Sunday, December 31, 2023

THE RAILWAY MEN

 ரெயில்வே மென்: கவிஞர் தணிகை



நவம்பர் 18. 2023ல் சுமார் 50 முதல் 65 நிமிடங்கள் ஓடும்படியான 4 பகுதிகளாக வெளிக் காட்டப் பட்டுள்ள நல்ல தொடர் சினிமா இந்த ரெயில்வே மென். ரயில்வே மனிதர்கள்.


தப்பும் தவறுமாக ரயில்வே இருக்கும். இந்தியாவின் ஏன் உலகிலேயேக் கூட பெரிய ரயில்வேத் துறை இந்தியாவுடையது. இதெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அற்புதப் பணியை உயிர்களை ஆயிரக்கணக்கில் காத்த பதிவை நம்மையும் பார்க்க வைத்து உணர வைத்திருக்கிறார்கள்.


மாதவன் ஜுஹி ஜாவ்லா  தவிர பெரும்பாலும் நமக்கு அதிகம் அறிமுகம் இல்லாத முகங்கள். காரணம் இந்தித் தொடரின் மொழிபெயர்ப்புதான் இது.


ஆனால் ஹாலிவுட் ஸ்டைலில் இதயத்தைப் பிழிந்து விடுகிறது. அழுது கொண்டே கைத் தட்டியபடி பார்க்க வேண்டியதாக இருக்கும் இந்த மினி சீரியல் ஒரு வெப் தொடராக வந்திருப்பதை ஒரே நாளில் விடாமல் பார்த்து முடித்துவிட்டுத் தான் மூச்சு விட்டேன். காரணம்: போபாலில் 1984ல் நடந்த யூனியன் கார்பைட் வாயுக் கசிவின் போது வெளிப்பட்ட பெருந்துயரம்.


உண்மையிலேயே எடுக்கப் பட்டதுதானா? இல்லை அந்தக் காலக் கட்டத்தை அப்படியே எடுத்து நம் முன் தந்துள்ளார்களா என எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது காட்சி அமைப்புகள்


ரெயில்வே நிலையத்தின் தலைவராக வரும் உண்மைப் பாத்திரம் உண்மையிலேயே இறந்ததாகக் கருதி அதன் பின் பிணவறையில் இருந்து 3 மணி நேரத்துக்கும் மேலான பிறகு உயிர் பெற்றதான நிகழ்வு அவர் செய்த புண்ணியத்துக்கு பிராயச் சித்தமானது என நம்மிடம் ஒரு எண்ணம் எழ வைக்கிறது.


எக்ஸ்பிரஸ் திருடனாக இருந்தவர் எப்படி இவரைப் பார்த்து இவரது செயல்பாட்டைப் பார்த்து மனந்த் திருந்துகிறார் என்பதும்


யூனியன் கார்பைட் நிறுவனத்தில் பணி புரியும் அந்த முக்கியப் பணியாளர் எப்படி தமது உயிரையும் பொருட்படுத்தாமல் 5 ஆம் வாயு உளையை தொடர்பிலிருந்து விபத்து நேராமல் துண்டிக்கச் செய்து அதன் பின் இறக்கிறார் என்பது,


இப்படி நடந்தே தீரும் என்ற நிலையை உலகுக்கு வெளிப்படுத்தி அதைப் பற்றி எவருமே அக்கறை கொள்ளாத போதும் கடமையை அபாயத்தை முன் கூட்டியே வெளியிட்ட‌ பத்திரிக்கையாளர் எப்படி அந்த பெரும் இடரிலிருந்து உயிர் பிழைத்து முடிந்தவரை பிறரைக் காப்பாற்றி இந்தக் கோவிட் 19ல் கொரானாத் தாக்கி உயிரிழந்தார் என்பது இவை மட்டுமல்ல‌


ரெயில்வே ஊழியர்களை எப்படி மாதவன் ஒருமுகப் படுத்தி இந்த இடரில் மேலும் உயிர்கள் பழியாவதை தடுக்கிறார் மேலும் அந்த முகமதியரியாஸ் எனப்படும் பயிற்சி ஓட்டுனர் செயல்பாட்டாளர் ரெயில்வே நிலையத் தலைவருக்கு எப்படி உறுதுணையாக செயல்பட்டு உயிர் இழக்கிறார்


இதனிடையே இந்து சீக்கியக் கலவரத்தில் பிரதமர் இந்திராவின் துப்பாக்கிச் சூட்டிற்கு பழி வாங்க வாளெடுத்து சீக்கியரைக் கொல்லப் புறப்படும் வெறியர் கூட்டம் அதனிடையே சிக்கும் 2 சீக்கியர்


இப்படி எந்த இடத்திலும் தொய்வில்லாத ஆங்கிலப் படம் பார்ப்பது போன்ற உணர்வு. இந்த தொடருக்கு நாட்டின் உயரிய விருதை வழங்க எல்லாத் தகுதிகளும் இருக்கிற திரைப்படம்.


தொலைத் தொடர்பு இணைப்புத் துண்டாகி இருக்கும் போபால் ரயில் நிலையத்தின் வழி வரும் விரைவு தொடர்வண்டிகளை அதை உரிய வழியில் மட்டுமே அணுகத் தூண்டும் கதை அமைப்பு அதை அமலாக்கும் ரெயில்வே மனிதர்கள்... சொல்ல மொழியில்லை பாராட்ட அளவு தேவையில்லை.


சிறந்த அனுபவத்தை அளித்திருக்கிறது  இந்த தொடர் பகுதிகள்.இந்திய சினிமாவில் இப்படியும் செய்யலாம் என்று முயன்றுள்ளனர்.

அனைவரும் காண வேண்டும்.

ஈரத் துணி முகக் கவசம் தான் எண்ணிறந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறது. அழுகிய முட்டைக் கோஸ் நாற்றம் நுரையீரலை கண்களை எப்படி பாதிக்கிறது என்ற கொடூரங்கள்...என்ன விஞ்ஞானமோ எழவோ என்று பார்க்கும்போதே சபிக்கத் தோன்றுகிறது

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

p.s:அமெரிக்க நீதி இன்னும் கிடைக்கவில்லையாமே...இந்தியாவில் இதெல்லாம் சகஜம் என்கின்றனர் ஐரோப்பியர். அதிலும் ஒரு நல்ல அறிவியல் அறிஞர் தென்படுகிறார் அவரையும் செயல்பட விடாமல் தடுக்கின்றனர்.15 ஆயிரம் குடும்பங்களுக்கு கொள்ளி வைத்த அந்த மீத்தேன் ஐசோடப்புக் கசிவுக்கு அந்த இந்தியாவில் நடந்த ஜப்பான்  ஹிரோஷிமா, நாகசாகிக்கு எப்போதுதான் நீதி கிடைக்கும்?

No comments:

Post a Comment