Friday, July 22, 2022

மீமாஞ்சனைக் காணவில்லை: கவிஞர் தணிகை

 மீமாஞ்சனைக் காணவில்லை: கவிஞர் தணிகை





மீமாஞ்சகன் என்ற பேரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கடவுள் மறுப்பு சிந்தனையாளர், ஒவ்வொருவர் செய்யும் செயலே அவரவர் விதியை தீர்மானிக்கும், மறை யாவும் பழையவை என்ற பொருள் படும் பெயர் அது. அப்பேர்ப்பட்ட பேரைக் கொண்டிருக்கும் எனது நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கும் முன்பு அந்த ஊருக்கு செல்லும் போது கேட்டேன்.


 அவர் மறைந்து 3 ஆண்டுக்கும் மேல் ஆகிறது என்றார்கள் அங்கிருந்த பெண்டிர்.


 வயது குறைவாகத் தானே இருக்கும்? என்ற எனக்கு

வயதைப் பார்த்தா இப்போதெல்லாம் சாவு வருகிறது...என்றார்கள்


அவரை மீன் என்றும் அவரது சகோதரரை மான்( அதியமான் என்று நினைவு) என்றும் பள்ளிக்கூடக் காலத்தில் இருந்தே அழைப்பது வழக்கம். சகோதரர் ஒரு உயரத் தாண்டும் விளையாட்டு சாம்பியன். அவர் எங்கோ ரெயில்வே பெங்களூரில் செட்டில் ஆகிவிட. 

மீன் கேபிள் நடத்தி வந்து கொண்டிருந்தார்.டி.வி , கணினி என்று மின்பொருள் சாதனம் எல்லாவற்றையும் விட்டு வைக்க மாட்டார் சரி செய்து கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்... ஏதோ ஒரு தியான அமைப்பிலும் தீவிரமாக செயல் பட்டு வந்தார். எனக்கும் அவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது அவர் எனக்காக எனது மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம் பற்றி ஒரு வீடியோ செய்து கொடுத்தது முதல்.


அப்பேர்ப்பட்ட பேரை வைத்த குடும்பம் பார்க்க வீட்டுக்கு செல்ல ஆரம்பித்த சில முறை பல முறை அவர் வீடு சென்ற நினைவு உண்டு...அவர் தந்தை, தாய் இருவருமே அரிய மனிதர்களாகவே இருந்தார். ஆனால் இப்போது எவருமே இல்லை.



காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருந்தது. எப்பேர்ப்பட்ட ஊர் அது...சுமார் 3000 குடும்பங்கள் அந்த இங்கிலாந்து சார்ந்த பியர்ட்செல் என்ற  மில் சார்ந்து வாழ்ந்து வந்த இடம் அது அதற்கான மனமகிழ் மன்றங்கள், கூட்டுறவு பண்டக சாலை,ரேடியோ கிரவுண்ட் , சினிமா போடும் வெட்ட வெளி, தொழிலாளர்க்கான மருத்துவ மனை,எல்லாம் மாறி விட்டது.


எனது சகோதர நண்பர் கூட ஒரு முறை பாத்திமா பீவி என்ற ஒரு  தையல் ஆசிரியையை போய்ப் பாருங்கள் என்று நேரு யுவக் கேந்திரா வழியாக கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த அம்மையாரையும் அவர் தையல் அலகையும் சென்று பார்த்தேன்....அப்போதெல்லாம் எனது சகோதர நண்பர் சொல் செயலாக்க நிறைய பேர் அவருடன் அன்பால் அல்லது ஏதோ  ஒரு பிணைப்பால் அவர் அரசு அலுவலர் என்ற வரையறையையும் மீறி தொடர்பில் இருந்தனர்.


எதையோ சொல்ல வந்து எங்கோ சென்று விட்டேன்...


மீமாஞ்சன் சிரித்து சிரித்து புன்னகை புரிந்து புரிந்து என்னுடன் பல வகையான கருத்து செறிந்த சொற்களை கலந்து பேசி விவாதித்துப் பேசுமளவு சிறந்த நண்பர். திருமணமே செய்து கொள்ள வில்லை...உருவம் இருக்கிறது உயிர் இல்லையே...


நேற்று கூட நூறு வயது கடந்த எனது துணைவியாரின் தாய் வழிப் பாட்டி மறைந்தார்... அப்படி கூட மரணத்துக்காக காத்திருந்து செல்வதை விட பூ உதிர்வது போல, பழுத்துக் காய்ந்த இலை உதிர்வது போல, மிக எளிதானதாக இருக்க வேண்டும் மரணம், அது உறங்கும் போது மிக எளிதானதாக இருக்க வேண்டும், மருத்துவ மனைகளில் இருக்கக் கூடாது என்று விழைவார்கள் அறிந்தார்.


எல்லோருக்கும் தெரிந்த ஒரு மறுக்க முடியாத மறக்கக் கூடாத உண்மை

அது எல்லா உயிர்க்கும் மரணம் என்பது ஒரு நாள் தவறாது இருக்கும் நிச்சயமாக என்பது...

அது பற்றி ஏன் சிந்திக்க மறுக்க வேண்டும்...பயமின்றி சந்திக்க வேண்டும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் போல... 


அந்த நினைவுடன் இருக்கும் போது மனிதம் சிறக்கும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


( என்னடா காலையிலேயே இப்படிப் பட்ட ஒரு பதிவு என்று நினைக்க வேண்டாம். உண்மைக்கு கால நேரம் கிடையாது)

No comments:

Post a Comment