Saturday, August 4, 2018

எதுவும் புண்ணிய பூமிதான்....கவிஞர் தணிகை.

மழை கழுவி விட்டதால் புது சூரியன் புது பூமி
நீர்த் தாரை நிழலை விட்டுச் செல்லும் வாகனங்கள்
இதுவும் புண்ணிய பூமிதான்
எதுவும் புண்ணிய பூமிதான்


Related image


காசியில்
மலர்களுக்கு மணம்
காகம் கரைவது
நாய் குரைப்பது
மாடு முட்டுவது
பிணம் நாறுவது
இல்லையாமே....

விண்வெளியில் ஒற்றை மேகமாய்...

காற்று தாலாட்டும் மரங்கள்
காற்றைத் தாலாட்டும் மரங்கள்

கரையும் நேரம் நீள  வேண்டி ஏங்கும் எண்ணம்...
எங்கும் இயற்கையின் புதுப் புது வண்ணம்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment