Saturday, February 22, 2025

மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை

 மேட்டூர் பேருந்து நிலையம் புதுப் பொலிவுடன்: கவிஞர் தணிகை




22.02.2025 இன்று சுமார் எழுபது கோடி ரூபாய்களுக்கும் மேலான திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டும், நிறைவடைந்த பணிகளை ஆரம்பித்து வைத்த நிகழ்வுகளும் மேட்டூர் பேருந்து நிலைய அழகிய பந்தல் வளாகத்தில் நடைபெற்றது. மேட்டூர் பேருந்து நிலையம் இன்று முதல்  புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது அதை நகராட்சிதுறை அமைச்சர் துவக்கி வைத்தார்.


மாண்பு மிகு அமைச்சர்கள், கே.என். நேரு, எஸ். ராஜேந்திரன், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர்கள்:  சேலம் செல்வகணபதி, தர்மபுரி மணி,கள்ளக்குறிச்சி மலையரசன் கூடுதல் மாவட்ட ஆட்சியர், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சதாசிவம்,நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், ஆகியோர் கலந்து கொள்ள இனிதே நடைபெற்றது.


அமைச்சர் கே.என். நேரு அவர்கள் திட்டங்களைத் துவக்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் உரையாற்றினார். அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அவர்கள் சேலம் மாவட்டத்துக்கான தமிழக அரசின் பங்கு பணிகளை எடுத்துரைத்தார்.


வழக்கம் போல மண்ணின் மைந்தர் சட்ட மன்ற உறுப்பினர் சதாசிவம் அவர்கள் அவருக்கே உரிய பாணியுடன் மக்கள் பிரச்சனைகளை எடுத்து இயம்பி அரசின் திட்டங்களை ஈர்க்கும் வண்ணம் சிறப்புரையாற்றினார்.


நிகழ்ச்சிகளை  சிறப்பான முறையில் நகராட்சித் துறை மற்றும் குடி நீர் வழங்கல் துறை ஏற்பாடு செய்திருந்தது.பொது மக்களின் மனுக்களும் பெற்றுக் கொள்ளப் பட்டன.திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Friday, February 7, 2025

சாதனை வெளித் தெரியாமலும் இருக்கலாம்: கவிஞர் தணிகை

 சாதனை வெளித் தெரியாமலும் இருக்கலாம்: கவிஞர் தணிகை



வேர்கள் வெளித் தெரியாது எப்போதுமே.இந்த காலைப் பனிப் பொழிவுக்கிடையே ஒரு பணிப் பொழிவுடனான இந்தப் பதிவுக்கு ஒரு நல் காரணம் இருக்கிறது. எத்தனை பேர் எனத் தெரியாத  எண்ணிக்கையற்ற  தியாகிகளின் தியாகத்தால் விளைந்த இந்த நாட்டில் இது போன்ற பதிவுகள் அவர்களுக்கு ஒரு அஞ்சலி என்ற பேரில்.


எமது "அளவுக்கு மிஞ்சினால்" என்ற பாலியல் விழிப்புணர்வு நூல் நிறைய குடும்பங்களின் வாழ்வில் மாயங்களை நிகழ்த்தி உள்ளதை கேள்விப் படுவதன் மூலம் அறிந்து மகிழ்கிறோம். மகிழ்ந்தோம். மகிழ்வோம்.


நிறைய பேர் வாழ்வில் இது போல விதை விதைத்து மாறுதல் நிகழ்த்தி வைப்பவரே காலத்தை விஞ்சி வாழ்வோராக கருதப் படுவார்.


அடியேனறிந்த வரையில் அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், சுதந்திரப் போர்த் தியாகிகள் போன்றோர் இந்தப் பணியைச் செவ்வனே செய்கிறார்கள்


P. ஆசைத் தம்பி என்ற ஒரு தூய்மைப் பணியாளர் குடும்பத்து இளைஞர் இராஜஸ்தான் ஜெய்ப்பூர் வரை சென்று கபடி விளையாடி கோப்பை வென்றதாக ஊருக்குள் பாராட்டு. பதாகை. நண்பர் நடைப்பயிற்சியின் போது பகிர்ந்தார்.


கடைசியில் பார்த்தால் அது நாங்கள் அதாவது எமது குடும்பம் நன்கறிந்த எங்களால் வழிகாட்டப் பட்டு ஆலோசனை தந்து, அறிவுரை செய்து கொடுத்த "அளவுக்கு மிஞ்சினால்" என்ற நூலின் அனுபவச் சாரம் விளைவித்த விளைந்த விதை அது...பெரியசாமி, இராஜேஸ்வரி என்ற தம்பதிகள் எங்களுடன் பழகி வந்த காலத்தில் அவர்களுக்கு 4 பெண்குழந்தைகள், ஐந்தாவதாக பிறப்பதாவது ஆண்குழந்தையாக இருக்க‌ வேண்டும் என்று ஏங்கிய சூழலில் இந்த நூல் அது போன்ற செயல்களுக்கு வழிகாட்டும் என்று கொடுத்து அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வைத் தந்ததால் அந்த குடும்பத்தில் வந்த வாழ்வின் விந்தை இன்று இராஜஸ்தான் ஜெய்ப்பூர் வரை சென்றதை அறிந்தோம் மகிழ்கிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.