன்

எவருக்கும் தலை வணங்காமல் தம் கருத்தை இறுகப் பற்றி சிறை செல்லத் தெரிந்தவன்


உண்ணும் உணவில் காரம், மசாலைப் பொருட்கள்,அதிக உப்பு, இனிப்பு இவை யாவும் விலக்கப் படவேண்டியவை என்றே அன்றே அவன் வாழ்வின் முறை மூலம் உணர்த்தியவன்

தமது பணிகளான, முடி திருத்தம், துணி  துவைத்தல், கழிப்பறை சுத்தம் செய்தல் யாவும் செய்தவன்

தாம் இருக்கும் கூட்டுப் பண்ணை முறைகள், மற்றும் தொழில் வளாகத்தில், தங்கும் இடத்தில்

பலரையும் இணைத்து அந்த வாழ்க்கை வாழச் செய்தவன்


ஆயுள் காப்புறுதி வாழும் மனிதர்க்கு அவசியமில்லை என ஏற்க முனைந்தவன்

அவனை தொடர்வார் எவருக்குமே நிரந்தர சொத்து ஏதுமில்லை என்ற வாழ்க்கைப் பாதையைக் கடைப் பிடிக்க‌

உறுதி ஏற்கச் செய்தவன்


பிச்சையிடல் மறுக்கப் பட வேண்டியது என்ற கொள்கையை கொண்டுவர முயன்றவன்

உலகம் எல்லாம் நல் வாழ்வும் வளமும் செழிக்க ஒவ்வொரு நிமிடமும் நொடியும் தமது ஆயுளை அர்ப்பணித்த காமுகனாய் இருந்து அதிலிருந்து மீண்டு காமம் இன்பத்திற்காக‌, இனவிருத்திக்காக, அதிலிருந்து மீட்சி பிரமசாரியம் என்ற மூன்று நிலை மனிதர்க்கு அவசியம் என்று தமது வாழ்வே தமது சுய பரிசோதனைகளே தமது வாழ்வின் பயண வழி காட்டி என்று உயர்ந்த‌ சிறுவன்


ஒளிவு மறைவு அற்ற வெளிப்படைத் தன்மையைக் கடைப் பிடித்து விமர்சனங்களால் நிறைந்து போனவன்

உலகத்துக்கு அதிகம் எழுத்துகளை சுமார் ஒரு இலட்சம் பக்கங்கள் எழுதிக் கொடுத்தவன் , வாழ்வின் முறைகளை ஏந்தியவன்,


இருகைகளிலும் எழுதத் தெரிந்தவன்

தன் குருநாதர்கள் மூலம் தமிழ் தான் சத்தியம் , அஹிம்சை போன்ற தெய்வாம்சத்திற்கு மூலமாய் இருக்கிறது என அறிந்து  தமிழைக் கற்றுக் கொண்டவன், தமிழகம் வந்து ஆடையைக் குறைத்துக் கொண்டு தானும் ஒரு சாமனியனே என அறிவித்துக் கொண்டவன்.


ஒரு கைத்தடியும் அவன் வளைந்து போன கண்ணாடியுமே அவனது அடையாளமாய் உலகெலாம் தெரிந்தவன்.

அவன் மனிதனின் உச்சம், இன்று ஏதுமில்லை அவனின் மிச்சம், இங்கு வளர்பவை யாவுமே எச்சம்.எனது தந்தைக்கு நான் எழுதிய ஒரு மடல் நினைவுச் சேர்க்கை இது.


ஒரு நாள் விடுமுறை, மதுக் கடைகள் மூடல்

மகாத்மியம் வீழ, உலகெலாம் அதன் மாறுபாட்டு எதிர் வினையாவும் மீற...


நல்லவை எப்போதும் தோத்துக் கொண்டே இருந்தால் அதற்குத்தான் என்ன மதிப்பு?


ஓ என் கடவுளே!


*************************************************************

எத்தனையோ

தேவதைகளை எடுத்து விழுங்கி விட்டு

 ஏப்பம் விடாமல்

இன்னும்

ஏங்கி நிற்கிறது


கண்ணாடி...


 .....எப்போதோ கவிஞர் தணிகை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை