Saturday, January 21, 2017

மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எளிதில்குணப்படுத்துமளவு ஆரம்ப நிலையில் இல்லை...கவிஞர் தணிகை...

இனி ஒரு நொடியும் பொறுக்க முடியாது என கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவதுதான் புரட்சி என்பார் ‍‍‍‍___விளாடிமிர் இலியச் உல்யனோவ் என்னும் லெனின்

வன்முறை என்பது தவறானது ஆனால் அடிமைத்தனம் என்பது அதை விட தவறானது என்பார் _____ நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்.


Image result for lokesh salem rail roko

1965ல் தமிழகத்தில் எழுந்த மாணவர் எழுச்சிக்கும் பிறகு இதுதான் மாபெரும் எழுச்சி என்கிறது வரலாறு.

தமிழகமே ஒரு குரலில் ஒருமித்து நிற்கிறது அந்தக் கல்லூரி மாணவர்களோடு

இப்போதும் கூட பூர்வா ஜோஷிபுரா என்னும் 40 வயது மங்கை இவர் அமெரிக்காவில் பிறந்தவர், ராதா இராஜன் பாட்டி போன்றோர் உண்மை நிலையை உணராமல் வாயை வார்த்தையை ஊடகத்தில் விட்டு இருக்கின்றனர்

தமிழர்க்கு ஜல்லிக்கட்டின் சரித்திரம் தெரியாது, சட்டம் தெரியாது என்றெல்லாம் ...விட மாட்டோம் சட்ட பூர்வமாக எங்கள் இயக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என‌

உச்ச நீதி மன்றம் அதாங்க உச்சிக் குடுமி நீதி மன்றமும் ஒரு வாரத்துக்கு எந்த உத்தரவும் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக இட மாட்டோம் என சொல்லியுள்ளது இன்னும் மாண்டு போன ஜெவின் வழக்கிலே கூட ஒரு தீர்ப்பைத் தரமுடியா கையாலாகா

கர்நாடகா காவிரி பிரச்சனையில் ஒன்றும் செய்ய கையாலாகா

பாபர் மசூதி இராமர் கோயில் பிரச்சனையில் ஒன்றும் செய்ய இயலா

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளத்து எதிர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலா....

உச்சிக் குடுமி நீதிமன்றம் தமிழர்க்கு எதிர்ப்பாக மட்டும் ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடித்துக் கிடப்பதாக‌

சட்ட இயல் முன்னால் அட்டர்னி ஜெனரல் நீதிமான் எனப்படும் சோலி ஜெஹாங்கீர் சொராப்ஜி என்பார்  ஏதாவது இயற்கைப் பேரிடர்களுக்கு மட்டுமே அவசர சட்டம் பொருந்தும், ஜல்லிக்கட்டுக்கா அவுட் ஆப் ஃகொஸ்டீன் என்கிறார்....

எனவே நாம் சொல்வதெல்லாம் இயக்கம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டத்தோடு முடிந்து போய் விடக் கூடாது...நாட்டில் கையில் எடுக்க தலையாய பிரச்சனைகள் எண்ணிலடங்காமல் உண்டு....

இன்று லோகேஷ் என்னும் ஒரு தச்சுப் பணி செய்யும் 16 வயது இளம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது இந்தப் போராட்டத்தின் மூலம் சேலம் ரயில் மறியல் செய்து மின்சார வடத்தைப் பிடித்து தூக்கி எறிந்ததால்...

ஊடகம் தமது பணியை நன்றாகவே செய்திருக்கிறது என்ற போதிலும்...எமது வருகின்ற பதிவுகளின் மூலம் இயக்க ரீதியான முறைகளில் அவை செய்த பிறழ்தல்கள் பற்றி ஏன் இந்த நாட்டில் நிரந்தர மாறுதல்கள் நிகழ அவை என்ன பணியாற்றி இருக்கின்றன என்பது பற்றி எல்லாம் கலந்தாளவ எண்ணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Related image



மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எளிதில்குணப்படுத்துமளவு  ஆரம்ப நிலையில் இல்லை...கவிஞர் தணிகை...

4 comments:

  1. அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. thanks for your comment on this post sir. vanakkam

    ReplyDelete
  3. நல்ல பதிவு. இவ்வளவு பெரிய ஒற்றுமை, போற்றப்பட வேண்டிய ஒழுங்கு அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது. இவ்வளவு பெரிய ஆற்றலை நாம் எவ்வாறு பயன்படுத்தி தமிழ் நாட்டை சீரமைப்போம்?

    ReplyDelete
  4. thanks for your feedback on this post Sampath Kalyan sir. vanakkam.yes really this Question comes to every one's mind...Good Questions...try to find out Answers

    ReplyDelete