Sunday, April 28, 2024

அப்துல் அஜீஸ்: கவிஞர் தணிகை

 





அப்துல் அஜீஸ்: கவிஞர் தணிகை

பிரான்ஸ் தேசத்துக் குடிமகனும் வெளி நாட்டு வாழ் இந்தியருமாகிய எனது பள்ளிப் பருவத்து நண்பர் அப்துல் அஜீஸ் நேற்று தமது துணைவியாருடன் சேலம் கேம்ப் பிலோமினாள் பள்ளி வளாகத்துக்கு வந்து தமது பால்ய கால நண்பர்கள் 25க்கும் மேற்பட்டோருக்கு விருந்தளித்தார். சுமார் 5 மணி முதல் 7 மணி வரை நண்பர்களின் கலந்தளாவல்  இருந்தது. இவரது குடும்பம் பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது.



ஆன்டனி ராஜன் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க, குருசாமி வரவேற்புரை நிகழ்த்த அடியேன் வழக்கம் போல சிறப்புரை நிகழ்த்த வேண்டி இருந்தது.

மதி அழகன், ஆன்டனி, ராஜு,போன்றோர் உணவு வழங்கும் பிரிவை நன்கு கவனித்து செய்திருந்தனர்.
திருமதி அப்துல் அஜீஸ், திருமதி ஆண்டனி ராஜன், பாபு நாராயணசாமியின் மகள் ஆகிய மகளிரும் கலந்து கொண்டனர்

கேரளத்து நண்பர் ராதாகிருஷ்ணன், சென்னையிலிருந்து பாலகிருஷ்ணன், சேலத்திலிருந்து செல்வ அரசு போன்றோரும் நிகழ்வின் ப்ரசன்னா அமைப்பாளர்,மற்றும்ஜீவானந்தம், சிவகுமார், மோகன் போன்றோர் மேட்டூரில் இருந்தும் தங்கமாபுரி பட்டணத்திலிருந்து செல்வராஜ், கோபாலகிருஷ்ணன்,இன்ன பிற நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் எனக்கு இப்போது பெயர்கள் நினைவுக்கு வராத நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் கோம்பூரான் காடு கபாலீஸ்வரர் ஆலயத்தின் கிரிவலத்துக்காக பாதையில் அஷ்டலிங்க வழிபாட்டுக்காக எதிர்வரும் காலங்களில் தம்மால் முடிந்தளவு  விளக்குகள் அமைத்து தரவும் உறுதி அளித்தார் அப்துல் அஜீஸ்.

அண்மைக் காலத்தில் இந்த சேலம், ஈரோடு மாவட்டங்களின் உச்ச பட்ச வெய்யில் இருந்த போதிலும் இந்த நண்பர்களின் சந்திப்பு பற்றிக் குறிப்பிடத் தக்கதானது.





மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை




No comments:

Post a Comment