Saturday, September 9, 2023

அரசியலும் சினிமாவும் சுரண்டலின் இரு வேறு முகங்கள்: கவிஞர் தணிகை

 அரசியலும் சினிமாவும் சுரண்டலின் இரு வேறு முகங்கள்: கவிஞர் தணிகை



இரு நிகழ்வுகளின் காட்சிகளை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.


1. ஹரீஸ் சால்வே இந்தியாவின் மாபெரும் வழக்கறிஞர் வயது 68. மூன்றாம் மணம் செய்கிறார் இலண்டனில் விருந்து. கலந்து கொண்ட‌வர்கள்: இந்திய அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி லலித் மோடி இந்தியன் ஐபிஎல் ஊழல்வாதி, மற்றும் முகேஷ் அம்பானி போன்ற இந்தியாவின் மாபெரும் மனிதர்களாகக் கருதப்படுவார் யாவரும் இந்தியத் தலைமைப் பதவியில் உள்ளாரின் நண்பர்கள் என்றும் சொல்லலாம்.இந்த செய்தியை ஊடகங்கள் உற்சாகமாக வெளியிட்டிருந்தன.


பெரியார், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் போன்ற வயது முதிர்ந்தார் கூட இளமங்கைகளை மணந்த வரலாறுகள் தமிழகத்திற்கும் உண்டு. குற்றவாளிகளாகக் கருதப்படுவாரை கடவுளாக போற்ற வேண்டும் என்ற எம்.ஜி.ஆர் திரைப்படவழி வந்த ஆட்சி, அதிகார அரசியல் வரலாறுகளும் உண்டு. எம்.ஜி.ஆரும். வயது முதிர்ந்தாலும் தமது கதாநாயகிகளை இளம் கவர்ச்சி மங்கைகளாகவே வைத்திருந்தார் என்பவை இங்கு மிகையான செய்திகள். ஆனாலும் இவர்களே நமை ஆளப் பிறந்தார்கள்,நமை வழிநடத்தும் ஆட்சி புரிந்தவர்கள்...(சகாயமும், நல்ல கண்ணுவும் இன்னும் இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கது)


2. அடுத்து தமிழகத்தின் சினிமா ஒரு குடும்பத்தின் கையில் என்பதை மறுக்க முடியாத செய்தியாகவே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சினிமா பொங்கி வழிகிற தருணம், இந்த வருவாய், நிதி, இலாபத்தை தனிமைப் படுத்துவதை விட்டு பொதுமைப் படுத்தினால் அதாவது ஆண்டுக்கு எடுக்கப் படும் படங்களின் செலவு இலாபக் கணக்கை சரியாக பயன்படுத்தினால் டாஸ்மார்க் வருவாயை சமன் செய்தி மது விலக்கை அமல்படுதுமளவு...

ஆனால் கார்கள் பல உள்ள ரஜினி போன்றோர்க்கு(+ நெல்சன், அனிருத் எல்லாம் சேர்த்துதான்) கோடிக்கணக்கில் செலவு செய்து கார்களும் சில நூறு கோடிகளும்  இலாப பங்கு பட்டுவடா நடந்ததாக அவர்களின் ஊடகங்களே காணொளிக் காட்சிகளாக மகிழ்கின்றன‌


ஒரு குக்கிராமத்தை தத்து எடுத்து அதில் எல்லா வசதி  வாய்ப்புகளையும் அந்த செலவில் செய்தாலும் பேர் விளங்கும், ஏன் அந்த சினிமாவில் பாடுபட்ட குடும்பத்தார் அனைவர்க்கும் உணவு, உடை, உறையுள் போன்றவைக்கு நிரந்தர ஏற்பாடு செய்தாலும் மக்க்கள் ஆதரவு பெருக தலைமுறையெலாம் நினைவுடன் புகழும் பாராட்டும்... கீழ்த்தட்டில் உள்ள சினிமாக் கலைஞர்கள் வறுமையில் இறந்து கொண்டிருக்கும் செய்திகளும் இருக்கின்றன.


பெற்றார்க்கும், உற்றார்க்கும், ஊர் உறவுக்கும் எதையும் செய்தார்களா செய்வார்களா என்றும் தெரியாதார் பணம் இதில் ஊற்றுக் கண்ணாய் மாறி இலட்சங்களாய் கோடிகளாய் ஆகி இருக்கிறது ஆயிரங்களில், நூறுகளில் கீழ் இருந்து மேல் சென்று சினிமாக் கட்டணங்களாக...


உண்மைதான் சினிமாவும், அரசியலும் மனிதர்களின் இரு கண்கள்...இரு கண்களும் ஒரே காட்சியைத் தான் காண்கின்றன....

சினிமாவும் அரசியலும் சுரண்டலின் உச்சங்கள்

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: இந்தியாவின் தலைமைக் கணக்கு தணிக்கையாளரின் அறிக்கைகள் மத்திய அரசு ஆட்சியில் இருப்பார் மூலம் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகளை ஊடகங்கள் தெரிவித்துள்ளன அதில் ஒன்று: சுமார் ஒன்னரை கோடி செலவு செய்ய வேண்டிய சாலைக்கு நூற்றுக் கணக்கான அதாவது இரு நூறு கோடிக்கும் மேல் செலவு செய்ததாக, சுங்கவரி ஏய்ப்பில் அரசியல் கலந்துள்ளதாக,இப்படி சொல்ல நிறைய...இதை எல்லாம் தேர்தல் எதிரொலிக்குமா எதிரொளிக்குமா இவை எல்லாம் கடைத்தட்டு மனிதர்க்கு சென்று சேருமா? என விடியும் பொழுதில் விடியுமா என்று எனக்கு உறங்கவிடா விழிப்பு.

No comments:

Post a Comment