Wednesday, February 22, 2017

கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்: கவிஞர் தணிகை

கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்: கவிஞர் தணிகை


Image result for college students are ready to questioning


மெரினாவுக்கு ஜல்லிக்கட்டு அலை ஓய்ந்து விட்டது, எனினும் சில கல்லூரி இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளார் அவசியம் நாட்டு நடப்பை உற்று கவனிப்பாராக கவலைப்படுவாராக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை உள்ளாராக இருப்பது ஒரு திருப்தியைத் தருகிறது

யார் இந்த தீபா இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பன்னீர் மிகவும் ஒழுக்க சீலரா? இவர் ஜெவுக்க்கு அதாவது உச்ச நீதிமன்றத்தால் தற்போது தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் நிழலைக் கூட விழுந்து வணங்கிய ஒரு அடி வருடி, அடிமைதானே? எடப்பாடி இன்றைய முதல்வர் அன்றைய முதல்வரின் கஜானாப் பொக்கிஷதாரராக இருந்தவர் என்றும் அந்தக் கட்சியின் பெரும்பணம் இவரிடம்தான் இருந்ததும் என்ற பேச்சுகள் இருக்கின்றனவே அவை உண்மையா பொய்யா? அப்படிப் பார்த்தால் இவரும் குற்றவாளிதானே? குற்றவாளிக்கு காவல் செய்தால் அதுவும் குற்றம்தானே?

குடும்பம் விட்டு கட்சியை வெளிவராமல் காக்கும் மு.க குடும்பம் பற்றி பேச ஒன்றும் இல்லை....மற்றபடி டில்லியிலிருந்து ஆட்டிப் படைக்கும் மோடிசார்ஜி பற்றியும் சொல்ல நிறைய உண்டு, விஜய் மல்லையா, ரிலையன்ஸ் அம்பானி, டி மானிட்டேஷன் இப்படியாக..

ஆக இவர்கள் எவருக்கும் தகுதி இல்லா அரசு, சட்டம், நீதி, நிர்வாகம், பத்திரைகையுடன் ஊடகம் என்ற நான்கு உளுத்துப் போன கால்களுடன் ஆட்டம் காணாமல் இருந்தும் மக்களுக்கு எதையும் செய்வதாகக் காணோமே?

இனி இந்திய மக்களுக்கு , தமிழக மக்களுக்கு யார் செய்வார்? எப்படிப் பட்ட தலைவர்கள் செய்ய வருவார், ? எப்படி நிலை மாறும், கார்ல் மார்க்ஸ் தத்துவமா? காந்தியமா? சுயநலமற்ற தியாக சிந்தையா? ஏன் இன்றைய நல்லவர்களுக்கு எந்த வித அங்கீகாரமும் இல்லை? எப்படி அரசியல் வியாதிகளுக்கும், சாதி மத சதிகார‌ மனிதர்களுக்கும் இவ்வளவு சொத்துகள் சேர்ந்தன?

உண்மையிலேயே இவர்கள் நாடாளத் தகுதி படைத்தவர்கள்தானா? இன்றைய கல்லூரி மாணவர்கள் சிந்திக்க ஆரம்பித்து கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...

Image result for college students are ready to questioning


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments: