Wednesday, December 19, 2018

என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:


என் தாய்த் திருநாடே நேசமிகு வீடே:
வணக்கம்

Image result for I love india

சுமார்   135 கோடி புதல்வர்களாம் உனக்கு. இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கமல்ல நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் வீரியமற்ற மக்கள் தொகைப் பெருக்கமே காரணம்/
சாலையில் வீதியில் செரிமானத்துக்கு உணவுடன் கலந்து விழுங்க வேண்டிய உமிழ் நீரை துப்பி விட்டு அதைப்பற்றிய விளைவை அறியாமல் சுய நினைவில்லாமல் உனது மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்

விடியற்காலையில் பற்களைத் தேய்த்தபடியே பால் வாங்க வருகிறார் ஒரு அரசு அலுவலர் எச்சிலை துப் துப் என தார்ச்சாலையில் துப்பியபடியே ...
அந்த அதிகாலையிலேயே டீசல், கரி எஞ்சின் மாதிரி பீடியும், சிகரெட்டுமாக புகைத்து பொது இடத்தில் எவர் இருக்கிறார் இல்லை என்ற நிலை துளியுமின்றி இருக்கும் இடத்தை புகைமண்டலமாக்கி அடுத்தவரையும் நோயாளியாக்குகிறார் உங்கள் மக்கள்

எங்கள் ஊர் சுடுகாட்டருகே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை என்றும் ஜெ ஜெ என்று இருக்கிறது பக்கத்திலேயே சுடுகாடு இருப்பது ஒர் நன்மைக்கே
கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி பெற்றோர்க்கு பிள்ளையில்லமலே ஆகி விடுகிறார்கள். இதெல்லாம் உண்மைகள் கூச்சப்படாமல் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மைகள்...

மகாத்மா ஆரம்பித்து வைத்த இந்த தூய்மை பாரதத்திட்டம் அவரைப்போலவே கிழடு தட்டிப் போய்விட்டதோ? இந்தக் கட்சிக்காரர்கள் எல்லாமே எல்லா கீழ் தட்டு மக்களுக்கும் நன்மை செய்வதாகச் சொல்லித்தானே பதவிக்கு வருகிறார்கள்...அதை எல்லாமே வாக்கு விகிதாச்சார முறைகளில் ஏன் பதவியையும் பிரித்துக்கொண்டு ஆளவரக்கூடாது? இவர்கள் ஆள்பவராக நாங்கள் இன்னும் ஆளப்படுபவராகவே இருக்கிறோம். எப்போது பதவிக்கு வருவது சேவை செய்ய  வருவதுதான் என உணர்தலும் புரிதலும் ஏற்படுகிறதோ அப்போது இந்தியா மேலும் உன்னத நிலை அடையும்.

இந்த பாரத நாட்டில் சிறுமிகளும், பெண்களும் வயது வேறுபாடின்றி பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொன்று குவிக்கப்படுகிறார்கள்.  இரையாகிறவர்களும், இரைக்கு குறிவைத்து வேட்டையாடுபவர்களும் உனது பிள்ளைகளே
Image result for I love india
பொருளாதாரத்தில் நான் மிகவும் பின் தங்கிய நிலையில்தான் வாழ்கிறேன் காமராசர், கக்கன், ஜீவா போல.எனது உடலுக்கு சேவை செய்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பிணி என்னுடன் தொடர்கிறது. இப்போது என் உடலுக்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் மருத்துவக் கல்வி சார்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் பணி புரிந்து வருகிறேன். ஆனாலும் என்னிலையிலிருந்து நான் வீழ்வேன் என நீ நினைத்தாயா?

இந்த நாட்டின் ஆதிவாசிகளுக்கு , பழங்குடிகளுக்கு, மலைவாழ் மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் தம் வாழ்வை மேம்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத இன மொழி பேதமின்றி 1985 முதல் 1995 வரை மட்டுமல்ல ஏன் இன்று வரை கூட உழைத்து வருகிறேன். அப்படி கடுமையாக உழைத்ததன் விளைவாக தொழுநோய் முதல், மலேரியா, டைபாய்டு, உணவுக் குழல் தழற்சி, மூலம்  குடல்புண் இப்படீ தொடர்ந்த பிணிகளால் பாதிக்கப்பட்டு உடல் ஒத்துழைக்க மறுப்பதும் பேருந்துகளில் பணி முடித்து நின்று கொண்டு வருவதும் துன்பமாகத்தான் இருக்கிறது.

எனது இளமைப்பருவம் 25 வயது முதல் 35 வயது வரை நாட்டின் மிக உச்சமான சேவைக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 24 மணிநேரமும் அதற்கே செலவளிக்கப்பட்டது.அதற்காக நான் கடந்த ஆறுகளும், மலைகளும் துன்பங்களும், துயரங்களும் வெகு அதிகம். என்றாலும் டாக்டர் மாதவன் M.B.B.S. D.O,  எம்.பி.பி.எஸ் .டி.. என்ற நாமக்கல்லில் இருந்து வந்த மருத்துவர் ஒருவர் 1988ல் எல்லாப் புகழுரைகளையும் மீறி அப்போது அவர் கண்ட எனது உழைப்பை பாராட்டி வருகையாளர் பதிவேட்டில் இவருடைய உழைப்பும் மகாத்மா காந்தி , மதர் தெரஸா உழைப்பை போன்றதுதான் என வழங்கிய பாராட்டுச் சான்று நான் பெற்ற பாராட்டுகளிலே மகுடம் வைத்தது போலானது.

நான் இந்தியக் குடியரசுத் தலைவர் மக்கள் குடியரசுத் தலைவர் மேன்மைமிகு டாக்டர் ..ஜெ அப்துல் கலாம் அவர்களிடமிருந்து இலஞ்ச ஒழிப்பு பற்றிய அறிவுரையை கடித வழியாகப் பெற்றதும்,  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேன்மை மிகு பி.என் . பகவதி அவர்கள் வீற்றிருந்த சபை மேடையில் கிராம முன்னேற்றப் பணிகளில் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு நிலை பற்றி சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசியதும் அதன் பின் அவருடன் ரிட்ஜ் நட்சத்திர அந்தஸ்து உணவகத்தில் உணவுண்டு கலந்தளாவியதும் எனது சேவைக்கு கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சிகள்.
Image result for I love india
இவை எல்லாம் பெரிய சாதனைகளா? என எவர் வேண்டுமானாலும் கேட்கலாம், இந்த நாட்டின் உண்மைக்குடி மக்களுடன் ஒரு உண்மையான குடிமகன் சந்திப்பதும், பேசுவதும், எழுதிக் கடிதங்கள் பரிமாறிக் கொள்வதும் நாட்டின் கிராம முன்னேற்றம் பற்றி சிந்திப்பதும் மிகவும் அவசியமானத்தேவைதான்.

நாட்டில் ஒவ்வொரு இளைஞரையுமே இது போல ஓரிரண்டாண்டாவது கிராம முன்னேற்றத்திற்கு உழைக்கச் சொல்லி பயிற்சி அளிக்க வேண்டும். அது இராணுவத்தில் சேருவதாக இருந்தாலும் சரி அதையே முன் தகுதியாகக் கொள்ள வேண்டும்.

இந்தியக் கிராமங்களில் இன்னும் வசதி வாய்ப்புகள், தொழில் நுட்பங்கள், தகவல் பரிமாற்றங்கள்,கலாச்சார நாகரிகம் எல்லாம் குறைவாகவே நகர் புறம் சார்ந்தே மருத்துவம் கல்வி போன்ற மனித வாழ்வுக்கு அத்தியாவசியத் தேவையனைத்தும் பிரமிட் வடிவத்தில் குவிந்து கிடக்கின்றன.
எனவே அங்கே ஒவ்வொரு படித்த இளைஞரை, பெண்களை கொண்டு சென்று வாழும் நிலையைப் பற்றி பகிர்ந்து புரிந்து கொள்ள பொருளாதார்த்தில் கடைசித்தட்டு வாழ்வு எத்தகையது எனக் காட்டிக் கொடுக்க வேண்டும்...அங்கு சித்ரவதைப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு எதாவது செய்ய முடியுமா என அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். சிந்திக்கட்டும் ஏதாவது செய்ய முயற்சிக்கட்டும் உழைக்கட்டும் பிறகு என் போன்றோரைப் பார்த்து எந்தக் கேள்வி வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கேட்கட்டும்.

ஏன் இப்படி சொல்கிறேன் எனில் இன்று மக்களுக்கான சேவை செய்வதும், கிராம முன்னேற்றம் செய்ய முயற்சிப்பதும் அத்தனை கடினமான பணியாகியிருக்கிறது. ஆனால் இது இராணுவ பாதுகாப்புப் பணிகளை விட மிக முக்கியமானது. அப்படி சேவைக்கு தமது வாழ்வில் ஒரு பகுதியாவது செலவு செய்வாரை மட்டுமே உனது குடிமக்களாக நினைக்க வேண்டும் என்பதுதான் நான் சொல்வது அவ்ர்களைத்தான் மதிப்பிற்குரிய மக்களாகவே கருத வேண்டும்.Image result for I love india

மற்றபடி உன்னிடம் மாறுபட்ட கலாச்சாராம், மதங்கள், இனங்கள், மொழிகள், வித்தியாசமான காடுகள், மலைகள்,மண்வளங்கள், நீர் நிலைகள், விண்ணியல் சாதனைகள் , உலக அதிசயங்கள், விண்ணை முட்டும் கோபுரங்கள்,வானளாவிய கட்டடங்கள் இதெல்லாம் பெருமைக்குரியதுதான் ஆனால் அதன் மதிப்பை அறியாத மூட மாந்தரை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்...பழங்கால சிற்பங்கள் மேல் சுண்ணாம்பை , வண்ணத்தை தீட்டி அதன் அருங்கலையை மூடி மறைப்பாரை என்ன வார்த்தை சொல்லி பாராட்ட இயலும்?

அடுத்து இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு என்பது சில மனிதர்களிடம் செல்வம் குவிந்து செல்வதும் அரசியலாரைக் கொண்டு அவர்கள் குனிந்து கொள்ளவும் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு நீக்க முடியாத பந்தம் உருவாகி நாட்டின் ஏழ்மை நிலையை மாற்ற முடியாது வளர்ந்து வருவதும்
தவிர்க்க முடியாததாகி உள்ளது.  எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வெண்மைபுரட்சி, பசுமைப்புரட்சி நீலப்புரட்சி என்றெல்லாம் செய்தாகிவிட்டது. அதனால் நமது இந்திய பாரம்பரிய விதிகளும், விதைகளும் நாசமாகிவிட்டன. நமது மஞ்சளை வாங்கி மவுத் வாஷில் கலந்து புதிய பிராண்டாக அமெரிக்க நாடு நமக்கே விற்பனை செய்து வருகிறது...இப்போது விவசாயத்துக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லை. மாபெரும் ஆலைகளுக்கும் பன்னாட்டு நிறுவனஙக்ளுக்கும் அதன் முதலாளிகளுக்குமே வங்கிகளும், அரசுகளும் படியளக்கின்றன. அவை திரும்பி வராது என்று தெரிந்தே இவை நடக்கின்றன

இசையில் பெரும் சாதனை, சினிமாவில் சாதனை இவை எல்லாம் கீழ் மட்டத்தில் இருக்கும் பசியால் துடிக்கும் வயிறுகளுக்கு உணவாகிவிடப் போவதில்லை. பெட்ரோல் விலையும் பொருட்கள் விலையும், போக்குவரத்து கட்டணங்களும், சரக்கு வாகன வாடகையும் மிகவும் உச்சமாக உயர்ந்து வருகின்றன ஆனால் தனியார் கம்பெனி முதலாளிமார்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் பணி புரிவார்க்கு ஒரு பைசா கூட ஏற்றுவதாக இல்லை. மேலும் மனித வர்க்கத்துள் ஒரு சாரர்க்கு கற்பனை செய்ய முடியா மாத வருமானமும், பெரும் உடல் சார்ந்த உழைப்பை நம்பிய பிரிவினர்க்கு மிகவும் குறைவான கேவலமான மாத வருமானமும் கிடைக்கின்றன.

மனித உழைப்பும், மனித உயிர்களின் மதிப்பும் மிகவும் தாழ்ந்துவிட்டன.
மலிந்து காணப்படுகின்றன. சுயநலம் அனைவர் வாழ்விலும் ஊறிவிட்டது. தியாகச் சுடர்கள் ஏற்றி வைத்த சுதந்திர ஜோதி அணைந்து வெகுகாலம் ஆகிவிட்டது. உலகிலேயே மாபெரும் சிலையை வைக்க முடியும் நம்மால் சாதாரண மனிதருக்கு இன்னும் குடி நீரே கொடுக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் வியாபாரம் என்றாகிவிட்டது. குடிநீரை விற்பனை செய்வது மது விற்பனையை விட பேராபத்து என்று அரசு அனைவர்க்கும் உணர்த்தும் நிலையில் அல்லாது அதுவே தவறான வழியில் சென்று கொண்டு அனைவரையும் தவறான வழிகளிலேயே செலுத்தி கேட்பாரற்ற சாம்ராஜ்யமாக நாட்டை மாற்றி வருகிறது.

எங்கு பார்த்தாலும் தனியார் மயம், உலக மயம் ஏற்பட்டு இந்தியா என்ற நாட்டின் தனித்துவம் அடியோடு அழிந்து பட்டுப் போய் விட்டது.
இந்த நாட்டின் நதிகளை இணைப்போம் என்று எப்போதுமே சில பெரியவர்கள் முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். ஆனால் அதை இணைப்பது சாத்தியமற்றது என்றும், அப்படி இணைப்பது சுற்றுச் சூழலுக்கு ஆகாது என்று மற்றொரு குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இந்த நாட்டின் தேசப்பிதா மகாத்மா போன்றோர் கண்ட இராமராஜ்ஜியக் கனவில் மதமாச்சரியமற்ற பொருளாதாரத்தில் வறுமை யில்லா, போதைக்கு அடிமையாகாத பெண் சுதந்திரம் மற்றும் எல்லா மனிதர்களும் பாரதி சொன்னபடி ஒரே விலை ஒரே நிறையுடன் இருக்க வேண்டும் அதுதான் அவர்கள் நம் நாட்டின் அடிப்படைக்கு செய்த தியாகத்துக்கு பொருள். அது அடையாதவரை இங்கு நடப்பது எல்லாம் ஏமாற்று வேலை. அதற்கு ஒரே தீர்வு அதே பாரதி சொன்னபடி நதி நீரை இணைப்பது ஒன்றுதான்

அப்படி எந்த மகான் செய்கிறாரோ அவர் பேர் மகாத்மாவின் பேரையும் பின்னுக்குத்தள்ளும் இந்தநாட்டின் வலுவான தலைவர் என்ற பேரை படேலையும்விட நேருவையும் விட மக்கள் மனதில் சொல்லும்.
இந்த இந்திய  நாட்டின் நீர்ப்பாசனத் தந்தையாக விளங்கி தமது சொந்த நாடான இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று அபராதமும் தண்டனையும் பெற்ற சர் ஆர்தர் காட்டன் கனவு நிறைவேறினால் மட்டுமே அந்தப் பொருளாதாரச் சுதந்திரத்தை இந்திய மக்களாகிய உனது பிள்ளைகள் அனைவரும் எட்ட முடியும் இல்லாவிட்டால்  மாதமொன்றுக்கு 300 கோடி அம்பானிமார்கள் ஈட்டிக்கொண்டிருக்க தமது கோடீஸ்வர மதிப்பில் உயர்ந்தபடியே இருக்க எம் போன்ற சேவை செய்யும் நாட்டுப் பற்றாளர்கள் செத்து சுண்ணாம்பாய் ஆவதுதான் எப்போதும் நடந்தபடி இருக்கும். இதுதான் உனக்குத் தேவையெனில் பாரத நாடே, தாய்த்திரு நாடே இப்படியே நீ எதையும் கண்டுகொள்ளாதிருக்கும் நீதி தேவதை போல நீயும் கண்டும் காணாதிரு. உறங்கிக் கொண்டே இரு...

சு. தணிகாசலம்


Tuesday, December 11, 2018

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க: கவிஞர் தணிகை


                                 பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க

. பாலாஜி B.E                                    14 12 2018         Dr.R.G..ஜனனி M.D.S

 இடம் : ஸ்ரீ தேவி திருமண மஹால்,  அவினாசி சாலை நீலாம்பூர் கோவை.

என்னைக் கவிஞர் என்கிறார்கள், கவிஞர் வாக்கு பொய்க்காது

அழகிரிக் குடும்பத்தின் குலக் கொழுந்து பாலாஜி ஜனனியுடன்
கிளை பரப்ப பூ விரிக்க விதை சேர்க்க  மகரந்த சேர்க்கை நடத்தும் காலம்
மணவிழாக்கோலம் .

இப்போது அழகிரிக் குடும்பத்தை எப்படி வாழ்த்துவது என
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
Image result for beautiful scenes of nature to marriage wishes
கல்லூரி இரண்டாமாண்டில் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டதிலிருந்து
நாற்பது ஆண்டுக்கும் மேலும் எங்கள் பந்தம் தொடர்கிறது
இவனைப் பெற்றவரிலிருந்து அவர்களைப் பெற்றவரிலிருந்து
இவன் பெற்றது வரை நாங்கள் தொடர்ந்து வருகிறோம்
 Related image
எல்லாவற்றையும் சொல்ல மொழி இல்லை, எழுத சொல் இல்லை

அழகிரியின் குடும்பத்துக்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன்
கைம்மாறு செய்ய என்னிடம் ஏதும் இல்லை...
என் பெரிதுவக்கும் வார்த்தைகளையன்றி
 Related image
வார்த்தைகள் சில நேரம் உறவுகளின் நெருக்கத்துக்குள் புகுந்து
இடைவெளி ஏற்படுத்தி விடுகின்றன ஆனாலும்
அடையாளமாகி என்றும் நிற்கின்றன.

வாழ்வது என்பதன் மகத்துவம் குல வளர்ச்சியில்
வாழ்வாங்கு வாழ்வது என்பது உறவின் மலர்ச்சியில்
இந்த "சீனாக்காரன்" மிகவும் அதிர்ஷ்டசாலி என்பார்கள்
எப்போதும் விளையாட்டுப் பிள்ளை இன்றும் என்றும்

Image may contain: 2 people, including தமிழ்மகன், people smiling, hat, eyeglasses and closeup


எனது குடும்பத்தின் வாழ்த்துகளும் ஆசிகளும்
இவனது குடும்பம் சேரும்
"மணமக்கள் பதினாறும்  பெற்று பெரு வாழ்வு வாழ்க"!


அன்புடன்: சு. தணிகை, ..வடிவு தணிகை மணியம்.

Image may contain: 1 person, outdoor


Sunday, December 9, 2018

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை

நாலரை கிலோவும் நானும்: கவிஞர் தணிகை
Image result for body weight related with sweets


காதல் என்பது இனிப்பு விஷம் என ஒரே மாதிரி நீலக்கலர் யமாஹா வைத்துக் கொண்டிருந்த 3 நண்பர்களுள் ஒருவர் எழுதி வைத்துக் கொண்டிருந்தார். அது அன்று. இன்றும் என்றும் காதல் என்பது எப்போதும் ஒரு இனிப்பான வசியமான விஷயம்தான்  என்பது வேறு அது பற்றி நான் சொல்லப் புகவில்லை. எனது இப்போதைய பகிர்வு உங்களுக்கும் ஒரு நாள் உதவலாம் என்றே...

எனது உறவுப் பெண் ஒன்று விட்ட சகோதரியின் மகள் குழந்தை எடை குறைவாகவே இருக்கும் நாங்கள் அவனுக்கு பேர் சொல்லாமல் ஒன்றரை கிலோ என்றே கேலிக்காகவும் கிண்டலுக்காகவும் அழைப்போம். அதுவும் இப்போது சொல்லவில்லை ஏன் எனில் குழந்தைகள் பருவத்தில் மிகவும் மெலிந்து காணப்படும் பெண் குழந்தைகள் திருமணமாகிய பின் பார்த்தால் மிகவும் பருத்து விடுகின்றனர். இதையே முன்னோர்கள் பெற்ற இடத்தில் ஒல்லியாக இருக்கும் பெண்கள் புகுந்த இடம் போனபிறகு குண்டாக ஆகிவிடுவதும் பிறந்த இடத்தில் குண்டாக இருக்கும் பெண்கள் புகுந்த இடத்தில் போனதும் ஒல்லியாக ஆகிவிடுவதும் இயல்பாக இருக்கிறது என்கிறார்
Related image
ஆனால் இதை எல்லாம் மீறிய விதிவிலக்குகள் அல்லது இவை எல்லாம் பொருந்தாத  நபர்களும் உண்டு...எதற்கு இந்த பீடிகை என்கிறீர்களா?

வழக்கம் போல அன்று வேம்படிதாள அரசு மருத்துவமனைக்கு எங்கள் கல்லூரியின் மருத்துவக் குழுவினர் சென்றிந்தோம். அங்கு வாரம் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் எங்களது பல் மருத்துவக் குழு காலை பத்து மணி முதல் பனிரென்டு வரை முகாம் செய்து மருத்துவ சிகிச்சை செய்வது வழக்கம் இது தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடந்து வருவதுதான் ஓய்வு நேரத்தில் முன்னால் உள்ள புற நோயாளிகள் பிரிவில் காத்திருக்கும் நோயாளிகளுக்கு புற நோயாளிகளுக்கான அனுமதிச் சீட்டு, உள் நோயாளிகள் எனில் அதற்குண்டான அனுமதிச் சீட்டு, மேலும் மருந்து எடுத்துத் தரும் கம்பவுண்டருக்கு சற்றே உதவும் வண்ணம் அவருக்கு மருத்துவர் பார்த்த பின் கொண்டு வரும் எண்களுக்கான மருந்துப் பொருட்கள் யாவை எனக் கணினியில் அச்சடித்து அவர் கேட்கும் ஊசி இருக்கா எனப் பார்த்துச் சொல்லுதல் இப்படி அங்கே இருக்கும் சித்த மருத்துவ நண்பர் முதல் அனைவரும் அங்கு எனக்கு நல்ல நட்பு. உதவியாளர்கள் செவிலியர் யாவருமே...

யதேச்சையாக எடை போட்டுப் பார்த்தேன் அறுபத்து நாலரை கிலோ என்று அந்தப் பெண் செவிலியர் கூறினார். நம்பவில்லை. நம்பமுடியவில்லை. தாஸ் நீங்களே வந்து பாருங்கள் என்றார். தாஸ் என்பவர் அந்த மருத்துவ மனையின் ஆன் இன் ஆல் அழகு ராஜா...உதவியாளர்... அவரும் அப்படியே சொன்னார் ....மெஷின் ஏதாவது ரிப்பேரா என்றேன்...

ஏன் எனில் மிகவும் கவனமாக ஹெல்த் பேண்ட் எல்லாம் கட்டிக் கொண்டு நடைப்பயிற்சியில் எல்லாம் முழுமையாக ஈடுபட்டு எனது உடல் எடையை 60 கிலோ கிராம் என்றே பராமரித்து வரும் எனக்கு ஒரேயடியாக நாலரை கிலோ அதிகம் என்றவுடன் ஏற்க முடியவில்லை.

எனக்குத் தெரியாமலே எந்த இடைஞ்சலும் தொல்லையும் தராமலே அது அதுவாக இருப்பது போலவே இருந்து கொண்டு எடை கூடியிருந்தது.... உடனே எங்கு என்ன என பரிசீலித்தால் ஒன்றுமே புரியவில்லை எல்லாம் அதனதன் போக்கில் இருப்பதாகவே பட்டது.
Image result for body weight related with sweets
ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் செய்தி மூட்டையை அவிழ்த்தவுடன், கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏகப்பட்ட சாக்லேட், டென்மார்க்கிலிருந்து ஆசை ஆசையாய் தங்கை மகள் வாங்கி வந்த வித விதமான வகை வகையான சாக்லேட்கள், தீபாவளி இனிப்புப் பண்டங்கள்,கேக், மற்றும் சரவணாவின் நெய் பிஸ்கட்கள்,திருப்பதி இலட்டுகள்  இப்படி இந்த பருவம் எல்லாம் விளையாடி இருந்தது குறிப்புகளாய் தரப்பட்டது... இத்தனைக்கும் உப்பு, சர்க்கரை, மூலம், குடல்புண், உணவுக் குழல் தழற்சி , உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளதன் அறிகுறிகள் யாவற்றையும் அடக்கி ஆண்டு வரும் உணவுக் கட்டுப்பாடு எல்லாம் அனுசரித்து வருவதும் என்னுடன் இருக்கிறது. இது மலேரியா டைபாய்ட் தோல் வியாதிகள் என யாவற்றையும் வெற்றி கண்ட உடல்.

மேலும் அடிக்கடி மலைப்பிரதேசங்களில் பணி புரிந்தபோது வயிற்றுப் போக்கு அவ்வப்போது நிகழ அதன் பலனாய் ஆர்வோ வாட்டர், வடிகட்டி, காய்ச்சி, செம்புக் குடத்தில் ஊற்றிய நீரை அன்றாடம் பணிக்குச் செல்லும்போது எடுத்துச் செல்வது போன்றவையும், வீட்டில் கருஞ்சீரகம் வெந்தயம், மாலையில் நடைப்பயிற்சியில் சிறிய அளவு 10 எண்ணிக்கை ஆவர மொட்டுகள், சில வில்வ இலைகள் இப்படி எல்லாம் உட் கொண்டு எந்த பிணியும் தற்போதைக்கு அண்டாமல் விரட்டி வருவதும் உண்டு வருவதை மிகச் சரியாக கடைபிடிப்பதும் உண்டு.

அன்று முதல் இனிப்பு சாப்பிடுவதில்லை வயோதிகம், உடல் தேய்மான அறிகுறி ஆகியவற்றை அலட்சியம் செய்து சிறு பிள்ளைகள் போல, குழந்தைகள் போல விருப்பப் படி இனிப்புகளை  உட்கொண்டதன் விளைவு...இந்த சத்தமில்லாத விஷ(ய)ம் நடந்திருக்கிறது.
Image result for rajaji and gandhi
இராஜாஜியும் காந்தியும் தன்னிடம் வந்த பெற்றவளுக்கு இந்தப் பிள்ளை அதிகம் இனிப்புப் பண்டம் சாப்பிடுகிறான் இவனுக்கு அறிவுரை சொல்லுங்கள் எனக் கேட்டு நீங்கள் சொன்னால் கேட்பான் என்றதற்கு சில வாரங்கள் கழிட்து வாருங்கள் எனச் சொல்லி விட்டு அந்த சில வாரங்கள் கழிந்து வந்த தாயுடன் மகனுக்கு அது தவிர்க்கப்பட வேண்டியதுதான் என்று அறிவுரை சொன்னார்கள். ஏன் அதை அந்த சில வாரங்களுக்கும் முன்பே சொல்லி இருக்கலாமே என்றதற்கு அது முடியாது ஏன் எனில் அப்போது நானே அப்படி சாப்பிட்டு வந்ததால் அதை சொல்ல முடியாமல் போயிற்று. அதன்பிறகு அதை நான் கடைப்பிடிக்க ஆரம்பித்ததால் இப்போது சொல்லும் தகுதி வந்து விட்டது எனவே இப்போதுதான் சொல்ல முடிந்திருக்கிறது என்றார்களாம்.

இன்று மூதறிஞர் இராஜாஜி பிறந்த நாளாம்.

நான் இந்த விஷயம் தெரிய வந்தவுடன் அதாவது பிறந்த நாள்  பற்றி அல்ல...இனிப்பு என்பது உடல் எடையைக் கூட்டி கொழுப்புச் சத்தை வேண்டாத கொழுப்புச் சத்தை உடலில் ஏற்றும் என்று தெரிந்த சில நாட்களுக்கும் முன்பிருந்தே அதை துறந்து விடத் தீர்மானித்து விட்டேன்.
இனி நானும் மற்றவர்களுக்குச் சொல்லலாம் தானே...


உடனே தங்கை சொல்கிறார்  அவர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியை. அதெல்லாம் விட வேண்டியதில்லை. பாதாம் பருப்பு வாங்கி கொதி நீரில் போட்டு வேக வைத்து அதன் தோலை நீக்கி விட்டு சில பருப்புகள் சாப்பிட்டால் போதும் உடல் கொழுப்பு தானாக குறைந்து தேவையான அளவுக்கு வந்து விடும். இனிப்பு சாப்பிடுவதை எல்லாம் அறவே விட வேண்டாம் கொஞ்சம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிறார். ஆனால் எதற்கு அந்த விஷப்பரிட்சை எல்லாம். மாதாந்திர மளிகை செலவில் வீட்டம்மா பாதாம் பருப்பு ஹார்லிக்ஸ் கறுப்பு கொட்டை திராட்சை போன்றவை  வாங்கும் அளவுக்கு பொருளாதார வசதி இடம் கொடுக்க வில்லை என்றும் சொல்லி விட்டார்.  எனவே விட்டு விடுதல் நல்லது. இதற்கும் மேல் ஆசைப்படாமல். துறந்து விடுவது நல்லது. துறவு நிலை நல்லது. திருவண்ணாமலை மூக்குப் பொடி சித்தர் நிறைவடைந்து விட்டாராம். நீர் உணவு எடுத்துக் கொள்ளாமலே...வயோதிகத்தினால். கடலூரின் கடற்கரைச் சென்று கடலை ஏன் சத்தமிடுகிறாய் அமைதியாய் இரு என்றாராம்...அதன் பின் புயல் வந்ததாம்...மூக்குப் பொடியை மட்டும் ஏன் இவர் விடாமல் இருந்தார் எனத் தெரியவில்லை...எல்லாம் செய்திகள் தான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.