Thursday, July 21, 2022

சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை

 சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை




எங்கள் ஊரில் இருந்து தாரமங்களம் போக வேண்டி நேர்கையில் எனக்கு அந்த காலத்தில் என்.டி பேருந்து நினைவு வரும்படி நமது அரசுப் பேருந்து கிடைத்தது. அது மல்லப்பனூர் பிரிவு சாலை வழியே பழங்கோட்டை, விருதாசம்பட்டி,முத்தம்பட்டி, ஓலைப் பட்டி,குட்டப்பட்டி, தொளசம்பட்டி, அமரக் குந்தி வழியாக தாரமங்களம் போய் சேர்கிறது.


எல்லாம் நிறைய பட்டிகள். ஒரு வகையில் மழையால் பசுமைதான். இன்னோரு வகையில் இன்னும் வறுமைப் பிணி இருக்கும் நிலைதான். எல்லாவற்றையும் விட தமிழக அரசை இலவச பேருந்து மகளிர்க்கு விட்டதன் மாபெரும் காரியத்தை பாரட்டியே ஆக வேண்டும் எனத் தோன்றுமளவு எத்தனை வகையான பயணியர், எத்தனை வகையான பெண்டிர், முதியவர், நடக்க இயலாதார், கீழ் நிலை மருத்துவப் பணியாளர்கள், கிராமத்தார், படிக்காதார், படித்தார் இப்படி பலரும் பலன் அடைந்து வருவதைப் பார்க்கும் போது  இந்தக் குறிப்பிட்ட செயலைப் பொறுத்த வரை அரசின் செயல் மக்கள் நலம் சார்ந்ததாக இருப்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை


எல்லா இடங்களிலும் எல்லா மக்களுக்கும் பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியே அழைத்துச் சென்றார். அத்துடன் இந்த பயணிகள் அனைவர்க்கும் இலவச பேருந்து அனுமதிச் சீட்டு என்ற ஒன்று வழங்கப் பட்டு கணக்கு வைக்கப் படுவது என்பதும் பெரிய நிகழ்வுதான்....


அரசின் ஏற்ற இறக்கமான செயல்பாடுகளில் இது ஒரு காமராசர், எம்.ஜி.ஆர், போன்று ஸ்டாலின் என்ற பேர் நிற்கும் செயல்பாடுதான்.

இது போன்ற முக்கியமான துறைகளில், கல்வி நிலையங்கள், போக்குவரத்து,மருத்துவம் போன்ற இன்ன பிற சேவைத் துறைகளில் தனியார் மயமாவது நின்று பொது உடமை அல்லது அரசின் கை வசமே கூட யாவும் இருப்பது சிறந்ததுதான். ஆனால் அவை எல்லாம் நடக்குமா?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment