Friday, July 3, 2026

கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை

 கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை



அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடு விண்ணில் வீசு!


திரு விளக்கை ஏற்றுவதை விட தெரு விளக்கு ஏற்றுவது சிறந்தது!


பயன்படுத்தா பொருள் பரண் மேலே ...பழமொழி

பயன்படுத்தா பொருள் வண்டிக்காரருடன் ...புது மொழி


ஒழுக்கமிலா ஆட்சியின் கீழ் ஒழுக்கமிலா மக்களுக்கு வாழ்வது பிடிக்கும்


சேற்று நிலத்தில் பட்ட மயிலின் தோகையை கழுவி விட ஆசை...


குயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


பறவைகளுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


விலங்குகளுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை...


நம்பிக்கை வை நம்பி கை வை...

நம்பியவர்க்கு நடராஜன் நடராஜன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூதுவன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூது வந்தான்

நம்பாதவர்க்கும் நம்புபவர்க்கும்

கவிஞர் மகிழ்வதற்கும் கோபத்திற்கும் காரணங்கள் வேண்டியதில்லை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை