Monday, March 5, 2018

தமிழ்சினிமா முகம் மாறிப் போச்சு: கவிஞர் தணிகை

தமிழ்  சினிமா  முகம் மாறிப் போச்சு: கவிஞர் தணிகை
Image result for solo tamil movie


எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், ஜெமினி, சிவகுமார், இப்படி இடைக்காலத்தில் நடித்த நடிகர்களின் படங்களில் ஒரு ஃபார்முலா இருக்கும்....அதிலும் முக்கியமாக எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் 6 பாடல்கள், ஐந்தாறு சண்டைகள், கொஞ்சம் அழுகை, இப்படி சென்டிமென்டலாக சொல்லி ஏமாற்றி விடுவார்கள் இரசிகர்களை....

ஆனால் காதல் இல்லாமல் சினிமாவைப் பார்ப்பது அரிதாகவே இருக்கும் மேலும் பாலச்சந்தர் வசனங்களும், கருணாநிதி வசனங்களும் வகைக்கு வேறாக இருந்தாலும் அந்தக் காலத்தில் வசனங்கள் இருப்பது இரசனைக்குரியதாகவே இருக்கும்.

பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்கள் வந்தபோது சினிமா ஒரு பார்வை ஊடகம் அதற்கு கேட்பு ஒலி அளவைகள் அதிகமாகத் தேவையில்லை. அவை இல்லாமலேயே சொல்ல வேண்டியதைச் சொல்லி விட முடியும் என்ற இயக்கம் வந்தது.

ஒரு படி மேலே ஏறி பேசாமலேயே பேசும்படம் என்று கமல்ஹாசன் படம் செய்து காண்பித்தார். ஆனால் இப்படி தமிழில் பரீட்சார்த்த முறைகள் ஏற்படும் முன்னரே சார்லி சாப்ளின் அதை எல்லாம் செய்து காண்பித்து விட்டார்

சரி விடுங்கள் அதைப்பற்றி எல்லாம் சொல்ல இந்தப் பதிவை நான் இடவில்லை
சினிமா புதியதாக வெளியிட மாட்டோம் என்று முடிவெடுத்த பின் தியேட்டரில் எல்லாம் பழைய படங்கள்... அதிலும் எங்கள் ஊரில் மொட்ட சிவா கெட்ட சிவா 30 ரூபாய்க்கு என ஏலம் போட்டு விற்பது மாதிரி போஸ்டரில் ஒட்டி வைத்தாலும் யாரும் போகக் காணோம்....

இது போன்ற மாற்றங்களிடையே காலா, 2.0 படங்கள் வருகை இருக்கும்...சங்கர் எப்படியும் இந்தப் படத்தை பார்க்க 3 டி கிளாஸ் வைத்துப் பார்த்தே ஆக வேண்டும் தியேட்டருக்கு வர வேண்டும் வைத்து தீட்டிக் கொள்ளலாம் என்ற முயற்சியில் இருக்கிறார்....ஆனால் மை டியர் குட்டிச் சாத்தான் என்ற மலையாள, தமிழ் படம் இந்த வேலையை பன்னெடுங்காலத்துக்கும் முன்பே செய்துவிட்டது...

இப்போது காலா, 2.0 படங்களை ஓட வைக்கவோ, அல்லது உண்மையாகவோ எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து எம்.ஜி.ஆர் ஆட்சியை தரமுடியும் என ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஆட்சி பொற்காலமாகத் தெரிகிறது இப்போது இருந்து பார்க்க...பச்சை குத்திய மடத்தனமும், அ.இ.அ.தி.மு.க எனப் பேர் மாற்றிய படலங்களும், திருச்சிக்கு தலைநகரை மாற்ற முனைந்து கை விட்ட  படலங்களும் அப்போதும் நிகழ்ந்தன...

அட அதை எல்லாம் விடுங்கள்...எம்.ஜி.ஆர். குடிக்காத, சிகரெட் பிடிக்காத நடிகராக, தம்மை சினிமாவிலும் சொந்த நிஜ வாழ்விலும் காட்டிக் கொண்டார் வாழ்ந்தார் அதை முதலில் ரஜினியால் செய்ய முடியுமா? அதன் பிறகு அந்த ஆட்சி தருவது பற்றி யோசிக்கலாம்...

அட அதை எல்லாம் விடுங்கள் இப்போது சோலோ, அத்தியாயம் 6 என்ற படங்களை பார்க்க நேர்ந்தது...ஒரே படம் என்கிறார்கள்...அதில் படத்துக்குள் படம் என பல கதைகளை பல படங்களை உள்ளடக்கித் தந்திருக்கிறார்கள்...இமை, இலை, இப்படி நிறைய குறும்படங்கள் வரிசையாக வந்தபடியே இருக்கின்றன...

சினிமாவுக்கான இரண்டு மணிக்கும் மேல் மூன்று மணி நேரம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் எல்லாம் போய்விட்டது...சொல்ல வந்ததை சொல்லி விட்டு அத்தோடு முடித்துக் கொள்கிறார்கள்...

நவரசமும் இருந்தால் தான் சினிமா என்ற தமிழ் சினிமா முகம் மாறிப்போச்சு... அதற்கு அருவி கூட ஒரு நல்ல எடுத்துக் காட்டுதான்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments: