Saturday, February 22, 2025

மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை

 மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை




22.02.2025 இன்று சுமார் எழுபது கோடி ரூபாய்களுக்கும் மேலான திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டும், நிறைவடைந்த பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வுகளும் மேட்டூர் பேருந்து நிலைய அழகிய பந்தல் வளாகத்தில் நடைபெற்றது. மேட்டூர் பேருந்து நிலையம் இன்று முதல்  புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது அதை நகராட்சிதுறை அமைச்சர் துவக்கி வைத்தார்.


மாண்பு மிகு அமைச்சர்கள், கே.என். நேரு, எஸ். ராஜேந்திரன், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள்:  சேலம் செல்வகணபதி, தர்மபுரி மணி,கள்ளக்குறிச்சி மலையரசன் கூடுதல் மாவட்ட ஆட்சியர், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சதாசிவம்,நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஆகியோர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.


அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திட்டங்களைத் துவக்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் சேலம் மாவட்டத்துக்கான தமிழக அரசின் பங்கு பணிகளை எடுத்துரைத்தார்.


வழக்கம் போல மண்ணின் மைந்தர் சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்கள் அவருக்கே உரிய பாணியுடன் மக்கள் பிரச்சனைகளை எடுத்து இயம்பி அரசின் திட்டங்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சிகளை  சிறப்பான முறையில் நகராட்சித் துறை மற்றும் குடி நீர் வழங்கல் துறை ஏற்பாடு செய்திருந்தது.பொது மக்களின் மனுக்களும் பெற்றுக் கொள்ளப் பட்டன.திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment