Thursday, July 3, 2025

உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.

 எதை நம்புவது?....கவிஞர் தணிகை



சினிமா நடிகர் அஜித் குமார் என்ற பேரை பின்னுக்குத் தள்ளி பேர் பெற்றது இறந்து போன அஜித்குமார் பேர் இந்த சில நாட்களில்.


ஊடகங்கள் மின்னலாய் பணி புரிவது தெரிகிறது.


ஆனால் வரும் செய்திகள் யாவும் நம்புவதா வேண்டாமா என்றே இருக்கிறது.

முதலில் சக்கர நாற்காலியையும், கார் சாவியையும் கொடுத்த அஜித் குமாரையும் அவரது இரண்டு நண்பர்களையும் விசாரித்த நகை  காணாமல்  திருடு போனது பற்றிய செய்தி.


அத்துடன் அந்த நிகிதா என்ற பெண்ணுக்கு உயரிய அந்தஸ்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணி (ஐ.ஏ.எஸ்_) பதவியில் உள்ளவர் நெருக்கத்தால் மட்டுமே அளித்த புகாரால் இந்த விளைவு என்றது,


அதன் பின் அந்தப் பெண் அப்படி எவரும் தெரியாது என அந்தப் பெண் சொல்கிறார் எனவும் நகை பணம் காணாதது பற்றி சாதாரணமாகவே காவல் நிலையத்தில் புகார் செய்தோம் என்று அவர் சொன்னதாக...


இப்போது அவரது குடும்பமே உறவினர்களிடமே வேலை வாங்கித் தர பல இலட்சங்கள் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய புகார்கள் இவர்கள் மீது ஏற்கெனவே காவல் நிலையத்தில் உள்ளதாக...


மேலும் அவரது குடும்பம் இப்போது எங்கே எனத் தெரியாமல் தலைமறைவில் உள்ளதாகவும்...


இடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்களின் குடும்பங்கள் மேலிடத்தில் சொல்லித்தானே இந்த காவலர்கள் இந்த‌ கொடூரச் செயல்களில் ஈடுபட்டதாக போராட்டம் செய்ய‌ அதை அனுமதி பெற்று செய்யவில்லை என அவர்கள் கலைக்கப் பட்டதாக...


பாதிக்கப் பட்ட குடும்ப‌த்துக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் அவரது இளைய சகோதரர் நவீன் குமாருக்கு நிரந்தர அரசுப் பணி அரசு சார்பாக, த.வெ.க சார்பாக இரண்டு இலட்சம், மற்றும் எதிர்க்கட்சிகள் எல்லாம் உதவிகள்....


கழிவறையின் துளைகள் வழியாக இந்தக் காணொளிக் காட்சிகளை பதிவு செய்து வெளிப்படுத்திய அஜித் குமாரின் நண்பர்கள் செய்த செயலின் பலன் நாடெங்கும் அதிர்வலைகளை கொண்டு வந்து உண்மை வெளிப்பட உதவியிருக்கிறது என்பதை எவருமே மறுத்துவிட முடியாது.


சக்கர நாற்காலியை தள்ளிச் சென்றதற்காக ஈடாக சிரமப் பட்டதற்கான சிறு தொகையினைப் பெற‌ செய்யப் பட்ட பேரத்தின் விளைவாகவே இத்தனையும் நிகழ்ந்தன  என்ற செய்திகளும் வராமல் இல்லை.


மேலும் எல்லா பிரபல நடிகர் மற்றும் சினிமா பிரபலங்கள் யாவருமே கொக்கைன், கஞ்சா, போதை வழக்கத்தி ல் இருந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அர்ஜுன் சம்பத்,, மற்றும் சுஜித்ரா போன்றோர் அளித்திருந்த செய்திகள் யாவும் இந்த செய்தியால் பின்னுக்குத் தள்ளப் பட்டிருப்பதை நாம் சற்று கவனிக்கவும் வேண்டும் அளவு மறைய ஆரம்பித்து விட்டன.


அமெரிக்க அதிபர் டொனால்ட் மற்றும் மஸ்க் பிரிகிறார்கள் சேர்கிறார்கள் பிரிகிறார்கள்...


உண்மை எது பொய் எதுன்னு ஒன்னும் புரியல: கவிஞர் தணிகை.