Monday, January 30, 2017

மகாத்மா காந்தி----: கவிஞர் தணிகை

மகாத்மா காந்தி: கவிஞர் தணிகை

Related image



கொடும் கோட்ஸே அங்குத் தோன்றினான்
திடும் என்றே சுட்டான் தியாகியை

உடல் போவதைய்யோ உயிர் பிரிவதைய்யோ
உலகம் கண்ணீரில் ஆழ்ந்ததைய்யோ!  (கொடும்...)

அஹிம்சைக் கடல் அன்றோ அண்ணல் காந்தி
அழித்து விட்டான் கொடிய பாவி....(கொடும்...)


* இந்தப் பாடலை பாடித் திரிந்த குயிலாய் இருந்தேன் பள்ளிப் பிராயத்திலிருந்து கிராமியப் பல்கலைக் கழகத்தில் பாடிய அந்தக் காலம் வரை...சுமார் 12 வயது முதல் 22 வயது வரை 10 ஆண்டுக்கும் மேலாக‌


பசுமை நினைவை இன்று பதிவிட வேண்டும் என நினைத்தேன்.

நன்றி
வணக்கம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, January 24, 2017

இயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர் தணிகை

இயக்கமுறைமைகளும் தலைமையும் இல்லாத உலக சாதனை: கவிஞர் தணிகைImage result for 67th republic day




மாபெரும் உலக சாதனையில் கடைசியில் ஒரு களங்கம், மாபெரும் வெண் சுவற்றில் ஒரு கரும்புள்ளி இட்டாற்போல,ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தாற்போல‌

அரசு ஆணையிட காவலர்கள் அடிக்காதிருந்திருக்கலாம், அடக்காதிருந்திருக்கலாம்,கடலில் மூழ்கி இறக்கவும் தயார் உங்களிடம் சிக்கி அடி வாங்கி சாகத் தயாராக இல்லை எனச் சொல்லுமளவு, செயல்படுமளவு நிலை செல்லாதிருந்திருக்கலாம்...

சரியான தலைமையும், இயக்கமும் வழி நடத்தாததன் ஒரு காரணம்...ஆனால் அப்படி வழி நடத்தி இருந்திருந்தால் இந்த அளவு ஜனத் திரள் கூடி இருக்குமா என்பதும் சொல்ல முடியாததே..

எப்படியோ கடைசியில் எல்லா விதமான சாயமும் பூசப்பட்டு இந்த உலகே வியந்து பார்த்த இளைஞர் திருவிழா இனிதே முடியாமல் தீப்பொறிகளுடன் உறவாடிய நெருப்பு அணைந்து போனது தற்போதைக்கு அது நீறு பூத்த நெருப்பாக இருந்த போதும்...

இதனிடையே ஜல்லிக்கட்டின் மூலம் 3 பேர் இறந்து விட்ட தகவலும், சுமார் 30 பேருக்கும் மேல் காயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்தி.
Related image


ஹிப் ஹாப் தமிழன் என்னும் ஆதி அதிக பட்சமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. லாரன்ஸ், சமுத்திரக் கனி போன்றோர் நன்கு ஒத்துழைத்துள்ளனர். ஏன் தங்கர்பச்சன், சகாயம் ஐ.ஏ.எஸ் போன்ற பிரபலங்கள் கூட பிரவேசித்துள்ளனர் ஜனத்திரள் இருக்கும் இடத்திற்கு.

அது ஏனோ இந்த நாட்டில் மட்டும் எந்த வித மக்கள் சக்தியும் எடுபடாமல் போய் விடுகிறது. அதற்குள் புகுந்து ஆயிரம் வகையான உட்பூசல்களை திட்டமிட்டு புகுத்தி விடுகிறார்கள் கட்சி, சாதி, மதம் என்றெல்லாம்...எல்லாமே வழக்கப்படி

குடி அரசு தினம் கொண்டாட, அதுவும் இம்முறை கடற்கரை சாலையில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கொடியேற்ற ஏதுவாக மாணவர் போராட்டம் கலைக்கப்பட்டு ஒத்திகை,அணிவகுப்புக்கான இடம் தயாராக்கப்பட்டிருக்கிறது

வழக்கம் போல கட்சிகள் ஒன்றை ஒன்று குறை கூறிக் கொண்டே இருக்கின்றன.

ஒரு பெரும் வரலாறு கடந்து போய் விட்டது பெரும் சாதனையாக இருந்த போதும் பெரும் விளைவை ஏற்படுத்தாமல்

Related image

பீட்டா பல நூறு கோடி பணத்தை கைமாற்றி இருப்பதாக பேச்சு அடிபட்டது.
வழக்கம் போல நீதிமன்றமும், அரசுமே எல்லாவற்றையும் தீர்மானிக்க மக்கள் சக்தி அதுவும் மாணவ சக்தி ஒரு திரும்பிச் செல்லும் அலையைப் போல அடங்காவிட்டாலும் மறைந்து நிற்கிறது...

தேர்தலும், வணிகமும் கட்சியும் அதிகாரமும் மறுபடியும் வென்று விட்டதாக காட்சியளிக்கின்றன.

மறுபடியும் ஒரு குடியரசு தினவிழா, குடி அரசு தினவிழா. அரசு விடுமுறை, 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவாக...இப்படித்தான் போயிற்று சசிபெருமாள் வாழ்வும்....

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 22, 2017

ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை

ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி: கவிஞர் தணிகை.
Image result for students history in Tamil nadu to jallikattu


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே? தமிழகத்து மாணவர்களின் பிரளய எழுச்சியில் மத்திய அரசு தள்ளாட, மாநில அரசு தடுமாற ஆஹா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி...

பாரத சமுதாயம் பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே...

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

என்றெல்லாம் எழுதிய பாரதி இதை எல்லாம் காண இருந்திருக்க வேண்டுமே,பார்த்திருந்தால் என்ன தான் எழுதியிருப்பானோ?

முதல்வர் ஓ.பி.எஸ், அ.இ.அ.தி.மு.க கட்சி பொதுச் செயலாளர் சசி,பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை எல்லாரும் ஏதோ பேசிக் கொண்டு நல்ல பேர் வாங்க முயற்சிக்கின்றனர்

ஆனால் இவர்களை இந்த ஊடகக்காரர்கள் எல்லாம் இந்த மக்கள் மாணவச் செல்வங்கள் முன் வந்து ஜெவுக்கு என்ன நேர்ந்தது என இப்போது சொல்ல வேண்டும் சொல்வார்களா? சொல்ல முடியுமா?

பட்டுக்கோட்டை எழுதியமைக்கு வாயசைவையும் நடிப்பையும் கொடுத்தவரை முன் வைத்தோம் முதல்வராய் வைத்தோம், வாழையடி வாழையாக நிறைய முரண்கள் தொடர்கின்றன,,,எப்போதுமே சிந்திப்பாரை முன் வைத்தால் நடிப்பாரை விட நன்றாகவே இருந்திருக்கும் ஆட்சி என்பது எனது கணிப்பு. எப்போதுமே கிரியேடிவிட்டி உள்ளாரை, ஆக்கபூர்வமாக செய்வாரை நாட்டுக்கு செய்ய நினைப்பாரை சேவை செய்த பக்குவமுள்ளாரை பதவியில் அமர்த்தி அழகு பார்த்தால் நாட்டுக்கு நல்லன நடக்கும்

இங்கு எல்லாமே மாறிவிட்டது..

அன்னை தெரஸா   செய்தது சேவை, இராதா ராஜனும், பூர்வா ஜோஷிபுராவும், மற்றவர்களும் செய்வது சச்சரவு...விலங்கு பறவை, மற்ற உயிரினங்களுக்கு எல்லாமே செய்ய வேண்டியதுதான்...அதற்காக மனிதர்களை பின்னிலைப் படுத்துவதும் சரியல்லவே

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்ற இராமலிங்க வள்ளலாரைக் கொண்ட நாடு உலகுக்கே வழிகாட்டும்

விவேகானந்தா சொன்னபடி, நல்ல உடல்வலுவும், நல்ல நம்பிக்கையும், துணிச்சலும், வீரியமும் உள்ள 100 இளைஞர்கள் போதும் என்றார், இங்கு இலட்சக்கணக்கான மாணவ இளம் இரத்தங்கள் ஒன்று சேர்ந்து இலட்சியத்துக்காக போராடி வருகின்றன.... கொட்டும் பனியிலும் வாட்டும் வெயிலிலும் இரவிலும் பகலிலும் நாட்கள் ஓடி மறைய... மறுபடியும் பூக்க...எந்த மக்கள் தலைவரும், எந்த வாக்குகளைப் பெற்று நாடாள வந்த மன்னவன்களும் வந்து பார்க்கவும் பேசவும் இவர்களது கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்பது பற்றி சொல்ல வரவேயில்லை...சிலர் பலரை இவர்கள் அதற்காக அனுமதிக்கவும் இல்லை

உண்மையில் சொல்லப் போனால் ஒரு தலைமை இல்லாத இந்த புரட்சிதான் நல்லது கூட. தலமை என்று வந்தாலே தனிமனித குணாம்சங்கள் பட்டுத் தெறிக்கவும், புகழ் மாலைகள் சேரவும், அவரை அரசு மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியும் சேர்ந்திருக்கும் இப்போது இவை யாவும் தொடாத எட்டி இருக்கும் தொட முடியாத சுடர் இயக்கமாகவே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் இந்த மாணவ சமுதாயத்திற்கு என்றும் எமது வாழ்த்துகள்.என்றும் எமது வாழ்நாளில் இந்த நாட்களை, இந்த நிகழ்வை மறக்கவே முடியாது...

எமது வாழ்நாளில் ஒரு விடிவு வரவே வராதா இந்த அரசும் அதிகார மையங்களும் மாறாதா, ஒரு சமத்துப் பார்வையும் மலர்களும் மலராதா என்ற ஏக்கம் ஒரு நம்பிக்கை ஊற்றாய் இந்த இளைஞர்களிடம் இருந்து கிளம்பி இருக்கிறது.

டில்லியில் கற்பழிப்புக்கு கூடிய மனிதப் பேரணியைப் பார்த்து எல்லாம், கர்நாடக காவிரி இன உணர்வாளர்களை எல்லாம் பார்த்த போதெல்லாம், உலகின் எந்த நாட்டிலும் ஒரு உணர்வு பூர்வமான போராட்டமும், விழிப்புணர்வு மக்கள் வெள்ளம் அணி சேர்ந்த போதெல்லாம் அது எப்போது இங்கே, ஏன் தமிழ் ஈழ மக்கள் இனப் படுகொலை பற்றி எல்லாம் கூட ஒன்று சேராமலே இருக்கிறோமே என்ற குறையை எல்லாம் இந்த மனிதப் பிரளயம் நீக்கி இருக்கிறது...
Related image


அரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களை எளிதில் ஏமாற்ற முடியாது என்பது நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது

தமிழர்கள் உலகுக்கே வழி காட்டுவார்கள் என்ற நிதர்சனமான பல அறிஞர்களின் பார்வை இன்று கையருகே வந்து உள்ளது. இனி திட்டமிடல், செயல்வடிவம் எல்லாம் அவசியம்...காந்தி தமிழ் கற்றதும், இரு கையால் எழுதப் பழகியதும், தமது எல்லா மணித்துளிகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தது போலத் தயாராக வேண்டும்...

மோடி காந்தி படத்தை எல்லாவற்றிலிருந்தும் எடுத்தது உதாரணமாக காதி அன்ட் வில்லேஜ் கமிஷன் இன்டஸ்ட்ரியிடமிருந்து எடுத்ததால் இவர் ராட்டை நூற்பது போல போட்டுக் கொண்டதால் நல்ல வியாபாரம் என பாரதிய ஜனதா கட்சியின் ஒரு தலைவர் பேசியுள்ளார்.

இனி காந்தி படத்தை எல்லாம் வைத்துக் கொண்டு இவர்கள் விளம்பரப் படுத்திக் கொள்வது எல்லாம் தவறுதான்...அதை எல்லா இடத்திலிருந்தும் நீக்கி விடுவதும் சரிதான்...மகாத்மாவை தேசப்பிதா என்றார்கள்..மோடியை அந்தக் கட்சிக்காரர்கள் இனி அந்த இடத்துக்கு கொண்டு செல்வார்களோ?

பாரதிய ஜனதாவும், அ.இ.அ.தி.மு.கவும் ஒரே பாணியில் மக்களை மடமைப் படுத்திக் கொண்டு அவர்களை சிந்திக்க விடாமல் மழுங்கடித்து தமது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பெரும் தீய சக்திகள்தான்...

இந்த இளம் கன்றுகள் அதை உணர்ந்து கொண்டதாகவே தெரிகிறது..

அஸ்ஸாமின் பிருகு புக்கான், பிரபல்ல குமார் மஹந்தா ஏனோ எனக்கு காரணமில்லாமலே நினைவுக்கு வருகிறார்கள்...

Related image

பார்ப்போம் அடுத்த முக்கியமான காலக் கட்டத்திற்கு மாணவர் இயக்கம் சென்று கொண்டிருக்க, மாநில மத்திய அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்பதை வரும் சிக்கலான நாட்களில் நாம் பார்க்கலாம்... கலாம் போன்றோர் இதை எல்லாம் பார்க்க இல்லையே என்ற வருத்தமும் எமக்குண்டு.

மாடுகள் எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாவான சிங்கத்தை ஓட ஓட விரட்டும் கதை இங்கே நிகழ்கிறது மாட்டுக்காக எல்லாம் சேர்ந்து காட்டு ராஜாக்களை ஓட ஓட விரட்டும் கதைகளும் இங்கே நிகழ வேண்டும்...

Ravi sankar guruji Life of Art ,Jaggi Vasudev  Isha are supporting this movement....think about it...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, January 21, 2017

மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எளிதில்குணப்படுத்துமளவு ஆரம்ப நிலையில் இல்லை...கவிஞர் தணிகை...

இனி ஒரு நொடியும் பொறுக்க முடியாது என கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவதுதான் புரட்சி என்பார் ‍‍‍‍___விளாடிமிர் இலியச் உல்யனோவ் என்னும் லெனின்

வன்முறை என்பது தவறானது ஆனால் அடிமைத்தனம் என்பது அதை விட தவறானது என்பார் _____ நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்.


Image result for lokesh salem rail roko

1965ல் தமிழகத்தில் எழுந்த மாணவர் எழுச்சிக்கும் பிறகு இதுதான் மாபெரும் எழுச்சி என்கிறது வரலாறு.

தமிழகமே ஒரு குரலில் ஒருமித்து நிற்கிறது அந்தக் கல்லூரி மாணவர்களோடு

இப்போதும் கூட பூர்வா ஜோஷிபுரா என்னும் 40 வயது மங்கை இவர் அமெரிக்காவில் பிறந்தவர், ராதா இராஜன் பாட்டி போன்றோர் உண்மை நிலையை உணராமல் வாயை வார்த்தையை ஊடகத்தில் விட்டு இருக்கின்றனர்

தமிழர்க்கு ஜல்லிக்கட்டின் சரித்திரம் தெரியாது, சட்டம் தெரியாது என்றெல்லாம் ...விட மாட்டோம் சட்ட பூர்வமாக எங்கள் இயக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என‌

உச்ச நீதி மன்றம் அதாங்க உச்சிக் குடுமி நீதி மன்றமும் ஒரு வாரத்துக்கு எந்த உத்தரவும் இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக இட மாட்டோம் என சொல்லியுள்ளது இன்னும் மாண்டு போன ஜெவின் வழக்கிலே கூட ஒரு தீர்ப்பைத் தரமுடியா கையாலாகா

கர்நாடகா காவிரி பிரச்சனையில் ஒன்றும் செய்ய கையாலாகா

பாபர் மசூதி இராமர் கோயில் பிரச்சனையில் ஒன்றும் செய்ய இயலா

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரளத்து எதிர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலா....

உச்சிக் குடுமி நீதிமன்றம் தமிழர்க்கு எதிர்ப்பாக மட்டும் ஏதாவது செய்ய வேண்டும் எனத் துடித்துக் கிடப்பதாக‌

சட்ட இயல் முன்னால் அட்டர்னி ஜெனரல் நீதிமான் எனப்படும் சோலி ஜெஹாங்கீர் சொராப்ஜி என்பார்  ஏதாவது இயற்கைப் பேரிடர்களுக்கு மட்டுமே அவசர சட்டம் பொருந்தும், ஜல்லிக்கட்டுக்கா அவுட் ஆப் ஃகொஸ்டீன் என்கிறார்....

எனவே நாம் சொல்வதெல்லாம் இயக்கம் ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டத்தோடு முடிந்து போய் விடக் கூடாது...நாட்டில் கையில் எடுக்க தலையாய பிரச்சனைகள் எண்ணிலடங்காமல் உண்டு....

இன்று லோகேஷ் என்னும் ஒரு தச்சுப் பணி செய்யும் 16 வயது இளம் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது இந்தப் போராட்டத்தின் மூலம் சேலம் ரயில் மறியல் செய்து மின்சார வடத்தைப் பிடித்து தூக்கி எறிந்ததால்...

ஊடகம் தமது பணியை நன்றாகவே செய்திருக்கிறது என்ற போதிலும்...எமது வருகின்ற பதிவுகளின் மூலம் இயக்க ரீதியான முறைகளில் அவை செய்த பிறழ்தல்கள் பற்றி ஏன் இந்த நாட்டில் நிரந்தர மாறுதல்கள் நிகழ அவை என்ன பணியாற்றி இருக்கின்றன என்பது பற்றி எல்லாம் கலந்தாளவ எண்ணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
Related image



மாணவச் செல்வங்களே உஷார்...இந்த அரசியல் வியாதிகள் எளிதில்குணப்படுத்துமளவு  ஆரம்ப நிலையில் இல்லை...கவிஞர் தணிகை...

Friday, January 20, 2017

தமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:கவிஞர் தணிகை.

தமிழ் கல்லூரி மாணவர்களின் எழுச்சி: கவிஞர் தணிகை
Image result for jallikattu marina beach

தற்காலிக தீர்வுக்கு ஏமாந்து போய் விடக் கூடாது

இதே எழுச்சியை பயன்படுத்தி

1. மதுவிலக்குக்கு ஆதரவாகி தமிழ்க் குடும்பங்களை வாழ வைத்து தமிழ்த் தாய்மார்களின் நெஞ்சில் பாலை வார்க்க வேண்டும்

2. காவிரி நீர்ப் பிரச்சனைக்கு ஆதரவாக பயன்படுத்தி மத்தியைப் பணியவைத்து
நிரந்தரத் தீர்வு காண வைக்க வேண்டும் மேலும் நீர் நிலைகள் மேம்பட பாடுபட வேண்டும்.

3. இந்தியாவின் நதி நீர் இணைப்புக்கு தங்களை விதைத்துக் கொள்ள வேண்டும், அந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றி இந்திய மக்களின் துயர் துடைத்து பல மாமனிதர்களின் கனவை நிறைவேற்றி இந்தியாவை மாபெரும் வல்லரசாக நல்லரசாக மாற்ற பாடுபட வேண்டும்

4. இலஞ்ச இலாவண்ய மற்ற சாதி மத பேத துவேஷமில்லாத ஒரு உலகளாவிய பார்வையுடன் தொலைநோக்குடன் அகண்ட பாரதமாய் மாற்ற வேண்டும்.

5. மொத்தத்தில் தமிழகத்தின் நல்லாட்சிக்கும் ஏன் இந்தியாவின் ஒட்டு மொத்த நல்லாட்சிக்கும் நல்லதொரு விழிப்புணர்வு பெற்ற அரசியல் சக்தியாய் உருவெடுத்து இனியாவது இந்தியாவின் இருளாட்சியை விரட்டி
ஒளி மிக்க ஆதவன்களாக விளங்கி மக்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்தம் வாழ்வு மேம்படுத்தி, அத்தியாவசியத் தேவைகளான ,உணவு, உடை,உறையுள்,மேலும் அன்றாடத் தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், அறிவியல்,சமூக மேம்பாடு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் அனைவரையும் முன்னெடுத்துச் செல்லும் ஆக்க பூர்வமான சக்தியாய் இந்தியாவில் இனி இருக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் இனி இந்தியா உங்களால் மாற வேண்டும். உங்கள் கையில் அந்த பணியும் பொறுப்பும் காலம் உங்கள் முன் பணியும். எங்கள் ஆயுளில் என்றுமே இனி நல்லதொரு ஆட்சியை பார்ப்போமா, கோணாத கோல் வரவே வராத என்பார்க்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அனைவர்க்கும் சம நீதி கிடைக்க உங்கள் முயற்சி உண்மையிலெயே அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

ஏன் எனில் இந்த எழுச்சி உண்மையிலேயே அரசியல் வியாதிகள் வேண்டுகோளின் படி கோர்ட்டர், கோழி பிரியாணி, 200ரூ பணமுடிப்பு,அல்லது வாக்குக்கு காசு வாங்கும் கூலிக்கார படையின் சேர்தல் அல்ல என்பதால்

6. தனியார் கல்வி ஒழிக்க, அறக்கட்டளை செல்வ குவியல்களுக்கும் எதிராக இப்படி எத்தனையோ பிரச்சனைகள் நாட்டிலிருந்து கெல்லி எறியப்பட...


உண்மையில் சொன்னால்
உங்களால் முடியும்

இதெல்லாம் உண்மையில்
உங்களால் முடியுமா?

முடிந்தால்

நீங்கள்தான் இந்திய நாட்டின் சிற்பிகள்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

இத்துடன் இந்த பதிவின் நோக்கம் முடிந்து விட்டது. இனி வருவது எல்லாம் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சில கருத்துப் பகிர்வுகள், மேலும் வெளிப் படுத்த வேண்டிய ஆதங்கங்கள்.

பி.கு: சிலருக்கு பீட்டா அல்லாத சிலருக்கும் மிருகவதை செய்வது பிடிக்காமல் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு உங்களுக்கு சொல்லும் அருகதை இருக்கிறது. முடிந்தவரை பிற உயிர்களை சித்ரவதை செய்யாமல் நாம் எந்த செயலையும் மேற்கொள்ள வேண்டுவதும் அவசியம்தான்

ஆனால் சொல்லப் போனால் பிற மதங்களை விட அதிகம் கிறித்தவ மதமும், முகமதியமும் உலகெங்கும் அசைவ உணவின்பால் மிக்க ஆர்வமுடையன. எனவே அருகதை இல்லாதார் அதைப் பற்றி அருகதை இல்லாத பீட்டா போன்ற சங்கங்களை வைத்து நமக்கு சொல்லத் தேவையே இல்லை.

ஒரு வழக்கறிஞர் அழகாக சொல்லி இருக்கிறார்: இந்த ஜல்லிக் கட்டு, ஏறு தழுவுதல் விஷயத்தில்:

நாம் சட்ட வழி நீதி வழி உச்ச நீதிமன்ற வழி நிரந்தர தீர்வும் பெற முடியுமாம்

1. அதை மதம்/சமய வழியில் நடத்துவதாக ஜல்லிக்கட்டை சொன்னால் அதற்கு உச்ச நீதி மன்றமும் ஏதும் தடை செய்ய வழி இல்லை என‌

2. அது நமது அடிப்படைச் சட்டம் என்றால் அடிப்படை உரிமை என்றால் அதில் தலையிட்டு உச்ச நீதிமன்றமும் தடைப் படுத்த வழியில்லை என்றும்

3. எல்லாவற்றிற்கும் மேலாக குடியரசுத் தலைவர் வழியில் அது அனுமதிக்கப்பட்டால் (அதாவது அதுதான் இப்போது அவசர சட்ட முன்வடிவாய் அவரின் அனுமதிக்கும் ஆளுனரின் ஒப்புதலுக்கும் சென்று முடிவதாய் தயாரிக்கப்படுவதாய் இருக்கும் என எண்ணுகிறேன்.)அதையும் உச்ச நீதிமன்றம் தடுக்க வழி இல்லை என..

அந்த பெண் வழக்கறிஞருக்கு நன்றி.

அடுத்து என்ன செய்தாலும் அந்த பீப்பிள் ஃபார் எதிக்ஸ் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல் பீட்டா என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் என்று சிலர் ஊடகத்தில் பேர் குறிப்பிடாமல் கருவிக் கொண்டிருப்பதாக செய்தி இருக்கிறது

ஆனால் இது பற்றிய வழக்கை விசாரிக்க எடுத்துக்க் கொள்ளாமல் உயர் நீதிமன்றத்திற்கே செல்லுங்கள் என மற்றொரு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருப்பதாகவும் நிகழ்வுகள்....

இவங்களை எல்லாம் எதுக்கு நாம கேட்கணும், நிரந்தரத் தீர்வு என்ற ஒன்றிற்காகத்தானே...

கர்நாடகாவில் நீரை அனுப்ப உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல் தடுத்த அந்த மாநில மக்களை எதிர்த்து உச்ச நீதிமன்றம் என்ன செய்தது? அந்த மாநில அரசு எப்படி அணுகியது?

அது கூடவா தமிழ் மாநில அரசுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்?

இவர்களை எல்லாம் கேட்கவே வேண்டாம், வாக்கு வாங்க வருவார்கள் ,நிலை மீறும்போது காவல்துறையையும், காவல்துறைத் தலைவர்களையும் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி வைப்பார்கள்....வாக்கு வாங்க, கேட்க வரும்போதும் இதே காவல்துறைத் தலைவர்களை, காவல் துறையினரை அனுப்பி வைக்கலாம் அல்லவா?....

Image result for jallikattu marina beach

எனவே
நீங்கள் செய்ய வேண்டியதை செய்து கொண்டே இருக்க வேண்டும்.மாறுதல் நிகழும். சரி எனத் தெரிவதற்கு எல்லாம் இவர்களிடம் உத்தரவு அனுமதி என்று எல்லாம் கேட்டு பணிந்து நின்று கொண்டிருப்பதும் கூட செயல்பாட்டுக்கு அழகல்ல...இது எனது சொந்தக் கருத்து.


இப்படி மட்டும் நமது ஈழத்து தமிழினத்துக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கும் முன் திரண்டிருந்தால் இலங்கை, இந்தியா நம்மை ஏமாற்றவே முடிந்திருக்காது. ஒரு இனப் படுகொலை நடந்து தமிழர்கள் பல லட்சம் பேர் அழியாமல் காப்பாற்றப் பட்டிருப்பரே...இனியாவது தமிழர்க்கு வாழ்வு மலரட்டும் புதிய விதிகள் எழுதப்படட்டும், பாரம்பரியக் காற்றில் புரட்சிப் பூக்கள் மலரட்டும், புதுப்புனல் பெருகட்டும்...


தமிழக கல்லூரி மாணவர்களின் எழுச்சி:

உலகெலாம் உள்ள தமிழினத்தை எல்லாம் உசுப்பி விட்டு விட்டது...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Monday, January 16, 2017

ராதா கிருஷ்ணன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக: கவிஞர் தணிகை

ராதா கிருஷ்ணன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக: கவிஞர் தணிகை

Related image

தங்கராஜ் என்னும் கால் ஊனமான வாடகைக் கார் ஓட்டுனராக பார்த்திபன் வந்து நமக்கு ஒரு படத்தை தந்திருக்கிறார். தம்பி ராமய்யா உடன் பணி புரியும் வாடகைக்கார் ஓட்டுனர். கெவின் பாக்யராஜ் மகன் சாந்தனு ஒரு என் ஆர் ஐ? (No he is a foreigner) இளைனர் தமிழகத்துக்கு பல காரணங்களுக்காக இந்தியா தமிழ்நாடு வந்துள்ளவர். தங்கராஜ் மனைவியாக மோகினி பார்வதி நாயர் படம் முழுக்கத் தெரிகிறார் பளிச்சென அவரை வைத்துத் தான் கதை பின்னப்பட்டிருக்கிறது.கெவினுக்கும் மோகினிக்கும் உள்ள ஈர்ப்பு கதையை நகர்த்துகிறது

கம்பி மேல் , அல்லது கயிற்றின் மேல் நடப்பது போன்ற பேலன்சிங் ஆன கதை.கொஞ்சம் சிறுவர் சிறுமியர் எல்லாருடனும் சேர்ந்து பார்க்க முடியாத கதை திரைக்கதை. குரு பாக்யராஜுக்கும் இவருக்கும் கதை திரைக்கதை அமைப்பது என்பது கை வந்த கலை.

கொஞ்சம் 7 ஆவது நாட்கள் (பாக்யராஜ்), கொஞ்சம் கன்னிப் பருவத்திலே(பால குரு) போல கொண்டு வந்து, அதன் பின் திரைக்கதை மூலம் படத்தை எடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்.

விரல் விட்டு எண்ணக் கூடிய பாத்திரங்கள், வாடகைக் கார், ஒரு பங்களா, கொஞ்சம் அவுட்டோர் அவ்வளவுதான் அதிலேயே படம் முடிக்கப் பட்டு விட்டது.15 பொங்கலன்று வெளி வந்த இந்தப் படத்தை உடனேப் பார்த்து விட்டு எனக்கும் முன்பே ஒரு சிலர் எழுதி விட்டனர். எனினும் எனது பங்கை நான் ஆற்றியே ஆக வேண்டும்.

தினமும் சேலம் ரெயில்வே நிலையத்தில் பார்த்திபனின் குரல் துரத்தியபடியே இருந்தது கோடிட்ட இடங்களை நிரப்புவது பற்றி 15 விநாடிகளுக்குள் சொல்ல வேண்டும், இப்போதே 14 விநாடி முடிந்து விட்டது மிச்சமிருக்கும் ஒரு விநாடியில் சொல்ல வேண்டுமானால் படத்தைப் பாருங்கள் என்றும், இங்கு ரெயில்வே நிலையத்தில் கோடிட்ட இடங்களை ரயில் வந்து நிரப்புவது போல நீங்களும் தியேட்டரை வந்து நிரப்புங்கள், ஒரு டிக்கட் வாங்கினால் ஒரு ரயிலே ஃபிரி (இலவசம்) என்பது போல இருக்கும் என்றெல்லாம் தன் குரலில் பேசியுள்ளார்.Image result for koditta idangalai nirappuga


Image result for koditta idangalai nirappuga
அதுமட்டுமல்லாமல் விஜய் மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து என பைரவா மூன்று எழுத்துக்கும் பிறகு தம் படத்தை வெளியிடப் போவதாக சொல்லி பேசினார்.

செலவு குறைவான படம்தான். தம் குருநாதரின் பையனை நாயகனாக‌ வைத்தே கதாநாயகன் செலவைக் குறைத்துள்ளார். ,குறைவான பிரபலமான நடிகரை வைத்தே படம் ரோல் ஓவராகி உள்ளது.வசனம் நன்றாக உள்ளது என்றே சொல்ல வேண்டும் இரட்டை அர்த்தம் இருந்த போதிலும். ஆனால் எல்லாவற்றிற்கும் பாலுணர்வு அடிப்படையாக இருப்பதால் படம் ஏ சான்றிதழ் பெற வேண்டிய படமாகிறது.

என்ன தமிழில் சொல்லப்பட்டிருப்பதால் கொஞ்சம் நாசூக்காக கையாளப்பட்டு சொல்லப்பட்டிருக்கிறது . இதுவே இந்தி, மலையாளம், ஆங்கிலம் அல்லது பிற மொழி அல்லது பிற நாட்டு அல்லது பிற தேசத்து பிரதேசத்துப் படமாக இருந்திருந்தால் இன்னும் வெளிப்படையாக காட்சிகள் நகர்ந்திருக்கும்.

ஆனால் கரு என்னவோ , பணக்காரர்கள், விமானத்தில் பறப்பவர்கள் அவர்களுக்கு தகுதியான அளவில் கள்ளத்தனம் செய்யும்போது வாடகைக் கார் ஓட்டுனர்கள் தாம் முன்னேற கொஞ்சமாவது பணம் சம்பாதித்து செட்டிலாக கொஞ்சமாவது கள்ளத்தனம் செய்யக் கூடாதா அது தவறா என்ற கெள்விகள்.. பார்ப்பவரை நேர் மறையான எண்ணம் விட்டு எதிமறையாக இன்றைய உலகில் வாழ வேண்டுமானால் சம்பாதிக்க வேண்டுமானால் இது போல எல்லாம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, ஆனால் பொண்டாட்டி விரதம்,பத்தினி விரதன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார். கோடிட்ட இடத்தை நம்மையே நிரப்பிக் கொள்ளச் சொல்லி.

அதாவது இவர்கள் நடிப்பை நம்பி இவர்களை கணவன் மனைவியாக நினைக்கும் கெவின் என்னும் இளைஞர் அடுத்தவர் மனைவி ஆனாலும் பார்வதி நாயர் ஏற்றிருக்கும் பாத்திரமான மோகினியை மோகிக்கிறார். ஏன் தம்முடன் வந்தால் மனைவியாகவும் ஏற்க தீர்மானிக்கிறார். இதை தவறு என நீங்கள் கோடிட்ட இடத்தை நிரப்பச் சொல்லி இருக்கிறார் ஒரு பக்கம்,

ஆனால் அந்த இளைஞர் தம் நாடு திரும்பியதும் தமது செயலுக்கு பாவ மன்னிப்பு கேட்கிறார்.ஆனால் இங்கே பாலியல் தொழில் செய்து வரும் மோகினியும் வாடகைக் கார் ஓட்டுனராக இருந்து வரும் தங்கராஜும் தமது திட்டத்தின் பலனாக கிடைத்த பணத்தை பரிசை கிடைத்த வாழ்வை ஏற்று மகிழத் தயாராய் இருக்கிறார்கள். அதிலும் பாலியல் தொழில் புரியும் மோகினியே பரவாயில்லை பணத்துக்காக செய்த போதும் தமது தொழில் தர்மம் விட்டு வெளிவராமல் நடித்த புனிதத்தில் ஒரு ஒட்டுதல் இருக்கிறது என தமது செயல்கள் தமக்கு ஒரு வாழ்தலின் பொருள் கற்பித்தமைக்காக பொருளை பணத்தைக் கூட விட்டுத் தருகிறார்

ஆனால் இந்த ஓட்டுனர் தங்கராஜ் பாத்திரம் தமது மனைவிக்கு துரோகம் செய்யமாட்டேன் என்றும், அதே சமயம் எந்த மனிதரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறேன் என்னும் பச்சோந்தி பாத்திரம்...

Image result for koditta idangalai nirappuga


நிறைய கோணங்களில் இந்த கோடிட்ட இடங்களை நிரப்பலாம் எல்லா விடையுமே சரியாக இருக்கும். இது மட்டுமே சரியான விடை என்றெல்லாம் சொல்லி விட முடியாது....ஒரு பார்த்திபன் படம், உள்ளே வெளியே போல...

எந்த அளவு வெற்றியுறும் என்று சொல்வதற்கில்லை.

Image result for koditta idangalai nirappuga

ஒரு படம் பார்த்த உணர்வு இருக்கிறது ஆனாலும் பாராட்டும்படியாக இல்லை. ஏதோ ஒரு நெருடல். எதையும் தெளிவாக சொல்லாமல் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்தபடி...தெளிவு படுத்தாத படம். உண்மையில் அது ஒரு தெளிவுக்கு வராத விவாதத்துக்குரிய கருப்பொருள் கூட...அது பற்றி பேசியுள்ளது...முடிவுகள் மாறிக் கொண்டே இருப்பது காலத்திற்கேற்ப, நாடு, மொழி, பிரதேசத்திற்கேற்ப சட்டம், நீதி ஒழுக்கம் மாறுபடுவது போல...

நூற்றுக்கு 40 கொடுக்கலாம்

மறுபடியும் பூக்கும் வரை:

கவிஞர் தணிகை

Sunday, January 15, 2017

இன்று போய் நாளை வா என்பதே அரசு அலுவலகங்களா? கவிஞர் தணிகை

Image result for go today come tomorrow

எமது வலைப்பூவைப் படித்து வருவார்க்கு தெரிந்திருக்கும், நாம் ஏற்கெனவே சொன்ன இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக் கோட்டை கட்டினார் மோடி? என்ற ஒரு பதிவை நினைவுக்கு கொண்டு வந்து இதைத் தொடரலாம்...

நாம் அந்த நிலவரித்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருந்ததன் தொடர்ச்சியாக, அங்கிருந்த ஒரு எழுத்தர் அல்லது உதவியாளர் பெண்மணி சொன்னபடி எனது துணைவியாரின் பேரில் நீதிமன்ற வில்லை ஒட்டிய விண்ணப்பத்தை அளித்து உரிய ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் சென்று சந்திக்கச் சொன்னேன். கடந்த 12.01. 17,ல்

அவர்களும் சென்று சந்தித்திருக்கிறார்கள் (டோக்கன் கொடுத்தார்களாம்)அவர்கள் அடையாள எண் 22. அவர்கள் கொடுத்ததை எல்லாம் பார்த்து விட்டு, அவரையே வரச் சொல்லுங்கள் 19.01.17ல் வந்தால் சந்திக்கலாம் என்று வட்டாட்சியர் சொல்லி விட்டு இந்த ஆவண நகல்களையும் திரும்பக் கொண்டு செல்லுங்கள் அவர்தான் கை ஒப்பம் இட வேண்டும் எனச் சொல்லி இவரை நிராகரித்து < மனுதாரர் நேரில் ஆஜராகவில்லை> எனத் திருப்பி அனுப்பி விட்டார்.

மறுபடியும் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு சென்று சந்தித்தாக வேண்டும் அன்றைய தினமாவது பணி முடியுமா முடியாதா, அந்த வட்டாட்சியர் வருவாரா வரமாட்டாரா என்பதெல்லாம் காலத்தின் கையில்

இந்தக் கடிதமே போதும் , நீங்கள் வரவேண்டியதில்லை, உங்கள் துணைவியாரை அனுப்பினாலே போதும் என்ற அந்த இளகிய மனம் கொண்ட எழுத்தர் வட்டாட்சியர் முன் வாயே திறக்கவில்லையாம், எனது துணைவியாருக்கும் அந்த அளவு துணிச்சல் கிடையாது நடந்ததைச் சொல்ல அப்படியே திரும்பி விட்டார், அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எனக்கு பாட்டு விழுந்தபடி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த அழைப்புக் கடிதத்திலேயே உங்கள் அதிகாரம் பெற்ற நபர் வரலாம் எனச் சொல்லப் பட்டது பயனின்றியே இருக்கிறது.


Related image

இப்படி திருப்பி அனுப்பினால்தான் அவர் வருவார் எனச் சொல்லியே நேரில் ஆஜராகவில்லை எனச் சொல்லி உள்ளனர். ஆனால் இதற்காக இதுவரை நாம் 3 முறை அந்த அலுவலகத்துக்கு சென்றுள்ளோம். இதைப் பதிவு செய்து வைக்கிறேன். நீங்கள் சாட்சியாக..பார்ப்போம் எதிர் வரும் காலத்தில் என்ன நடக்கிறது என...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.

பொங்கலும் போகியும் ஏறு தழுவுதலும் ஜல்லிக் கட்டும்: கவிஞர் தணிகை.



கிரிக்கெட் மட்டையும் கைகளில் மதுப் புட்டியுமாக தமிழனமும் மாறி விட்ட சூழலில் 2017 துவங்கி இருக்க பொங்கல் பொலிவிழந்து நியாயவிலைக் கடை இலவசப் பொருட்களில் மாறி இருக்க,ஜல்லிக் கட்டு என்று சொல்லாமல் ஏறு தழுவுதல் என்று சொல்லி தடையை மீறுங்கள் என தமிழ் நாட்டின் பெரும்பாலான எண்ணக் குவியல்கள் குவிந்து கிடக்க...அறுவடை இல்லாத பொங்கலாய் இந்தப் பொங்கல்.... மழையின்றி, நீரின்றி, விளைச்சலின்றி...நிலமெல்லாம் மலடாய், காய்ந்து ,பிளந்து கிடக்க...

எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் போட்டிகள் , ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று அல்லது 4 இளைஞர்கள் இது போல சில மோட்டார் சைக்கிள்களில் ஒரு டீம் கிரிக்கெட் மேட்ச் நடக்கும் பல இடங்களிலும் சென்று விளையாடியபடியே சென்று கொண்டிருக்கிறது ஏதாவது பரிசு கிடைக்குமா என்று முயற்சி. கடைசியில் இரவானதும் மதுப் புட்டிகளுடன் உல்லாசம். நல்ல வியாபாரம் மதுக்கடைகள் வழக்கம் போல.

பல்லாயிரக்கணக்கான பரிசு மழைகள். எங்கோ ஒரு இடத்தில் மட்டும் கபடிப் போட்டி நடத்துவதாக விளம்பரப் போஸ்டர் இருந்ததை கவனிக்க முடிந்தது. மற்றதெல்லாம் கிரிக்கெட்தான்.

இந்நிலையில் அறுவடைத் திருநாளான பொங்கல் எப்படி எனப் பார்த்தால், நீரில்லா தமிழகத்தில் எப்படி நிலம் பூ பூக்கும்,காய் காய்க்கும், பயிர் முளைக்கும் எங்கும் வறட்சி நிவாரண நிதி வழங்கக் கோரி மக்களின் கோரிக்கைகள். மந்திரியை இடைமறித்தும் கேட்கப் பட,அவர் உரிய ஆவணங்கள் இருந்தால் தாமாக கிடைக்கும் என பட்டும் படாமல் பதில் சொல்லியவண்ணம் பயணத்தை தொடர்ந்தாக செய்திகள்

போகிப்பண்டிகையைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் இந்த ஆண்டு வெண்ணிற பூளைப் பூக்கள் அறவே இல்லை. வெறும் ஆவார மொட்டுகள் கொஞ்சம், மீதி எல்லாம் வேப்பிலை வைத்து ஆசையை போக்கிக் கொண்டனர் மக்கள் கிராமங்களில் கூட வீட்டின் வாயிலில் கொஞ்சம் வேப்பிலையை வைத்து ஓரிரு இடங்களில் செருகி வைத்திருந்ததோடு சரி.காலம் மாற மாற எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு போகி அன்று இந்தப் பழக்கம் மறைந்து விடும். ஒரு கட்டு இந்த இலைகள் 10 ரூபாய், நானறிந்த ஒருவர் கொஞ்சம் வைத்திருந்தார் ரூ.40க்கும், 60க்கும் வாங்கினேன் என்றார். எனக்கு வழக்கம்போல இயற்கை நன்மை செய்ய காசுக்கு வாங்காமலே நடைப்பயிற்சியின் போது அரிதாக ஓரளவு சமாளிக்கும் அளவில் கிடைத்தி விட்டது. ஆனாலும் பூளைப்பூ அரிதாகவே கிடைத்தது.

இந்த ஆண்டு நாம் தனிப்பட்ட முறையில் கிழிந்திருந்த காலணியின் உறைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, புதுக் காலுறைகளை உபயோகிக்கப் படுத்த ஆரம்பித்ததும், உடல் என்ற உறை தமது 3 ஆம் சுழற்சியை ஆரம்பித்ததை நினைவு படுத்த உப்பு, உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, குடல் புண், மூலம், நிறமி அணுக் குறைபாடு எல்லாம் சேர்ந்திருக்கும் உடலை இன்னும் ஆயுள் நீட்டிப்பு செய்ய இந்த ஆண்டு முதல் பேக்கரி ஐட்டம், கேக், ஸ்வீட், விருந்து, கிழங்கு வகைகள்ஆகியவற்றை உண்பதில்லை என்ற  புதிய முடிவை அமலாக்கி விட்டேன், அதன்படி நமது பொங்கல் பொங்கலை வாயில் வைக்காமலே கரும்பு கூட கடிக்காமலே சென்று விட்டது, போகி அன்று வேகவைத்த சர்க்க்ரை வள்ளிக் கிழங்கையும் கையாலும் தொடவில்லை.  மேலும் அரிசி உணவையும் குறைத்து, உடற்பயிற்சியை மேலும் சீராக்கவும் செய்ய ஆரம்பித்தேன்.அப்போதும் எண்ண நெருடல்களும் வாக்குவாதங்களும் தொடர்ந்த படியேதான் இருக்கின்றன அதையும் சீர் படுத்த வேண்டும் என்ற அவா உள்ளது. மேலும் கடமை இருக்கிற படியால் இன்னும் இந்த உலகில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.

Related image


எல்லாமே தமிழகத்துக்கு ஏறுக்கு மாறாக இந்த மத்திய பி.ஜே.பி அரசு செய்து வருவது யாவரும் அறிந்தது.காவிரியில் நீர் இல்லை என தமிழகத்துக்கு தரவேண்டிய பங்கை தராத பிரச்சனையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே ஒன்றும் செய்ய முடியவில்லை அதற்கு மத்திய அரசும் எந்த வழியும் செய்ய வில்லை. இந்நிலையில் நடுவர் மன்றம் அமப்ப்பது பற்றியும் உச்ச அமைப்புகள் எதுவும் செய்யவில்லை.ஆனால் ஜல்லிக் கட்டு என்ற பேரில் பொலி எருதாட்டம், (இளமி என்ற படம் இன்று பார்க்க வேண்டிய படம் அதில் மாடு பிடித்தலின் 3 வகையும் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது) மாடு விரட்டிப் பிடிப்பது, அதை விடுத்து ஏறு தழுவி அதன் திமலைப் பிடித்து அடக்குவது என தமிழரின் வீர விளையாட்டுகள் பொங்கல் அன்று நடைபெறுவது எருது, காங்கேயம் காளை, கோயில் காளை போன்றவற்றிற்கு ஒரு அற்புத பயிற்சி.

அந்தக் காலத்தில் வீர விளையாட்டுக்கு ஒர் மரியாதை உண்டு பெரும்பரிசுகளும் உண்டு ஏன் திருமண நிகழ்வுக்கே பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுப்பதுமுண்டு.இந்த போட்டிகளில் வெல்லும் இளைஞர்க்கு.

ஆனால் இப்போது யாவும் மறைந்து வருகிறது. மதுரை  , திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் மட்டும் இந்த அவா இன்னும் இளைஞர்களிடம் ஊறிக் கிடக்கிறது. மற்றைய தமிழகப் பிரதேசங்களில் எல்லாம் அது மறைந்து விட்டதுதான்.

ஆனால் அதற்காக மத்திய அரசு தடை செய்வதில் ஒரு அர்த்தமும் பொருளும் இல்லை . எனவேதான் கமல் முதற்கொண்டு அனைவரும் கேட்கின்றனர் மாட்டுக் கறி சாப்பிடுவது தடை செய்யப் படாத போது இதற்கு எதற்கு தடை என்று...? நியாயமான கேள்விகள்.பிரியாணையைத் தடை செய்து விட்டு இதை தடை செய்திருக்கலாம் என்பது சரிதான்.
Related image


மதுவைத் தடை செய்யாத அரசு
புகைப்பதை தடை செய்யாத அரசு
சிவப்பு விளக்கு பாலியல் தொழிலை தடை செய்யாத அரசு

தேர்தலில் பணவிளையாட்டுகளை தடை செய்து சீரான ஒழுங்கான தேர்தலை நடத்த அருகதை அற்ற அரசு,
பொது இடத்தில் சிறு நீர் கழிப்பதை,அசுத்தம் செய்வதை , குப்பை போடுவதை தடுக்க முடியாத அரசு
பாலியல் படங்களை இணையத்தில்  தடை செய்ய முடியா அரசு
புதிதாக வரும் சினிமாப் படங்களை இணையத்தில் வெளிவருவதை தடை செய்ய முடியா அரசு

தம் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர முடியா அரசு

அறக்கட்டளை வழியே மக்களின் செல்வங்களை ஓரிடத்தில் குவித்து தனி மனிதர்களை கோடிகளில் புழங்க வைக்கும் அரசு

தமிழகத்தில் அரசியலில் கால் உன்ற முடியாது என்று அறிந்த நிலையில் கர்நாடகா அரசை வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என அனைவரும் அறியும் வண்ணமே கர்நாடகாவுக்கு ஆதரவாகவும், தமிழகத்தை நெருக்கியும் பல செயல்கள் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் செய்வதும்...

மாடுகளுக்காக இவர்கள் கவலைப் பட்டால் அடிமாடுகளாக கேரளா கொண்டு செல்லப்படும் மாடுகளை சரணாலயம் கட்டி பாதுகாக்கலாம் புண்ணியம் கிடைக்கும் அதை எல்லாம் விட்டு விட்டு வருடத்தில் ஒரு முறை ஆங்காங்கே செய்து வந்த இந்த இளைஞர் விளையாட்டை தடை செய்தது சிறு துளியும் நெறியுடையதல்ல....

ஒரு வழியாக தமிழகத்தின், இந்தியாவின் மண் வள ரகங்களான கால் நடைச் செல்வங்களை முடித்து சீமை பசு, சீமைக் கோழி, இப்படி எல்லாம் வீரியமற்ற இனங்களை உண்டு பண்ணி விட்டார்கள் மனிதர்கள் உட்பட...

எல்லாமே ஆங்கிலம் ஐரோப்பிய மேனாட்டு கலாச்சார முறைகளுக்கு மாறி விட்டது, இந்தியக் கலாச்சாரம், தமிழின முறைகள் எல்லாம் மாறி கடைசித் தருவாயில் உள்ள நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது.

எங்களது தலைமுறைக்காவது கொஞ்சம் தெரியும், இனி வரும் தலைமுறைகளுக்கு எல்லாம் நமது மண்ணின் வளம்,மணம், உயிர் யாவுமே தெரியாமலே மறைந்து போகும்...

போராடும் வீரர் யாவருக்குமே நாம் நன்றிக் கடன் பட்டவர்களாவோம். ஆனாலும் அதையும் மீறிய வளர்ந்த இராமலிங்க வள்ளலின், புத்த, ஜைன மதக் கொள்கை யாவும் உயிர் ‍ஹிம்சை பற்றி பேசுவது யாவும் உயர்ந்தது. கிறித்தவம், முகமதியம், போன்றவை உயிப்பலி செய்து உண்பது தவறு எனக் கருதுவதில்லை. இந்து மதப் பிரிவுகளில் இவை பேசப்படுவதுண்டு. ஆனாலும் இந்த அரசுகளுக்கு எல்லாம் இவை பற்றி பேச எந்த அருகதையுமே இல்லை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





Wednesday, January 11, 2017

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

மோடி இந்த மண் கோட்டையை வைத்துக் கொண்டா இத்தனை மனக்கோட்டை கட்டினார்? கவிஞர் தணிகை

Related image


மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...


வங்கியில் கூட்டம் குறைந்த பாடில்லை. இன்று மறுபடியும் நான் பாரதீய ஸ்டேட் வங்கிக்கும் நிலவரித் திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று வர நேர்ந்தது. அதை சுருக்கமாக சொல்கிறேன் . நாம் எப்போதும் சொந்த அனுபவம், உண்மைகளின் அடிப்படையிலேயே எதையும் எழுதுகிறோம். சேரிட்டி ஸ்டார்ட்ஸ் ஃப்ரம் ‍ஹோம் என்பது போல...

நிலவரித் திட்ட அலுவலகத்திற்கு சென்றேன் இன்றா வரச் சொல்லி இருக்கிறார்கள்,எனப் பார்த்து விட்டு சரி 11 மணிக்கு வாருங்கள் என ஒரு உதவியாளர் சொன்னார் அப்போது மணி 10.43. என்ன இன்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார், என்ன இன்னைக்கி எல்லாம் வரச் சொல்லி இருக்கிறார் என்று பேசியபடியே என்னை அனுப்பி வைக்க குறியாய் இருந்தார் அந்த கீழ் நிலை ஊழியர்.

அந்த நிலவரித் திட்ட வட்டாட்சியரின் கடிதத்தில் இருந்த நாள் குறித்த இடத்தில் இருந்த கோடுகள் 11.கோடு 1 கோடு 17 என்னும்படியாக இருந்தது கண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு மிகவும் சீரிய தன்மையுடன் தேவையான எல்லா ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் , குடிநீருடன் சென்று சேர்ந்தேன். ஒன்றும் பெரிய அளவில் கூட்டம் இல்லை

எப்போது இந்தக் கடிதம் கொடுத்தார்கள்? எந்த ஏரியா என்றெல்லாம் கேட்டார்கள் பதில் கொடுத்தேன்.

  சரி இன்னும் 11 மணி ஆகவில்லை அதனிடையில் வங்கிக்கு செல்லலாம் விண்ணப்ப படிவம் 60 கொடுப்பது பற்றி எல்லாம் விசாரித்தேன், அது பற்றி பெரிய அக்கறையோ விழிப்புணர்வோ இன்னும் அங்கு அவசியமாக எழவில்லை. காலம் போன கடைசியில் பிப்ரவரி 28 வரும்போது எல்லாம் பற பற வென பறப்பார்களோ? நடப்பு எப்படி என விசாரித்தேன், எந்த வித செயல்பாடுகளும் பெரிதாக இல்லை மோடியின் வீழ்ச்சி செயல்பாடு தவிர என்றார்கள். இன்னும் வரிசையில் நின்றவர்க்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி பணம் போடவோ பணம் எடுக்கவோ எந்த இயந்திரமும் பணி செய்யவில்லை.
Image result for veerapandiya kattabomman statue


எப்போதும் வங்கி பாஸ் புத்தகத்திற்கு வரவு செலவு பதிவுகளை பிரிண்ட் செய்வது உள்ளே தமது வேலையை செய்யவில்லை, காரணம் ஊழியர் குறைவாகவும் காரணம் இருக்கலாம். வெளியே பாஸ் புத்தகத்தில் என்ட்ரி போட ஒரு வரிசை. அதற்கு ஒரு செக்யூரிட்டி என்ட்ரி போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். சலித்துக் கொண்டு. ஃஅங்கலாய்த்தபடி நிறைய பேருக்கு நிறைய என்ட்ரி போட வேண்டியதிருக்கிறதே என்று.. போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார் அது அவரது வேலை, பணி என்பது என்று இருந்தும்

விவரம் அறிந்த என் போன்றார் தாமே என்ட்ரி போட்டுக் கொள்ள முடியும்,ஏன் கடந்த முறை நானே தான் போட்டுக் கொண்டேன்,எல்லாரும் ஏ.டி.எம் என்றானபின் வரவு செலவுக் குறிப்பை நெட் பேங்கிங் மொபைல் பேன்க்கிங் வழி தெரிந்தபடி இருக்க பாஸ்புக் என்ட்ரி போடுவது அரிதுதான் அதற்காக என்ன செய்ய முடியும் என நிலையை தெளிவுபடுத்தினேன் அவருக்கு.

மற்றொரு வங்கியில் இந்த மோடியின் செயல்பாடு ஆரம்பத்ததில் இருந்து அதாவது நவம்பர் 8 முதல் எந்த பாஸ்புக்குக்கும் என்ட்ரி போட்டுத் தருவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இது ஒரு நிலை வங்கியில்... நாம் நமது நிலவரித்திட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சரியாக 11 மணிக்கு அவர்கள் சொன்னபடி திரும்பினோம்
சொன்னவுடன் மற்றொரு ஊழியர் அனேகமாக அவரும் அலுவலக உதவியாளர், அட்டன்டர் அல்லது பியூன் என்ற நிலையில் இருப்பவர், போங்க போங்க இன்னைக்கு இல்லை நாளைக்குத்தான் என்றார், இன்று வரச்சொல்லி தபால் கொடுக்கப்பட்டு இருக்கிறது வட்டாட்சியர் பச்சை இங்கில் கையொப்பமிட்டு எனக் காண்பித்தேன்,

அட அது மாசம் இன்னைக்கு எங்க போட்டிருக்கு, ஓ.சி,யில் நாளைதான் போட்டது,  /1/17என்றுதானே மாதம் தானே உள்ளது தேதி எங்கே உள்ளது? இதில் போடவில்லையா என உடனே வாங்கி சரியாக கோடுகளுடன் இருந்த இடத்தில் டக்கென 12 என தேதி எனப் போட்டுவிட்டார்.

அதாவது இவர்கள் அலுவலகம் எனக்கு அனுப்பிய கடிதத்தில் தேதியைக் குறிப்பிடாமல் மறந்து விட்டு அலுவலக நகலில் மட்டும், ஓ சி..ஆபீஸ் காபி...12/ ஜனவரி 2017 எனக் குறிப்பிட்டுள்ளார், அதைப் பார்க்காமல் வட்டாட்சியரும் 06.01 17ல் தேதியிட்டு, கையெழுத்திட்டு கொடுக்கச் சொல்லி உள்ளார் .எங்கே இவரது தவறு வட்டாட்சியருக்கும் தெரிந்து விடுமோ என்று அவசரமாக சரி செய்துவிட்டு என்னை நாளைக்கு வா , தாசில்தார் இல்லை என துரும்பாக வெளியேறச் சொல்லுகிறார் என்னவோ அரசு அலுவலகம் இவன் அப்பன் வீட்டு சொத்து போல, தீவிர எண்ணம் தலைதூக்கியது, குடும்பம் இன்றைய நிலை எல்லாம் என்னை சாந்தப்படுத்தியது.

ஒன்று சிறை செல்ல வேண்டும் புத்தி புகட்டிவிட்டு, அல்லது கைகலப்பாக மாறி பிரச்சனை திசை திரும்பியாக வேண்டும் எனவே காந்தியவாதியாக பொறுத்துக் கொண்டு இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு இதற்காக வந்திருக்கிறேன், நீ செய்தது தானே தவறு என்ற என் பார்வையை நியாயத்தை புரிந்துகொண்ட ஒரு பெண் அலுவலர், எனது ஆவணங்கள், நான் ஏற்கெனவே இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்து துணைவியாரின் பேருக்கு கடிதம் எழுதிக் கொண்டு அவரே ஆவணங்களை எல்லாம் கொண்டு வருவார் சரி பார்த்து பட்டா வழங்கவும் என்றிருந்ததைப் படித்து விட்டு இது போதும் சார், நீங்கள் நாளை வரவேண்டாம், நீதிமன்ற வில்லை 2 ரூ மதிப்புக்கு மட்டும் ஒட்டி, அழைப்புக் கடிதத்தை நகல் எடுத்து அனுப்பி வையுங்கள் என்றார். ஒரிஜினல் எல்லாம் உள்ளது பார்ப்பதெல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள் என எல்லா ஆவணங்களை எல்லாம் காட்டத் தயாரானேன். இல்லை சார் வேண்டாம் என்றவர், நாளை வரும்போது ஒரிஜினல் எல்லாம் தேவையா என்று கேட்டதற்கு கொடுத்தனுப்புங்கள் என்றார்.

எங்களது உரையாடல் நிகழும்போதே மற்றொரு பெரியவர் வந்து கெஞ்சிக் கொண்டிருந்தார் அந்த சிறு அறையில் உள்ள சில டேபிள்களும் சில சேர்களும் காலி 3 இருக்கைகளில் மட்டும் அலுவலர்கள் இருந்தனர், இந்த வீணாய்ப்போன எடுபிடிகள் வெளியே சென்று விட்டனர்...

அந்தப் பெரியவரிடம் நீங்கள் அடிக்கடி போன் பண்ணிக் கேட்கிறீர்கள் என்றார்கள், அதற்கு அவர் மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என இறைஞ்சிக் கொண்டிருந்தார், சரி போங்கள் என்றார்கள் அவர் வெயிலில் வந்தது சற்று சிரமமாக உள்ளது, பெஞ்சில் அமர்கிறேன் சற்று என அமர்ந்து கொண்டார்.... இப்போது வங்கிகளுக்கு மக்கள் ஓடி வரட்டும், பின்னால் வங்கிகள் எல்லாம் மக்கள் பின்னால் ஓடிவரும் பாருங்கள் என்ற மோடியின் திருவாசகம் ஒருவாசகம் எனது கண்ணில் காதில் தேனினும் இனிய கீதமாய் ஒலித்தது.

Image result for indian economy


இத்தனைக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட கட்சித் தலைவர் பத்திரிகைச் செய்தியில் பட்டா வழங்கல் பற்றியும் போட்டோவுடன் பட்டா தருவது பற்றியும் சிறப்பாக பேட்டி கொடுத்தது வெளி வந்தது சிரிப்பாக சிரிக்கிறது. அந்த அலுவலகம் இன்னும் 6 மாதமோ ஒரு வருசமோ இருக்கும் அதற்குள் இந்த பட்டா எல்லாம் கொடுக்கப்படுமா என பாமர மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனராம். அந்த வதந்தி வேறு உலவ விடுவது அந்த அலுவலகத்தில் பணி செய்யும் கீழ் மட்ட ஊழியர்களேதானாம்.


இந்தியா போன்ற ஒரு பெரிய  நாட்டின் ஒட்டு மொத்த சீர்பாடுகளில் இது போன்ற சிறிய பாதிப்புகள், தனிமனித இடர்ப்பாடுகள் இருக்கும்தான் என சிலர் சப்பைக் கட்டு கட்டலாம் அவனவன் சம்பாதிக்கும் பணத்திற்கு அவனவன் தேவைக்கு செலவு அளிக்க வழி இல்லாமல் இதெல்லாம் என்ன ஒரு தேசம் என்ன ஆட்சி...அதற்கு சரியான திட்டம் இடப்பட வேண்டுமல்லவா?துன்பங்களே தொடர்கதையானால் எவருக்குமே விரக்தி தானே வரும்..இத்தனைக்கும் மோடிக்கட்சிக்கு இடைத்தேர்தலில் இந்த பாதிப்புகளுக்கு இடம் இருக்காதாம்...இங்க இந்த நாட்டில எவனுமே வேலை செய்யத் தயாரில்லை திருட மட்டுமே தயாராக இருக்கிறான் அரசு அலுவலங்களில் அவனை வைத்துக் கொண்டு நல்லவர் அரசாண்டாலே கஷ்டம், மோடி போன்ற ஆட்கள் என்ன செய்ய முடியும்?

இப்படிப்பட்ட வங்கிகளையும், அரசு அலுவலகங்களையும் வைத்துக் கொண்டு தப்புக் கணக்கு போட்டு விட்டு கிராமங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எந்த அறிவு கெட்ட மடையனோ சொன்னது போல அமெரிக்க நாட்டு பாணியில் அம்பானியிடம் பணம் பெற்று தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என நின்று ஜெயித்து விட்டு மக்களை எல்லாம் கொல்லாம கொல்கிறார்கள் இந்த ஆட்சி என்னும் பேய் அரசான்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் மூலம்...

ஆக மோடி வங்கிகளை எல்லாம் மக்கள் பின்னால் ஓடி வரச் செய்ய இந்த திட்டம் கொண்டு வந்தாராம், 50 நாளில் நிலை சரியாக வில்லை என்றால் தற்கொலை செய்வாராம் தூக்கு இட்டுக்க் கொள்வாராம், இந்த திட்டம் தோற்றும் 50 நாள் ஆன பின்னும், மக்கள் வங்கி முன் பழியாய்க் கிடக்கும்போது...இப்போது அயல் நாட்டு    வியாதிகளை   Sorry

வியாபாரிகளை  ஈர்க்க 3 டி டெமோகிராபி, டெமாக்ரஸி டிமான்ட் உள்ள இந்தியநாடு பெரும் முதலீடுகளுக்கு ஏற்ற இடம் எனப் பேசிக் கொண்டிருந்தார், ஜியோ அம்பானியை அடியோடி இந்தியாவை அள்ள விட்டு பி.எஸ்.என்.எல் போன்ற நிறுவனத்தை காங்கிரஸ் கொன்றது போதாது என்று செத்த பாம்பை அடிப்பது போல அடித்துக் கொண்டு...

நீங்கள் எல்லாம் என்ன நாயா பேயா உங்களுக்கு எல்லாம் எதற்கு வாய்? ஒரு கேடாய்...இன்னும் ஏன் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், ஒருவர் முயற்சி செய்தாராம் கைது செய்யப்பட்டு விட்டாரம்
Image result for indian economy


ஜெய் பாரத மாதாகீ ஜே...
தண்ணி இல்லாமல் சாவோம் தமிழ் நாட்டுக்கும் சசி நாட்டுக்கும் ஜே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
one day to decide about jallik kattu verdict.

Image result for indian economy

Monday, January 9, 2017

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

இதையும் எழுதுவேன்: கவிஞர் தணிகை

Image result for alert to hear


காதில் கேட்டது நடைப்பயிற்சியில்: அவளுக்கு ஒரு நாளைக்கு அடி உண்டு,மேல இருக்கற நாலு பேருதான் தூக்கி வைச்சிருக்கான்,வேற சப்போர்ட் இல்ல...ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் சசி கலா பற்றி

ஒட்டுப் பள்ளம் சென்று திரும்பு முன் அவிழ்ந்திருந்த காலணியின் நாடாவைக் கட்ட ஒரு பாலத்தின்ன் மேல் கால் வைத்தேன், அதற்கு முன்பே நமது ஒரு குடிமகன் ஒரு ட்ராக்டரை நிறுத்த முயன்று தள்ளாடிக் கொண்டிருந்தார், அவர் என் பின் வந்து நின்றார், காலணி நாடாவைக் கட்டிக் கொண்டே கவனித்தேன், நம்ப முடியாது, குடி மகன்கள் எதையும் செய்வார்கள் என்பது தெரிந்ததால் சற்று எச்சரிக்கையாகவே இருந்தேன்,

அவர் உடனே ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார், பரவாயில்லை முடிந்தால் செய்வோம் உதவிதானே கேட்கிறார் என நினைத்தேன், ஒரு பத்து ரூபா கொடுங்கள், வீட்டில தங்கச்சி கொத்துமல்லி தழை வாங்கச் சொல்லிச்சி என்றார், ஒரு பைசாக் கூடக் கிடையாது என்றபடி இடத்தை விட்டு நகர ஆரம்பித்திருந்தேன்.உண்மையிலேயே ஒரு பைசாக் கூட எனது கால்பையில் இல்லை என்பதை அவரால் நம்பியிருக்க முடியாது. ஆனால் அதுதான் உண்மை.

அவசியம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும், மகன் படிப்பு செலவை ஏற்க வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன் . 9மாதம் முடிந்து 10 ஆம் மாதம் ஆரம்பம், ஏற்கெனவே இருக்கும் குடல் புண், உயர் இரத்த அழுத்தம், யூரியா எனப்படும் உப்பு வியாதி, மூலம், குடல் வால் தழற்சி, நிறமி அணுக் குறைபாடு அத்துடன் இப்போது சர்க்கரையின் அளவு 300 என்றாகிவிட்டது எனவே நான் அவசியம் நடைப் பயிற்சி செய்தே ஆக வேண்டும்

அப்படி போகும்போதுதான் முன் சொன்ன இரண்டு பேச்சு வார்த்தை ஒன்று கேட்டது , ஒன்று செய்தது..

Related image

மகன் விடுதிக்கு சென்று படித்து வருவதால், உணவில் கவனமில்லாதது, எதைப் போட்டாலும் மறுப்பு சொல்லாமல் சாப்பிட்டது, விருந்துக்கு சென்றது,ஐஸ்க்ரீம், பனிக் குழைவா அதன் தமிழ் பேர், கிடைத்த போதெல்லாம் கேக், சாக்லெட்,பேக்கரி ஐட்டம் இப்படி எல்லாமே சிறுபிள்ளை போல சாப்பிட்டது, நம்மை ஒன்றும் செய்ய முடியாது என இறுமாப்பு காரணம் நல்ல உடற்பயிற்சி செய்பவர் என்ற தெம்பு.

ஆனால் பணி விட்டு திரும்பவே இரவு சுமார் 7 மணி ஆகி விடுவதால், சேலம் ரெயில் நிலையத்திலேயே கிடைக்கும் நேரத்தில் நடைமேடையிலேயே நடைப்பயிற்சி செய்து வருவது ...அது போதவில்லை என்று தெரிந்தது...

உண்ணும் உணவில் அதிகம் இனி அரிசிச் சோறு ஏற்கக் கூடாது, இந்த ஆங்கிலப் புத்தாண்டு முதல் இனிப்பு, சாக்லெட், பேக்கரி ஐட்டம் , விருந்துணவு எதையும் உண்பதில்லை எனத் தீர்மானித்தேன். அதன் படி நடந்து செல்வேன்,

உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, தியானம், இவை இவற்றுடன் உள்ளுக்கு சாப்பிட வேண்டிய சித்த மருந்து ஆகியவற்றை கொஞ்சம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு பல நாட்களாக அமல் படுத்தப்படுகிறது.

முதலில் கைகள் இரண்டும் தோள்பட்டையிலிருந்து பல நாளாக‌ வலியுடன்....பின் முதுகில் படியும் தோள்பை இன்றைய இளைஞர் தூக்குவது போலத் தூக்கிச் செல்வது காரணமாக இருக்கும் என்றார் குடும்ப நண்பர் வேலாயுதம் சென்னை, என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து கிலோ கனம் இருக்கும் எனப் பேசிக் கொண்டோம்

அடுத்து ஒரு சித்த மருத்துவர் சர்க்கரையாக இருக்கும் என்றதற்கு அதெல்லாம் சரியாகவே இருக்கிறது என சமாளித்தோம் பேச்சளவில்

குளிர் காலம் குடிக்கும் நீர் அதிகமாக குடிப்பதால் சிறு நீர் அதிகமாக வெளியாகிறது என அதையும் மறுத்து விட்டோம்,


Related image

முன் பின் செத்திருந்தால் தான் சுடுகாடு தெரியும் என்பது போல சர்க்கரை வியாதி பற்றி நாம் கேள்விப் பட்டிருப்பதுண்டு ஆனால் அனுபவித்ததில்லை எனவே தெரியாது...

ஆனால் நமது பெற்றோர்களுக்கு இருந்தாலே கூட போதும் நமக்கும் வரலாம் என செவிலியர்கள் கூற்று.

எனது துணைவியிடம் நீ கொடுத்த மதிய சாப்பாடு அதிகம் இருந்தது பற்றி அப்போதே சொன்னேன் அதை எமது கல்லூரி குளத்து மீன்களுக்கு இட்டேன் என்றெல்லாம் சொன்னதற்கு பதில், நீங்கள் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் கூட நீங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் இணையத்தில் அமர்ந்திருந்தது காரணம் என்று வந்தது...

ஆக நோயைக் கண்டறிவதே ஒரு வாய்ப்பு, அதன் பின் அதை சுலபமாக வெட்டிச் சாய்த்து விடலாம் என்பது எனது கருத்து.


பெற்றோர்களுக்கிருந்த இந்த நோய் வளையத்துள் எல்லாம் நாம் போகவே கூடாது ,சர்க்கரை வியாதி மட்டும் வரவே கூடாது அது பெரும்பிசாசு என்று சொல்லி வந்தேன் அந்த பிசாசு என்னையும் பிடித்து விட்டது. இது போன்ற வலையத்தில் சிக்காமல் மீளவே முடியாதோ....மகனே நீயாவது எட்டிப் போ கிட்ட வராமல் இந்த வட்டத்துள் எல்லாம் சிக்காமல்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, January 8, 2017

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு + Kavignar Thanigai.

தமிழ் நாடு நல்ல தமிழ் நாடு இந்தியா என்ற திருவோடு- KAVIGNAR THANIGAI.
_______________________________________________________________________________

Image result for RELATIONS collapses in India

சினிமாச் சிறைக்குள்ளே சிக்கி இருந்த நாடு தமிழ் நாடு
ரஜினிகாந்தை வெற்றிடம் நிரப்ப அழைக்குது பாரு
எம்.ஜி.ஆரைப் பார்த்து விசிலடிச்சது நம்ம கூட்டங்க‌
ஜெயலலிதாவுக்கு கிரீடம் வைச்சதும் நாமதானுங்க  ‍....(சினிமாச்...)

Related image


சசிகலாவை சின்னம்மாவாக்கியதும் அவங்கதானுங்க‌

சினிமாவுக்கு சண்டையிட்டா நல்ல பேருங்க‍ _ இங்க‌
 நெஜமாலும் சண்டை போட்டா ஜெயிலுதானுங்க..
சினிமாவுல‌ ஸ்டைலு செஞ்சா சூப்பர்மேனுனுங்க‌
யதார்த்ததில் நல்லது செஞ்சா பாப்பர்தானுங்க!         ....(சினிமாச்...)

வசனம் பேசி வசனம் எழுதி கலைஞர் வந்தாரு_ இங்க‌
வாரிசுங்க வந்ததுமே வளைஞ்சுப்புட்டாரு
இலஞ்சம் வாங்கி திருடிதாங்க நாட்டை ஆளுறான் _ இங்க
சாரயக்காரன் தாங்க கோட்டை போகிறான்               ...(சினிமாச்..)

கோணல் புத்திதாங்க இங்க கொடியை ஒசத்துது
குரங்கு போல தாவி யிங்கே சேட்டை செய்யுது
மானங்கெட்ட பிழைப்புதாங்க மனுசன் நடத்தறான் _‍இங்க‌
மசிரு கூட உசந்து விட்டா வீரம் பேசுது...             ...(சினிமாச்...)

சாதிமத பேதமில்லை சாசனம் சொல்லும்  _ இங்கு
தேர்தலொன்று வந்து விட்டா மெஜாரிட்டி செல்லும்
குடி கெடுக்க அரசியலு அடிவரை செல்லும் _ இங்கு
கோர்ட்படி ஏறிவிட்டா பணமொன்றே வெல்லும்........(சினிமாச்...)

சட்டம் நீதி நேர்மையெல்லாம் பேருலதாங்க  _ இங்க‌
நியாயம்னு பார்க்கப் போனா சைபர்தானுங்க‌
திட்டம் போட்டு திட்டம் போட்டு கடனை வாங்கரறான் _ இங்க\
வட்டம் போட்டு சுரண்டி திங்க கமிஷன் போடறான்     ..(சினிமாச்...)


Related image

ரொக்கமில்லா வர்த்தகமுன்னு மோடி சொன்னாரு_ இங்க‌
ரொக்கமில்லாம போய்ட்டு வந்தா வெக்கமே மிஞ்சும்
மிசினுக்கு எல்லாம் எல்லா நாளும் சொல்லா லீவுதான்
பேங்க் மேனஜரும் கூட்டுக் களவில பங்கு போடவே... (சினிமாச்...)

ஒளிஞ்சு கெடக்கும் உண்மையெல்லாம் வெளியில வரனும் _ இங்க‌
ஓஞ்சு போன தியாகமெல்லாம் மறுபடி எழனும்
குவிஞ்சு கெடக்கும் கந்தல் யாவும் சுட்டுப் பொசுக்கணும்,_ இங்க‌
குன்று போல நாம் எல்லாம் நிமிந்து நடக்கனும்!...((சினிமாச்...)

ஊருக்குப் பத்துப் பேரா ஓடி வாங்களேன்
உலகுக்கால நாட்டுக்காக உங்களையே பூத்து தாங்களேன்
வேருக்கு நீரூற்றி பாத்தி கட்டுவோம் _ இங்க‌
வெறும் பயலுங்க எல்லாரையும் சேர்த்துக் கட்டுவோம்....(சினிமாச்...)

        எப்போதோ கவிஞர் தணிகையால் எழுதப்பட்டு நோட்டீஸ் அடித்து விநியோகிக்கப்பட்டதில் ஒர் நோட்டீஸ் இப்போது கண்ணில் பட அதில் ஒரு இடைச் செருகலுடன் இந்தப் பதிவுக்காகிறது.

Image result for jallikattu marina beach crowd
     

ஜல்லிக்கட்டு வேண்டி வாசன் மதுரையிலும் டி .ராஜேந்தர் கரடிக்கல் மதுரையிலும் இலட்சிய இளைஞர்கள் சென்னை மெரீனாவிலும் எழுச்சி பெற்று கோரிக்கை நோக்கி கோஷம் எழுப்பும்போது இப்படியும் ஒரு கோஷம் மறுபடியும் பூக்கும் தளத்தில் ஏற்கெனவே எழுதியதை பதிவு இட ஆர்வமாகியது...

ஒரு பக்கம் இரண்டு  எரிவாயு சிலிண்டர் வைத்திருப்பார்க்கு நியாய விலைக்கடை அரிசி இனி நிறுத்தம் என்றும், மத்திய அரசின் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனை நடவடிக்கையின் ஒரு நடவடிக்கையாக வங்கியில் பணம் வைத்திருப்பார் மீது இனி வரி கட்டச் சொல்லிப் பாயும் என்று நாட்டின் நிதி மந்திரி சொல்லியுள்ளதும் பாதிப்பு ஏற்படுத்தும் சமுதாயத்தில்...இன்னும் நிறைய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Image result for jallikattu marina beach crowd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.







Saturday, January 7, 2017

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

மோடியின் திட்டம் நடைமுறையில் தோல்வி: கவிஞர் தணிகை

Image result for no cheque book no atm no money no service in banks in india


தப்பில்லாமல் அச்சடிக்க வேண்டும் அல்லவா பணத் தாள்களை, காசோலைகளை, வரைவோலைகளை அச்சுக் கலை என்பது அரிய கலையாயிற்றே....அதற்கு கால அவகாசம் சற்று அதிகம் பிடிக்கும்தான் அதெல்லாம் மோடிக்குத் தெரிய வாய்ப்பில்லை...உடனடியாக எல்லாமே கேட்டால் அந்த தேவைக்கான ரொக்கம், காசோலை புத்தகம், எல்லாம் மோடி மஸ்தான் வித்தையிலா விளைந்து விடும்...? வெட்கம்...பழைய 100 ரூ பணத்தாள் எவ்வளவோ பரவாயில்லை இப்போது அச்சடித்துள்ள புதிய 500, 2000 தாள்களுக்கு பதிலாக...

Image result for no cheque book no atm no money no service in banks in india

வங்கிக்கு சென்றிருந்தேன். அவர்களுடைய டிவிஷனிலிருந்து மேலாண்மை பிரிவிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது 2ஆம் தேதியே.உங்களுக்கு காசோலை புத்தகம் கிடைக்க தயார் நிலையில் உள்ளது வங்கிக் கிளையை அணுகச் சொல்லி, ஆனால் இன்று 7 ஆம் தேதி சென்று கேட்டால் இன்று விட்டு விடுங்கள் வேறு எப்போதாவது வாருங்கள், ஒரு மாதமாவது ஆகும், அப்படித்தான் செய்தி அனுப்புகிறார்கள், கூரியர் வரவில்லை, தேடிப் பார்க்க வேண்டும், இன்று விட்டு விடுங்கள் ப்ளீஸ் என்கிறார்கள் மருத்துவ சேவைப் பணியில் உள்ள எனக்கோ முதல் சனிக்கிழமை மட்டுமே விடுமுறை மற்ற நாட்கள் எல்லாம் வேலை நாட்கள் வங்கிக்கு செல்ல முடியாது. ஏன் எனில் உங்களுக்கேத் தெரியும் 2 ஆம் 4 ஆம் சனிக்கிழமை அவர்களுக்கு விடுமுறை,நமக்கு வேலை நாள்தான்,ஏ.டி.எம்கள் இன்னும் சாதாரண நிலையை எட்டவில்லை.எல்லாம் 24 மணி நேரமும் பூட்டியே கிடைக்கிறது ஒரு காலத்தில் 24 நேரச் சேவை என்று வைத்த விளம்பர போர்டு வாய் கிழிய இளித்தபடி கிடக்க...
Related image


மேலும் அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை வந்து விடும் அவர்களுக்கும் விடுமுறை நமக்கு சனி, ஞாயிறு, திங்கள் 3 நாளும் விடுமுறை, அரசு விடுமுறையான குடி அரசு தினம் போன்றவை அவர்கள் நமக்கு குடிமகன்களுக்கு யாவர்க்கும் விடுமுறை இப்படி இருக்க... கட்ட வேண்டிய கடனை, கட்டணத்தை பெற்றோர் கட்டித் தானே ஆக வேண்டும், கணக்கு மாறுதல் செய்து கொள்ளலாம், நெட் பேங்கிங் செய்து கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வது காதில் விழுகிறது. ஆனால் அவை யாவுமே அந்தளவு இன்னும் எல்லா இடங்களிலும் சென்று சேரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இது போல பல வாடிக்கையாளர்கள் நெருடல்களை சுமந்திருந்தார்கள்,அந்த அலுவலரும் நல்ல மென்முகம் உடைய பணியாளர்தான், ஆனால் அவரால் சமாளிக்க முடியவில்லை சற்று தடித்த வார்த்தைகளை பயன்படுத்துமளவு அவருக்கும் முடியாமை....எல்லாமே மோடி மஸ்தான் விளைவு.

எப்படியோ நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது பணத்தை எடுக்க காத்திருக்காமல் இருந்தால் சரி என்ற மனநிலை பணம் கிடைத்தார்க்கு, காசோலை இருந்தால் கல்லூரிக்கு கட்ட வேண்டிய நிலுவைத் தொகை கேட்பு வருவதற்குள் தயார் நிலையில் இருக்கலாமே என்ற தற்காப்பு உணர்வு நமக்கு...
Related image


ஆனால் அன்பர்களே நான் இன்னும் கண்கூடாக கண்டு வருகிறேன், ஓமலூர், வேம்படிதாளம், நல்லாம்பள்ளி போன்ற சில புறநகர் பகுதிகளில் அல்லது செமி அர்பன் ஏரியாக்களில் அல்லது கிராமங்களில் ஒரே ஒரு வங்கி இருக்கும் இடங்களில் எல்லாம் நீண்ட வரிசை காத்திருப்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது... வருத்தப்பட வேண்டியதாயும் அனுதாபப் படவேண்டியதாயும்.

ஒரு நண்பர் எழுதுகிறார்,சென்ற இடமெல்லாம் ரொக்கம் இல்லையெனில் நாறி நட்டாற்றில் அனாதையாக விடப் படுவோம் என்று, ஸ்வைப் வைத்து ஸ்கிராச் செய்தால் இவர் கணக்கில் குறைந்து விடுகிறதாம், அவர்கள் கணக்கில் ஏறாமல் அவர்கள் பணம் ரொக்கம் கேட்கிறார்களாம், நல்ல வேளை தயாராய் எடுத்துச் சென்று இருந்ததால் தப்பித்தேன் என்கிறார், வங்கி மேலாளரைக் கேட்டால் அந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு வரும் அனால் இப்போது வராது சில பல நாட்கள் ஆகும் என்கிறாராம்.

நிலை இப்படி எல்லாம் இருக்க எனக்கு காரசாரமாக எழுத மனமில்லை. மத்திய, மாநில ஆட்சி, நிலவரம், சசி மோடி  சேகர் ரெட்டி போன்ற ஆட்கள், வங்கித் திருடர்கள் மேலாளர்களாய் இருந்தவர்கள்,இடைத்தரகர்கள்,ஓ.பி இவர்கள் பற்றி எல்லாம் சொல்ல எண்ணைல்லை அது பற்றி அதன் பக்கமே திரும்ப ஆர்வமில்லை. எனக்கு கிடைக்கும் நேரம் குறைவாகத் தெரிகிறது...உடல் பிணி சார்ந்து குடும்ப உறவுகள் பிரச்சனைகள் சார்ந்து,,, நிறைய நேரம், செலவாகிக் கொண்டு இருக்கிறது. எனவே இந்தக் காலக் கட்டத்தில் இவ்வளவுதான் முடிகிறது எனவே மிகக் குறைவான வருகையாளர்தான் எனது வலைப்பூவுக்கு வருவதை இந்த நாளடைவில் பார்க்க முடிகிறது...அது எனக்கும் வருத்தமே...தோனிக்கும் வயது ஏறிவிட்டது. நல்ல முடிவெடுத்து விட்டார். மாமனிதராகி விட்டார். அட எவ்வளவு ஆண்டுகள் தான் மனித உடல் நம்மோடு ஒத்துழைக்க முடியும்?

Image result for no cheque book no atm no money no service in banks in indiaRelated imageRelated image

மாலை 7 மணிக்கும் மேல் உடல் சோர்ந்து ரயில் பயணம் முடித்து பணி முடித்து வந்து ஏதோ என்னால் எழுத முடிந்தால் உண்டு , உறங்கிய நேரம் தவிர செய்து வருகிறேன்.

ஒத்துழைப்பை நல்குவார்க்கு நன்றியும் வணக்கமும்.

இவண்


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
அன்புடன்.



Friday, January 6, 2017

அறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்: கவிஞர் தணிகை

அறிவியல் விந்தைக்குள் ஒளி(ர்)ந்திடும் மனித ஆற்றல்: கவிஞர் தணிகை


Image result for isro 103 pslv - c37
103 செயற்கைக் கோளுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி  சி 37 பிப்ரவரியில் விண்ணில் பாயும்,மனித உடலில் இது வரை தெரியாமல் இருந்த குடல் உறுப்பு அடி வயிற்றில் கண்டறிந்தது,விண்வெளி ஆய்வுக் கூடத்தை வியாபார நோக்கில் பயன்படுத்தல்,359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் தொலைவில் கேலக்ஸி என்னும் நட்சத்திரத் தொகுதி,வானின் வடக்குப் பக்கத்தில் அதிகாலையில் ஒரு வால் நட்சத்திரத்தை தென் கிழக்கில் பார்க்கலாம், செவ்வாயில் 2030க்குள் குடியேற வீடு கட்ட ஆரம்பம், இப்படி அடுக்கடுக்கான அறிவியல் விந்தை செய்திகள் கணக்கிலடங்காமல் கொட்டிக் கொண்டிருக்கின்றன கடந்த இந்த 2 நாட்களில்.

Image result for isro 103 pslv - c37


எண்ணற்ற அறிவை பயன்படுத்தும் ஆற்றல் பெற்ற மனிதம் மேலும் மேலும் அறிவியல் அறிவுடன் வளர்ந்தபடியே இருக்கிறது.

இதை கடந்த இரண்டு நாளாகவே படிக்க படிக்க வியப்பெய்தினோம். இன்னும் மனித உடலைப் பற்றியே அதிகம் அதுவும் முழுதாக தெரியவில்லை என்னும் ஒரு அறிதலை இந்த குடல் உறுப்பு அடிவயிற்றில் கண்டறிந்தது நமக்கு கொடுக்க...

Image result for galaxy found 359 million light years away

359 மில்லியன் ஒளி ஆண்டுக்கும் அப்பால் உள்ள நட்சத்திரத் தொகுதியை கண்டிடும் மனித ஆற்றல், மேலும் செவ்வாயில் வீடு கட்டும் பணி ஆரம்பம்,
நமது தற்போது இருக்கும் விண்வெளி ஆய்வுக் கூடம் அதன் பயனை இழந்த பின் சீனாவின் விண்வெளி நிலையம் பயன்படும் என்றும் அதை விட வியாபார நோக்கத்தில் கூட தனியார் விண்வெளிக்கூடம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் இப்படி ஏராளமான அறிவியல் நடப்புகள்.

Image result for galaxy found 359 million light years away

இதை எல்லாம் பார்க்கும்போது இதை எல்லாம் படிக்கும்போது மனித ஆற்றலை கண்டு வியப்பதா, அல்லது மனிதம் எவ்வளவு மீச்சிறிது என எண்ணி அடங்குவதா என்ற கேள்விகள் ஒன்றுக்குள் ஒன்றாக...கலந்தே காணப்படுகிறது.

அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாட்டை விட மனித குலத்தை படிப்படியாக பல மடங்கு ஏற்றி வைக்கும் இது போல கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்ட மாமனிதங்களுக்கு நன்றி சொல்வோம் என்றும்.

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, January 2, 2017

அச்சமின்றி: கவிஞர் தணிகை

Image result for achamindri wiki

அச்சமின்றி: கவிஞர் தணிகை

30 டிசம்பரில் சென்ற ஆண்டில் வெளியான அச்சமின்றி ஒரு நல்ல படம்தான். பார்க்கலாம். கல்வி சார்ந்த முடங்கல்களை அலசுகிறது. சரண்யா அம்மா வேடம் விட்டு வில்லியாகி நீதிமன்றத்தில் சவால் விடுகிறார் சவுண்ட் பார்ட்டியாக...விஜய் வசந்த் என்னும் வசந்த் அன் கோ வசந்தகுமாரின் வாரிசு சினிமாவில் பிரபலமடைய புகழடைய இம்முயற்சி பயன் பட்டிருக்கிறது.

சமுத்திரக் கனி என்றாலே கல்வி ஏய்ப்பு, போராட்டம் என்ற முத்திரை குத்தப் பட்டு விட்டாலும் காரண காரியத்தோடு பொருள் பொதிந்த படம் என்பதால் பார்க்க முடிகிறது.

Image result for achamindri wiki

ஆரம்பத்தில் மந்திரியாக நடிக்கும் இராதா இரவியை நாம் அனைவரையும் போல சந்தேகிக்கிறோம். வில்லனாக. ஆனால் வில்லி சரண்யா கொஞ்ச நேரம் ஆனாலும் நல்ல நடிகையால் எந்த பாத்திரத்தை வேண்டுமானாலும் செய்ய முடியும் என ரா ரா சந்திரமுகி ஜோதிகா போல  பச்சைக்கிளி முத்துச்சரம் போல கடைசியில் வில்லியாகி தமது சினிமா கேரீரை முடித்துக் கொண்டது போல சரண்யா முடித்துக் கொள்கிறாரா, முகம் எல்லாம் முதுமை காட்டுகிறது அல்லது ஜோதிகா போல 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்பது போல திரும்பி விடுவாரா என்பதை பொறுத்துப் பார்க்கலாம்

கதைக்கு வருவோம்: சமுத்திரக் கனி மணமுடிக்கும் ஊமைப் பெண்ணை கொன்று விடுகிறார்கள், அந்த ஊமைப் பெண்ணின் தம்பி மாநிலத்தில் முதல் மாணவராக வந்தவரும் அடித்துக் கொல்லப் படுகிறார். தேர்வன்று கேள்வித்தாளை வெளியிடுவதிலிருந்து தடுத்து நிறுத்தும் தலைவாசல் விஜய் மாவட்ட ஆட்சித் தலைவர் கொல்லப் படுகிறார். நன்றாகப் படிக்கும் பிக் பாக்கெட் அடிக்கும் விஜய் வசந்தின் காதலியின் தெரிந்த பெண் முதல் மதிப்பெண் பெற வேண்டியவர் மருந்து குடித்து மருத்துவ மனையில் கிடக்க, காதலி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க, அவரையும் கொல்ல முயல...கொலைகாரக் கும்பலின் முக்கியக் குற்றவாளியின் பர்ஸை விஜய் வசந்த் அடித்துவிட அவரையும் கொல்லத் திட்டமிடுகிறது கூட்டம், நண்பராக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமுத்திரக் கனியை இடைஞ்சல் என என்கவுண்டர் செய்யத் துடிக்கிறார். இதில் இருந்து பிக்பாக்கெட் விஜய் வசந்த், சமுத்திரக் கனி, விஜய் வசந்த்தின் காதலி, சமுத்திரக்கனியின் டிரைவர் ஆகியோர் எப்படி தப்பித்து நீதியை நிலை நாட்டுகிறார்கள் என்பது கதை.

கடைசியில் சிறிது நேரம் ஆனாலும் வழக்கறிஞர் ரோகினி நன்றாக டயலாக் டெலிவரி செய்கிறார். இராதா இரவி வழக்கம் போல தமது பங்கை சிறப்பாக செய்து நமது சந்தேகம் போக்கி ஒரு நல்ல மந்திரியாக இருக்கிறார்.

ஆனாலும் எல்லாம் மக்களிடம் தாம் மடமை இருக்கிறது அதுதான் சரியான  அரசுப் பள்ளிகள் அமையாமைக்கும், தனியார் பள்ளிகள் எழுச்சிக்கும் காரணம் எனத் தெளிவாக விளக்கி இருக்கும் படம்.

Image result for achamindri wiki

ராஜபாண்டி பாண்டி ராஜை நினைவு படுத்துகிறார். வாழ்த்துகள். சிறிய அளவு பட்ஜெட் படமானாலும் கடைசி வரை ஆர்வத்துடன் பார்க்க வைக்கிறது. பிக்பாக்கெட் ரோல் செய்யும் விஜய் வசந்த் பணக்கார வீட்டுப் பையன் கதாநாயகனாக முயற்சித்திருக்கிறார் வாழ்த்துகள். ஆனாலும் என்னவோ ஒன்று குறைகிறது அது என்னவென்று அவர் பார்த்தறிந்து அடுத்த படத்திலிருந்து சரி செய்து கொண்டால் முத்திரை பதிக்கலாம். நூற்றுக்கு 40 கொடுக்கலாம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.