Friday, October 18, 2019

இளம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலாம் பிறந்த நாளில்: கவிஞர் தணிகை.



இளம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலாம் பிறந்த நாளில்: கவிஞர் தணிகை.

Image may contain: 9 people, including திருக்குமரேசன் வீ, selfie, closeup and outdoor

எழுத நேரமில்லா பொழுதுகளாக ஓடிக் கொண்டிருக்கும் என் வாழ்வில் இன்று இயற்கை மழையால் வீடடங்கி நடைப் பயிற்சி விட்டு நல்ல வேளை மின்சாரமும் ஒத்துழைக்க இன்று உங்களுக்காக காலத்தின் சில பதிவுகள்.

எனது கல்லூரியின் ஒரு பேராசிரியர் கலாம் பிறந்த நாளுக்கு பள்ளிக்கு சென்று பேஸ்ட் பிரஸ் கொடுத்து அவர்களுக்கு பல் பரிசோதனையும் செய்யலாம் எனக் கேட்டுக் கொண்டார். எது எப்படி போனாலும் முயற்சியை கைவிடாத எனது வாழ்க்கை வரத்தில் இதெல்லாம் தானாக வந்து கூடிக் கொள்கிறது.

இரண்டு பள்ளிகளை சில காரணம் பற்றி நிராகரித்து விட்டு 3 வதாக இந்தப் பள்ளியை அதாவது இளம்பிள்ளையில் இருக்கும் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியை தேர்ந்தெடுத்தோம். தொடர்பில் இணைந்த உடற்கல்வி ஆசிரியர் மகப்பேறு மருத்துவ விடுப்பில் இருந்த போதும் உதவி தலைமை ஆசிரியரை தொடர்பேற்படுத்தித் தந்தார். அவரும் தொடர்ந்து தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை நேரம் குறித்து ஏற்பாடு செய்து தந்தார்.

இதெல்லாம் நடந்தது அக்டோபர் 14 சுமார் சற்றேறக் குறைய இரவு 7 மணி. இதற்கு எங்களது கல்லூரி பேராசிரியரும் இணங்கி சம்மதித்து தம்மால் ஆன ஒத்துழைப்பாய் அவர் சேலம் மாவட்ட இந்திய பல் மருத்துவ சங்கத்தின் தலைமைப் பொறுப்பிலும் இருந்த்தால் சுமார் 2000 பேஸ்ட் பிறஸ்களை எடுத்து வந்து தனது காரில் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். அத்துடன்  எங்களது பயிற்சி மருத்துவர்கள் 20 பேரும், மற்றொரு பேராசிரியரும் உடன் வந்திருந்தார்.

அனைவர்க்கும் பேஸ்ட் பிரஸ்கள் அதாவது அந்தப் பள்ளியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1900. அவர்கள் அனைவர்க்கும் கால்கேட் கம்பெனியின் சார்பாக, இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சார்பாக கொண்டு வந்திருந்த பேஸ்ட்(பற் பசை) மற்றும் பல் துலக்கி(பிரஸ்)  வழங்கப்பட்டன

தலைமை ஆசிரியரும், உதவித் தலைமை ஆசிரியரும் வெளியில் வேலையாக சென்றிருந்தபோதும் அந்தப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களுக்கு சரியான உரிய அறிவுறுத்தல் செய்திருந்தமையால் கமல் கலாம் படித்த பள்ளியின் வாசலில் மட்டும் இருந்து விட்டு வந்தது போல் அல்லாமல் உள் சென்று செயல் புரிய முடிந்தது.

பெரும்பாலன அனுபவங்கள் நல்லவை ஆனாலும் சில பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்க்கு சென்று சேர வேண்டிய நல்ல செய்திகளை, நல்ல செயல்களை தடுத்தே விடுகிறார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பார்க்கு இன்னும் சமூக நோக்கம் அதிகம் தேவைப்படுகிறது. அதல்லாமல் வாழ்க்கையை புரட்ட வருவாரின் செயல்கள் நிறைய எண்ணிக்கையில் உள்ளார்க்கு சென்று சேர வேண்டிய அத்துணை நல்ல செயல்களையும் தடுத்து மறைபொருளாக்கி வெளியில் தெரியாமல் விடுபட வைத்து விடுகிறது. இயற்கை அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டட்டும்.

அப்படி எல்லாம் இல்லாமல் இந்த ஆசிரியர்கள்...நல்ல துணை செய்தனர். மேலும் இந்த பள்ளிக்கு எங்கள் கல்லூரியின் சமூக பல் மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன் சென்று பல் மருத்துவ பரிசோதனை முகாம் ஒன்றை நடத்தியது ஆனால் அதிலிருந்த எத்தனை பேர்  கல்லூரி வந்து பயன் பெற்றார்கள் என்பதுதான் எமக்கும் தெரியாத தகவல்களாக இருந்தது. எனவே இனி அதை முறைப்படுத்த நாங்களும் பெரு முயற்சி எடுத்து வருகிறோம்.

நான் மெதுவாக இந்தக் கல்லூரியின் பொது உறவு அலுவலராக பணி செய்து வருகிறேன் என்றும் அடுத்த அடியாக குடியரசுத் தலைவராக இருந்தபோதே கலாமுடன் எனக்கிருந்த  தொடர்பும் அவர் எனக்கு எழுதிய கடிதமும் எனது நூல்களை அவர் கைகளில் தவழச் செய்ததும், எனது சிறு வயது மகனை அவரைப் பார்க்க அழைத்து சென்றிருந்துமான நினைவுகளை என்னுள் புதுப்பித்தபடியே அவர்களிடம் சுருக்கமாக நான் ஒரு கலாமின் தூதுவன் என்பதை தெரிவித்து கலாமுக்காகவும், உங்களுக்காகவும் சில செய்திகளைப் பதிவு செய்ய உங்களிடம் வந்திருக்கிறேன் எனச் சொல்லவும் சிறு பிள்ளைகளிடமிருந்து ஏக கர ஒலி. நிஜமாகவா நிஜமாகவா என வியப்பின் குரல்கள். கலாமை பள்ளிச் சிறுவர்கள் நேசிப்பதை அளவிட முடியாது.
Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானியரும்
புத்தரும் யேசுவும்
உத்தமராம் காந்தியும் கலாமும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வைச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்ன பண்ணிக் கிழிச்சீங்க
 என்ற கேள்வியுடன்  ஆரம்பித்த எனது உரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்வும் புகழும் காத்திருக்கிறது இரட்டையாய்ப் பிறந்தாலும் அவர்களின் கை ரேகையும், விழிப்பாவையும், பற்களும் எல்லாம் வேறு வேறானவை போலவே அவரவர்க்கும் ஒரு தனி வழி இருக்கிறது அவரவர்க்கு கை வரும் ஒரு கலையை கற்றுத் தேர்ந்து 10,000 மணி நேரம் உழைத்தால் உலகு உமைப் புகழ்வது நிச்சையம் என உறுதி கூறினேன்.

3 குறள்களை வாழ்வில் கடைப்பிடிக்கச் சொல்லி:
தோன்றின் புகழொடு தோன்றுக....
பொய்யாமை பொய்யாமை ஆற்றின்...
இன்னா செய்தாரை ஒறுத்தல்..
போன்ற குறள்களை  மட்டும் உயிர் மூச்சாய் நேசியுங்கள் வெறும் பேச்சாய் விட்டு விடாதீர்கள் என்று அதற்கான சில எடுத்துக்காட்டு உவமைகளையும் கோர்த்துக் கொடுத்தேன். கர ஒலி விண்ணைப் பிளந்தது...

அதில் காந்தியும் நெல்சன் மாண்டேலாவும் இருந்தார்கள் இடையே எங்கள் கல்லூரி அவர்களுக்கு செய்ய விரும்பும் பல், வாய் , ஈறு குறித்த மருத்துவ உதவிகளையும் அதில் 10 துறையும் , அந்தக் கல்லூரியை இந்திய சிறுவர் பல் மருத்துவத் துறையின் தலைவரும், இந்திய பல் மருத்துவ சங்கத்தின் துணைத்தலவராக இருக்கும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் மருத்துவர் ஜான் பேபி ஜான் திறம் பட வழி நடத்தி வருவதையும் குறிப்பிட்டேன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் நான் உரையாற்றிய மணிக்கணக்கான உரையாக அது இல்லாமல் இருந்த போதும் அதே கருப்பொருளில் சிற்றுரையாக இருந்த போதும் சிறிது நேரமே உரையாற்றியபோதும்  மிக நிறைவான திருப்தியாக இருந்தது.

Image may contain: 2 people, people smiling, people standing


சிறுமிகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். கலாமின் கடித நகலையும் காண்பித்தேன், நான் கொண்டு சென்றிருந்த சில புத்தகங்களையும் மனமுவந்து கலாமின் பிறந்த நாள் பரிசாக அந்தச்  சிறுமிகளுக்கு  பரிசளித்தேன்.
இந்த அக்டோபர் 15 கலாமின் 88 வது பிறந்த நாள் ஒரு மறக்க முடியா நாளாக இணைய இயற்கை பேருதவி புரிந்தது. அதற்கு என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



4 comments: