Monday, July 14, 2025

உன்னைக் காண: கவிஞர் தணிகை

 உன்னைக் காண:



திருப்பதி சென்றேன்

திருவண்ணாமலை சென்றேன்

திருவரங்கம் சென்றேன்

பழநி சென்றேன்

சமயபுரம் சென்றேன்

சிருங்கேரி சென்றேன்

மூகாம்பிகை சென்றேன்

தர்மஸ்தலம் சென்றேன்

சுப்ரமண்யா சென்றேன்

காசி ராமேஸ்வரம் சென்றேன்

அமிர்தசரஸ் சென்றேன்

ஜெருசலம் சென்றேன்

பெத்லகேம் சென்றேன்

வாடிகன் சென்றேன்

மெக்கா, மதீனா சென்றேன்

....................

......................

..........................,

நீ

இங்கிருப்பது அறியாமலே

எங்குமிருப்பது அறியாமலே.



    மறுபடியும் பூக்கும் வரை

      கவிஞர் தணிகை



No comments:

Post a Comment