Friday, February 24, 2017

கட உள் கடவுள்: கவிஞர் தணிகை

கட உள் கடவுள்: கவிஞர் தணிகை


Related image



ரூபக் கடவுளும் பூசாரிகளும் இருக்கும் வரை இந்த நாட்டில்
ஒழுக்கம் தோன்றவே  வழியில்லை ‍ ______விவேகானந்தா

மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும்
வணங்கலாம்  ___ பெரியார்.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!
        ___ திருமூலர்
Image result for pass your body and find out god in your self


உன்னைக் காண‌
_________________

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநி சென்றேன்

சமயபுரம் சென்றேன்
சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்

சுப்ரமண்யா சென்றேன்
காசி ராமேஸ்வரம் சென்றேன்
அமிர்தசரஸ் சென்றேன்
ஜெரூசலேம் சென்றேன்

பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்
மெக்கா, மதீனா சென்றேன்
__________________________
__________________________
______________________________


நீ

இங்கிருப்பது அறியாமலே...

        கவிஞர் தணிகை.

Image result for pass your body and find out god in your self
புறம் கட உள் பார்க்க‌
புறம் கட கடவுள் பார்க்க...


மனிதர் கையால் கட்டிய கோயிலில்
கடவுள் குடியிருப்பதில்லை    பைபிள்


அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது. குரான்

தெய்வம் ஒன்று தெய்வம் ஒன்று தெய்வம் ஒன்றுதான்....சிற்பி வேலாயுதம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment:

  1. உண்மை நண்பரே
    இருக்கும் இடத்தை விட்டு
    இல்லாத இடம்தேடி அலைகின்றார்
    அருமை

    ReplyDelete