Friday, January 19, 2018

கமல்ஹாசனின் வரவு நல்வரவாகட்டும்: கவிஞர் தணிகை.

கமல்ஹாசனின் வரவு நல்வரவாகட்டும்: கவிஞர் தணிகை.

Image result for apj memorial place


அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து தமது அரசியல் பயணத்தை 21.01.2017ல் துவக்கும் கமல்ஹாசனை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

ஏன் எனில் இவர் இரண்டரை மணி நேரம் ஆகாய விமானத்தில் பேசிக் கொண்டிருந்ததை பெருமையாக நினைத்து,

அவர் பிறந்த அதே மண்ணில் தானும் பிறந்தது பற்றி மகிழ்ந்து

அவருக்கு அஞ்சலி செலுத்திய பின் அவரின் ஆசிகளுடன் புறப்படுவதற்காக மறுபடியும் பூக்கும் தளம் மனமுவந்து வாழ்த்துகிறது. பாராட்டுகிறது. வரவேற்கிறது. நல் வரவு கூறுகிறது.

யாரிடம் குறை இல்லை, யாரிடம் நிறை இல்லை எல்லோரும் இந்நாட்டு மன்னர் யாவரும் ஒரு விலை யாவரும் ஒரு நிறை என்ற பாரதியின் சொல்லுக்கேற்ப இனி ஆரம்பித்த இந்த நேரத்திலிருந்தாவது எந்த பிழையும் செய்யாமல் மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் போதும்.


அந்த வகையில் கமல் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எவ்வளவோ தேவலாம்.

கமல் மேட்டூர் வந்தால் எனை வந்து சந்திக்க முயலுங்கள். அடியேன் 10 ஆண்டுகள் இந்த நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு உண்மையாக உழைத்தவன்

அப்துல் கலாமின் கடிதத்தொடர்பில் அவர் குடியரசுத் தலைவராக இருந்தபோதே இணைந்தவன். அவர் எழுதிய கடிதம் இன்றும் என்னுள் என்னுடன் இருக்கிறது நினைவுச் சின்னமாக. அவர் 2004 டிசம்பர் 23ல் அதை ராஷ்ட்ரபதிபவனிலிருந்து எனக்கு இலஞ்ச ஒழிப்பு அவரவர் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டிய ஒன்று என்ற கருத்துடன் தமது சொந்தக் கையெழுத்துடன் முதல்வரியை எழுதி ஆரம்பித்துள்ளார். தமிழில் கையொப்பமிட்டு முடித்துள்ளார்.

அவரை செம்மொழி மாநாட்டிற்கு அழைக்காமல் மாநாட்டை நடத்தியவர் கலைஞர்

அவரை அவரின் இறுதி அஞ்சலிக்கும் கூட செல்லாமல் சென்னையில் இருந்தவர் அ.இ.அ.தி.மு.கவின் நிரந்தர முதல்வர் ஜெ.

அவரை இரண்டாம் முறை  குடியரசுத் தலைவராக ஒரு பேச்சுக்கும் கூட தமிழராயிருந்தும் ஆதரவு தராமல் அவர் கல்லூரிக்கே வகுப்பு எடுக்க போகட்டும் எனச் சொன்னவர் தி.மு.கவின் நிரந்தரத் தலைவர் மு.க.

ஆனால் அந்த மனிதரை யாவரும் பாராட்டுவர். உலகே பாராட்டும் நீங்களும் நினைத்து ஆரம்பிக்கிறீர். வெற்றி உண்டாகட்டும். நான் 3 முறை பார்த்துள்ளேன். அதில் 2 முறை ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்தபோது.

எனது மகனையும் அழைத்து சென்று காண்பித்தேன் அதுவே அவர் விடைபெறுவதற்கு முன் ஆண்டு...

எனது புத்தகங்களையும் அவருக்கு பரிசளித்துள்ளேன்.

எனது சுயவாழ்வின் குறிப்புகள் எவருமே எளிதாகப் பெற முடியாதது. எனவே நீங்கள் அது பற்றி அறிய எனது தோழமையும் உங்களது பக்கம் ஆதரவாக இந்தப் பதிவு. ஒரு வேளை இது உங்கள் கண்ணில் பட்டால் தொடர்பு கொள்க...

கலாமின் ஒரு இரசிகன், ஒரு காதலன் உங்களுக்காகவும் உங்கள் கலாமை வணங்கிடும் பண்புக்காகவும் உங்களோடு பயணம் செய்ய ஆவலாயிருப்பான்.
 
நன்றி
Image result for kamal haasan



வணக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

2 comments: